பக்கங்கள்

சனி 19 2015

முப்பெரும் மதங்களின் படைப்புக் கதை

ஒலகத்தில் முப்பெரும் மதங்களாக மூன்று மதங்கள் இருக்கின்றன் அவற்றில் முதல் வரிசையில் இருப்பது கிறிஸ்தவ மதம் இரண்டாவது வரிசையில் நிற்பது முஸ்லிம் மதம் மூன்றாவதாக இருப்பது பிராமண மதம். இந்த மூன்றும்.  இந்த உலகம், அதில் வாழும் உயிரிணங்கள் மற்றும் மனிதர்கள் எவ்வாறு படைக்கப்பட்டன என்று அதனதன் தரத்துக்கு ஏற்ப அதாவது புளுகுவதில் ,  எப்படி கதை விட்டு..கடை விரித்தன . என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..

படம்-
1.  கிறிஸ்துவம்--பைபிளின்படி....... சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர். கடவுள்  இவ்வுலகை படைத்த மூன்றாம் நாளில் தாவரங்களை ப்படைத்தார். ஐந்தாம் நாளில் மீனினங்களை படைத்தார். ஆறாம் நாளில்   விலங்கு இனங்களையும்  பாலூட்டிகளையும் படைத்தார். ஏழாம் நாளில் கடைசியாக மனிதர்களை படைத்தார். களி மண்ணலிருந்து ஆதாமையும் அவனது விலா எலும்பிலிருந்து ஏவாளையும் படைத்தாராம்.



படம்-https://ta.wikipedia.org/s/1fa
2.இஸ்லாம்.... குர்...ஆன்..படி....557 ஆண்டுகளுக்குப்பின் அளவற்ற அருளானனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லா  ...ஆறு கட்டங்களாக இவவுலகை படைத்தார். சுட்ட களி மண்ணிலிருந்து ஆதாமை உருவாக்கினாராம்



படம்-www.eelamview.com

3.பிராமணர்களின் பார்ப்பன..மத புர்ர்ராணங்களின்படி.... ஈரு ஏழு லோகங்களையும் அவற்றிலுள்ள உயிரிணங்களையும். நால்வருண மனிதர்களையும் பிரம்மா படைத்தாராம்.  இதில் பிரம்மாவை படைத்தது விஷ்னு என்றும் அந்த விஷ்னுவை படைத்தது சிவன்தான் என்றும் அதாவது கடவுளையே படைத்தவர்கள் இன்னாரென்று கோஷ்டி பூசல் நடப்பதால்.. தங்களுக்குள் கோஷ்டி பூசல் இல்லை என்று மனிதர்களுக்கு தெரிவிப்பதற்க்காக  அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டதே என்று மு்ம்மொழிகின்றனர்






வெள்ளி 18 2015

வந்தால்.....எல்லாம் மொத்தமாக வரும்............!!!!!!!!




மற்றவர்களுக்கு எப்படியோ..

அவருக்கு வந்தால்
எல்லாம் மொத்தமாக
வந்து சேரும்..

நோயில் விழமாட்டார்
விழுந்தால் பலநாள்
எழுந்திரிக்க மாட்டார்

பல நாள் கவனமாக
இருப்பார் அப்படியும்
ஒருநாள் கவனம்
மறந்து படு
அவஸ்தை படுவார்.

சிலர் தலைவலிதான்
பயங்கரம் என்பர்
வயித்துவலி வந்தவர்
வயித்தவலி  தான்
மோசமானது என்பார்
இப்படி ஒவ்வொரு
வலியும் அவரவர்க்கு
பிரதானமாக இருக்கும்
சிலருக்கு  எல்லாம்
மொத்தமாக வரும்

அந்தச் சிலரில்
இவரும் ஒருவர்
வராமல் வரும்
நோக்காடு மொத்தமாய்
வருவது போல்
செலவுகளும் மொத்தமாய்
வந்துச் சேரும்.

உறவினர் நண்பர்களின்
காதுகுத்து விழா.
பூப்புனித நீராட்டு
விழா.. புதுமனை
புகுவிழா..திருமணவிழா
இதோடு சேர்ந்து
தொழில் செய்யும்
இயந்திரத்தின் ரிப்பேர்
மூன்று டூவீலரின்
பொருள் மாற்று
சர்வீஸ் செலவு

நிரந்தரச் செலுவுகளுடன்
இவைகளும் மொத்தமாய்
வந்து சேறும்...
இவைகளை சமாளிக்க
இவர் வேலை
செய்த கூலியின்
காசு.துட்டு
பணம் மட்டும்
மொத்தமாய் வந்து
சேர்ந்ததாக சரித்திரம்
இல்லை.. ஏனென்றால்.
ஊரான் நாட்டுக்காரன்
மொத்தமாய் அள்ளி
செல்ல அனுமதிக்கும்
ஆளுவோர் நாடாக
இருக்கும் போது.....



வியாழன் 17 2015

“சோறு விற்பனைக் கடை வந்த வரலாறு"..

தலைப்பைச் சேருங்கள்

அம்மாத்தாய் என்ற பெயரைச் சுறுக்கி “அம்மா மெஸ்என்று பெயரிட்ட சோற்று விற்பனைக் கடையை கவி நாட்டு  பேரரசர் திறந்துவைத்து உரையாட்டிய செய்தியை பார்த்தபோது.. பெரியார் சிலைக்கு எதிரே உள்ள ஒரு சோறு  என்ற  அசத்தல் பெயரிட்ட சோறு  கடையையும் பார்க்க நேரிட்டது.

ஆரம்பத்தில் சோறு விற்பனை கடை பற்றி படித்தது என் நிணைவுக்கு வந்தது...வந்த நிணைவு   மறந்துவிடும் என்பதால் இந்தப்பதிவு....

விசய நகர பேரரசர் காலம் தொடங்கிய காலத்திலிருந்து தமிழ்நாட்டு சத்திரங்களில் சோறு விற்கப்பட்டு..பின்னர்ஆங்கிலேயர்  ஆட்சிக்காலத்தில் ஹோட்டல் எனப்படும். உணவு விற்பனைக் கடைகள் தொடங்கப்பட்டன.

கடந்த நூற்றாண்டின் பிற்ப்பகுதியில்தான் நகரங்களிலும் கிராமங்களிலும் காசுக்கு சோறு விற்கும் கடைகள் உண்டாகின.

அப்பொழுதுகளில்கூட நாலுவர்ணசாதி மதத்தைச்சேர்ந்த பிராமணர்களும் அவர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள உயர் சாதியினரும், முஸ்லீம் மத்த்தைச் சேர்ந்தவர்களுமே..தங்கள் தங்கள் சாதியினருக்கு மட்டுமே உரிய சோற்றுக் ( உணவங்கள்) கடைகளை நடத்தி வந்திருக்கின்றனர்.

போலிச் சுதந்திரத்துக்குப் பின்னரும் பிராமணர்கள் நடத்தும் கடைகளில் பிராமணர்கள் மட்டுமே உண்ணும் கடைகள் இருந்தன.

இவற்றை எதிர்த்து பெரியாரும், பெரியாரின் தொண்டர்களும் விடப்பிடியான மறியல், மற்றும் போராட்டங்கள் செய்த பின்னர்தான. சாதிக்காரர்களுக்கான  சோறு விற்கும் அவ்வழக்கம் ஒழிக்கப்பட்டது..


நனறி! பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களின் “ பண்பாட்டு அசைவுகள்என்ற நூலிருந்து..


புதன் 16 2015

குடிகெடுத்த புனிதவதியின் வரலாற்றை மறக்காமல் வந்து சொன்ன அண்ணன்...


முன்கதை படிக்க---...என்னப்பா.....நடக்குது...நாட்டில...

இந்தா வந்து சொல்றேன்பா..என்று சொல்லிவிட்டு போன அண்ணன் 

பின்னர் ஒருநாள் ..அவரின் கட்சி தலைவர். கன்டிசன் பெயில் முடிந்து சென்ற பிறகு வந்தார். கூட்டமாக கூடியிருந்த தம்பிகளிடம் வந்து நின்றார். அதில் ஒரு தம்பி அண்ணன் சொன்னதை மறக்காமல்

“அண்ணே...குடிகெடுத்த  புனிதவதியின்  வரலாற்றை சொல்றேன்னு  சொன்னிங்களே  ...அண்ணே.. என்றார்.

ஆ..... அந்த புனிதவதியைப்....பத்தின வரலாறுதானே.......??? என்றார்.

ஆமாண்ணே..என்றனர்..தம்பிமார்கள்.

நான் சொல்வதை விட உங்களுக்கு கூடுதலாக வரலாற்றை கொண்டு வந்திருக்கேன் தம்பி மார்களே...!!  என்று கூறியபடி ...  தன் கையில் மடித்து வைத்திருந்த  புத்தகத்தை காட்டி இந்த புத்தகமே உங்களுக்கு புட்டு புட்டு வைக்குமடா..என்றுவிட்டு அந்தத் தம்பிமார்களில ஒருவனை... அந்தப் புத்தகத்தை கொடுத்து.... இதிலிருந்து  ...சத்தமா  படிடா... என்றார்.

“புதிய ஜனநாயகம்” என்ற அந்தப் புத்தகத்தை வாங்கிய தம்பி அண்ணன் சொல்லிய பகுதியிலிருந்து    சத்தத்துடன்  படித்தான்.

puthiya-jananayagam-september-2015
தமிழகத்தில் பொறுக்கி அரசியலின் பரிணாம வளர்ச்சி !

அண்ணா-கருணாநிதியின் வெறும் சினிமா கவர்ச்சி அரசியலாகச் சீரழிந்து, இறுதியில் எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா கும்பலின் பிழைப்புவாதப் பொறுக்கி அரசியலாகப் பரிணமித்தது. இப்போது அதை சாராயம்-கறி பிரியாணி-ரூபாய் நோட்டு பரிமாறுவதும், ரிக்கார்டு டான்சு, சினிமா நடிக-நடிகைகளின் காமெடி, கவர்ச்சிப் பேசசுகள் மூலம் தேர்தல் பிரச்சாரம் என்று மக்களது ஆதரவைத் திரட்டுவதும், இவற்றுக்கு ஏற்பாடு செய்யும் பிரமுகர்களையே சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் மேயர்களாகவும் அமைச்சர்களாகவும் நியமிப்பதும், போலீசு, அரசு அதிகாரிகள், நீதிபதிகள் இலஞ்ச-ஊழலில் தாராளமாக மிதக்க அனுமதிப்பதும், இவர்களையெல்லாம் வைத்துத் தேர்தல் தில்லுகளில் தன்னை யாரும் வெல்ல முடியாதவாறு பிழைப்புவாதப் பொறுக்கி அரசியலை ஜெயலலிதா உச்சத்துக்குக் கொண்டுபோய்விட்டார்.


ஜெயா வழிபாடு
படம்-வினவு

பழைய சினிமாக்களில் எம்.ஜி.ஆர்., என்.டி.ஆருடன் அரைகுறை ஆடையுடன் தான் போட்ட கவர்ச்சி ஆட்டங்களைக் கூச்சநாச்சமின்றி இன்னமும் ஒளிபரப்பித் தனது ரசிகர்களுக்குக் கிளுகிளுப்பூட்டிவரும் புரட்சித் தலைவியை இளங்கோவனுடைய பேச்சு அவமானப்படுத்தி விட்டதாகக் கூறித் தமிழகமெங்கும் மேற்படிக் கூத்துகள் நடக்கின்றன. ஆனால், இந்த ஜெயலலிதா என்னவெல்லாம் பேசி இப்போதைய நிலைக்கு வந்தார் என்பதை மக்கள் மறந்துவிட்டார்கள் என்ற துணிச்சலில் இப்படி ஆட்டம் போடுகிறார்கள்.
எம்.ஜி.ஆர்., ஜெயாவின் அரசியல் தலைவர் என்பதற்கு மேல் என்ன உரிமையில், உறவில் அவரது பிண வண்டியில் ஏறித் தலைமாட்டில் உட்கார்ந்து அடாவடி செய்தார்!

அவரோடு சேர்த்து உடன்கட்டைப் பேச்சுப் பேசினார்! எம்.ஜி.ஆருக்கு பாலில் விஷம் கொடுத்துக் கொன்றதாக ஜானகி மீது பழிபோட்டார்;

எம்.ஜி.ஆரின் முன்னாள் நாயகி சரோஜாதேவியை மோர்க்காரி என்று வசைபாடினார்.

‘இராஜீவைக் கொன்ற குற்றவாளி’ கருணாநிதியுடன் தேர்தல் கூட்டுவைத்த சோனியாவைப் பத்தினியா என்று கேட்டு, அவரது இத்தாலி பூர்வீகத்தைக் கேலி செய்தார்.

சட்டமன்றத்தில் தன்னைத் தி.மு.கழகத்தினர் மானபங்கபடுத்தி விட்டதாகத் தலைவிரி கோலத்துடன் நாடகமாடினார் அந்தப் புனிதவதி,

தன் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் போடச் செய்தார் என்பதற்காக உயர் நீதிமன்ற வளாகத்துக்குத் தனது மகளிரணியை ஏவிவிட்டு, சுப்பிரமணியசுவாமி முன்பாக ஆடையைத் தூக்கிக் காட்டி, ஆபாசக் கூச்சல் போடச் செய்தார்;

சொத்துக் குவிப்பு வழக்குக்கு அனுமதியளித்தார் என்பதற்காக ஆளுநர் சென்னாரெட்டி தன்னை மானபங்கப்படுத்த முயன்றதாகப் பகிரங்கமாகப் புளுகினார்.

இப்படித் தன்னைத்தானே இழிவுபடுத்திக் கொள்ளும் மாதரசியை இளங்கோவன் அவமானகரமாகப் பேசிவிட்டார் என்று கொந்தளித்துப் போகிறார்கள், அவரது கூலிப்படையினர்.
பணம் வாங்குவதற்காகவே தம்மைக் கற்பழித்துவிட்டதாக போலீசு மீது புகார் கூறுகிறார்கள் என்று வெட்கமின்றி, மனச்சாட்சியின்றி தமிழ்ப் பெண்கள் மீது பழிபோட்டவர்தான், இந்த ஜெயலலிதா!

இதையெல்லாம் நினைவு கூர்ந்து சொல்லுங்கள்! எதையாவது செய்து, யாரையாவது அவதூறாகப் பேசி தன் மீது கவனத்தை ஈர்த்து அரசியல் ஆதாயம் அடைவது என்கிற ஜெயாவின்

அதே அதிரடிப் பொறுக்கி அரசியல் உத்தியைத்தானே இளங்கோவன் கையிலெடுத்துக் கொண்டுள்ளார்! இதற்காக நாமோ தமிழக மக்களோ ஏன் அக்கறைப்பட வேண்டும்!


தம்பி ..படித்து முடித்தவுடன்... தயாராக கையில் வைத்திருந்த தேநீரை கொடுத்து குடிக்க வைத்த அண்ணன். தம்பிகளை பார்த்துக்  சொன்னார்.

மையில நணச்சு பேப்பரில் அடிச்சா மறுத்து பேச ஆளில்லை...மாதிரி இல்லப்பா...இந்த புத்தகத்துல படிச்சது ...அம்புட்டும் உண்மையான  20,21 நூற்றாண்டு நடந்த வரலாறுப்பா... என்று சொல்லிவிட்டு... நகர்ந்தார்.....

கூட்டத்திலிருந்து  ஒரு தம்பி சொன்னார்..

டேய்.....இது வரலாறு இல்லடா.........குடிகெடுத்த  புனிதவதியின்  அசிங்கம்டா ........?ஃஎன்றார்.

செவ்வாய் 15 2015

நாட்டுக்காக பிள்ளைகளை பணயக்கைதியாக கொடுத்த திப்புவும் -தன் சுயநலத்துக்காக நாட்டை கூறு போடும் இன்றைய சாதி,மத வெறியர்களும்.

படம்-

வினவு



சில வருடங்களுக்கு முன் அரசு தொல்லைக் காட்சியில் “மாவீரர் திப்பு சுல்தான்” என்ற தொடர் ஒளிபரப்பின் போது இது ஒரு கற்பனை கதை என்று டைட்டில் காட்டப்பட்டது.

இப்படியாக .உண்மை தேச பக்தர்களின் வரலாற்றை இருட்டிப்பு செய்தவர்கள் ஏகாதிபத்திய கொடுங்கோண்மையை விட மிகக் கொடுங்கோலர்களாக
இருந்தவர்கள் சங்க பரிவாரங்கள்...

இன்று அந்த சங்க பரிவாரங்கள்  ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து குத்தாட்டம் போடுகின்றன..தொலைக்காட்சிகளில் காட்டப்படும்கட்டுக்கதைகளும் புராண மாய்மலங்களையும் மாபெரும் வரலாற்று  வீரகாவியம் என்று பெயர் சூட்டப்படுகின்றன.

குரங்கிலிருந்து மனிதனாக மாறியபின்  17.18, 19 நூற்றாண்டுகளில்  பத்துமாதம்    கருவிலிருந்து வெளியே வந்த மனிதனுக்கு இருந்த அறிவை விட 20,21ம் நூற்றாண்டு மனிதனுக்கு அறிவும் ஆற்றலும் அதிகமுண்டுஇ..

அந்த அறிவையும், ஆற்றலையும்... குரங்கின் நிலைக்கு இழுத்துச் செல்கின்றன் சங்பரிவாரங்கள்.... அவற்றில் ஒன்றுதான். ஒரு நடிகனை தேச பக்தன் என்று விளித்துரைத்து... ஒரு உண்மையான தேச பக்தன் வேடத்தில் நடிக்கக்கூடாது... நடிக்கமாட்டார். விளிம்புவது..

இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?.. என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர்.திப்பு.  தென்னந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு மிகப் பெரும் உந்து சக்தியாக திகழ்ந்தவர் திப்பு.

ஆங்கிலேயனின் காலை நாக்கி சொகுசாக வாழ்ந்து கொண்டு இருந்த இந்து  பேஜ்வா மன்னர்கள்  நிலங்களை பறித்தெடுத்து நிலமற்ற விவசாயிகளுக்கும்
தலித்துக்களுக்கும் பங்கிட்டு கொடுத்தவர் திப்பு

இந்த மண்ணில் முதன் முதலாக  சுதந்திரம்,சமத்துவம் , சகோதரத்துவம் என்ற சொற்களை உதிர்க்கத் செய்தவர்.திப்பு..

 மேலும் படிக்க..-திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி !


தேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல். நாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.



திப்புவை அவமதிக்கும் துரோகச் செயல்கள்.

திங்கள் 14 2015

ஒரு நிகழ்வும்...ஒரு கோரிக்கையும்

புதியபாமரன்
கள்ளிக்காட்டு இதிகாசம் 23 மொழிகளில் மொழிபெயற்கப்படுகிறதாம். வரிக்கு வரி தேவரினத்தைப் போற்றிப்பாடி, 
தன் குடும்பத்துப் பெருமைகளையும் கவுரவங்களையும் பேசிச் சொறிந்துகொண்டிருக்கும் வைரமுத்து. 

இதே 'இதிகாசத்தை' பெருமாள் முருகன் எழுதியிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதையும் இங்கே யோசிக்கவேண்டி இருக்கிறது!

புத்தகம் தடை செய்யப்பட்டிருக்கும்!


வினாயகரின் யமஹாவாக இருப்பது பெருச்சாளி. பசுவதைச் சட்டம் கொண்டுவந்ததைப்போல பெருச்சாளிவதைச் சட்டம் கொண்டுவந்து பெருச்சாளி இனத்துக்கு தீங்குவராமல் பாதுகாக்க மோடி அரசு ஆவன செய்யவேண்டும்.

ஞாயிறு 13 2015

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் முதல் குடிகார நகரம்..

Prpc Milton Jimraj என்பவர் Jim Raj Milton மற்றும் 2 பேர்ஆகியோருடன்


மரணத்தை நோக்கி தவணைமுறையில் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்!

தமிழ்நாட்டிலேயே அதிகம் குடிப்பது திருப்பூரில்தான். வருடத்துக்குக் கிட்டத்தட்ட 1,100 கோடி ரூபாய்க்குக் குடிக்கிறார்கள். ஏன் இப்படி? ஏனென்றால், திருப்பூரில் தொழிலாளர்கள் அதிகம். அவர்களின் கைகளில் பணப்புழக்கமும் அதிகம். குறிப்பாக வார இறுதிகளில் திருப்பூரின் குடி எகிறுகிறது. அதிகபட்ச நிறுவனங்களில் சனிக்கிழமைதோறும் சம்பளம் போடுகின்றனர். வாரச் சம்பளத்தை வாங்கிக்கொண்டு குடிக்க ஆரம்பித்தால், ஞாயிறு முழுக்கக் குடிதான். திங்கட்கிழமை வரையிலும் இந்தக் குடி நீள்கிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் குடித்துவிட்டு திங்கட்கிழமைகளில் வேலைக்கு வருவது இல்லை. அன்றும் விடுமுறை போலவே இருக்கிறது என்பதால், திங்கட்கிழமைக்கு 'சின்ன ஞாயித்துக்கிழமை’ என்று திருப்பூரில் பெயர்.

'இதை ஞாயிறு, திங்கள்னு பார்க்கிறதைவிட, கையில காசு தீர்ந்துபோற வரைக்கும் குடிப்பாங்கன்னு புரிஞ்சுக்கலாம். அதுக்காக வார சம்பளத்தைப் பத்திரமா வெச்சுக்கிட்டு வாரம் முழுக்கக் கொஞ்சம் கொஞ்சமா குடிக்கிறது இல்லை. அந்த ரெண்டு நாள்ல வெறியோட குடிச்சுட்டு செவ்வாக்கிழமை வேலைக்குப் போறது... அடுத்த அஞ்சு நாளைக்கு வேலை பார்த்துட்டு மறுபடியும் குடி. அதாவது இவங்க வேலை பார்க்கிறதே குடிக்கத்தான்னு ஆயிடுச்சு...' என்கிறார் திருப்பூர் பனியன் நிறுவனம் ஒன்றின் மேனேஜர் சோலைமலை.
அப்படியானால் ஞாயிறு, திங்கள் தவிர்த்த மற்ற நாட்களில் குடிப்பது இல்லையா? அப்படியும் சொல்ல முடியாது. அந்த இரண்டு நாட்களிலும் அதி தீவிரக் குடி; மற்ற நாட்களில் தீவிரக் குடி. அவ்வளவுதான் வித்தியாசம். இதற்காக கம்பெனியில் இருந்து வார நாட்களில் முன்பணம் வாங்கிக்கொள்கின்றனர். முன்பணம் வாங்காத தொழிலாளர்கள் மிகமிகக் குறைவு. ஒவ்வொரு நாளும் 100 ரூபாய் முன்பணம் வாங்கி, மரணத்தை நோக்கி தவணைமுறையில் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் இதர பகுதிகளிலும் தொழிலாளர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். திருப்பூரில் மட்டும் ஏன் இப்படி குடித்துத் தீர்க்க வேண்டும்? முதல் காரணம், இங்கு இருக்கும் பெரும்பான்மைத் தொழிலாளர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள். இங்கு உதிரிகளாகத்தான் வாழ்கின்றனர். 'இப்படி வாங்குற சம்பளத்தை எல்லாம் குடிச்சே அழிச்சியன்னா, பொண்டாட்டி, புள்ளைங்களை யார் பார்க்குறது?’ என்று கேள்வி கேட்க நெருங்கிய உறவுகள் யாரும் அருகில் இல்லை. கசக்கிப் பிழியும் வேலையின் காரணமாக நண்பர்கள்கூட இவர்களுக்கு இருப்பது இல்லை. ஒரு மனிதன் சமூகத்துடன் இணையும் புள்ளி எதுவும் கிடையாது. மேலும், சொந்த ஊரில் இருந்தால் கல்யாணம், காட்சிக்குப் போக வேண்டும்; மொய் செய்ய வேண்டும்; ஊர்த் திருவிழா, குடும்ப நிகழ்ச்சிகளுக்கு செலவு வரும் என்பனபோன்ற அன்றாட நெருக்கடிகள் இருக்கும். சம்பாதித்த பணத்தை அதற்கென செலவழிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கும். இங்கு அது இல்லை. இரண்டாவது, வேலை கிடைப்பது குறித்த அச்சம் தொழிலாளர்களுக்கு இல்லை. இந்த வாரம் ஒரு கம்பெனி, அடுத்த வாரம் ஒரு கம்பெனி என்று போய்க் கொள்ளலாம். எங்கும் எப்போதும் வேலை தயாராக இருக்கிறது. இது அவர்களுக்கு ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கையைத் தருகிறது. இப்போது கையில் இருப்பதைக் குடித்து அழித்தாலும், நாளையே சம்பாதித்துவிட முடியும் என எதிர்மறையான நம்பிக்கை கொள்கின்றனர்.

அதே நேரம் இந்தச் சிக்கலை தொழிலாளர்களின் கோணத்தில் இருந்து மட்டும் மதிப்பிடுவது சரியற்றது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை 'வெறுங்கையோடு திருப்பூருக்குப் போனால் உழைத்து முன்னேறலாம்’ என்ற நிலை இருந்தது. அது உண்மையும்கூட. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இப்படி திருப்பூரில் உழைத்து முன்னேறினார்கள் என்பது நமக்குத் தெரியும். ஒற்றை ஆளாக திருப்பூர் வந்து கடும் உழைப்பால் சொந்த ஊரில் நிலபுலன் வாங்கி, பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துகொடுத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். இன்று அப்படியானவர்களைப் பார்ப்பது அரிது. முன்பு, வாங்கிய சம்பளம் குடும்பத்துக்குப் போனது. இப்போது நேராக டாஸ்மாக் செல்கிறது. 'ஏழைத் தொழிலாளர்கள் உழைக்கும் பணத்தை, குடியின் பெயரால் இந்த அரசு வழிபறி செய்கிறது’ என்ற குற்றச்சாட்டு எவ்வளவு உண்மை என்பதை திருப்பூரில் கண்கூடாகப் பார்க்கலாம்.

ஒரு பனியன் நிறுவனத்தின் கோணத்தில், தொழிலாளர்களின் குடி அவர்களைப் பாதிக்கிறதா? 'நிச்சயம் பாதிக்கிறது' என்கிறார் திருப்பூர் ஏ.கே.ஆர். டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லோகநாதன். 'ஒவ்வொரு திங்கட்கிழமையும் உற்பத்தித் திறன் கணிசமாகக் குறைகிறது. மற்ற வார நாட்களை ஒப்பிட்டால், திங்கட்கிழமை அன்று 40 சதவிகித உற்பத்தி குறைகிறது. குடிக்கு அடிமையான ஒரு தொழிலாளியால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது. அவரது வேலை செய்யும் திறன் மோசமாகக் குறைந்துகொண்டே செல்கிறது. அவரால் வேலையில் கவனம் செலுத்த முடிவது இல்லை. அதேபோல நைட் ஷிஃப்ட் வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை, குடியின் காரணமாக கணிசமாகக் குறைந்துவிட்டது. அதையும் மீறி வந்தாலும் குடித்துவிட்டு வருகின்றனர். இதனால் நைட் ஷிஃப்ட்டில் ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து பணிபுரிய பல நிறுவனங்கள் அனுமதிப்பது இல்லை. வேலை முடிந்து, பேருந்தில் டிராப் செய்ய போகும்போது, 'கடையை மூடிருவாங்க... சீக்கிரம், சீக்கிரம்’ என டிரைவரை தொழிலாளர்கள் அவசரப்படுத்துகின்றனர். அதே நேரம் குறைந்த ஊதியம் வாங்கும் தொழிலாளர்கள் மட்டும்தான் குடிக்கிறார்கள் என்பதல்ல... எங்கள் கம்பெனியில் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஊழியர் ஒருவர், வாங்கும் சம்பளத்தில் 30 ஆயிரத்தை குடித்தே அழிப்பார். மாலை 7 மணிக்குப் பிறகு எவ்வளவு தலைபோகும் வேலையாக இருந்தாலும் அவரைப் பிடித்துவைக்க முடியாது. இப்படி தொழிலாளர்கள், முதலாளிகள் என திருப்பூரின் அனைத்துத் தரப்பினரையும் குடி, மோசமாகப் பாதிக்கிறது' என்கிறார்.

இது திருப்பூரின் கதை மட்டுமல்ல. தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் தேவை அதிகம் இருக்கிற அனைத்து இடங்களிலும் இந்தப் பிரச்னை இருக்கிறது. குடிப்பழக்கம் உள்ள தொழிலாளர்கள் திடீர், திடீரென வேலைக்கு மட்டம் போட்டுவிடுகின்றனர். அவர் ஒரு கடையின் புரோட்டா மாஸ்டராக இருந்தால், அன்று அந்தக் கடையின் வருமானம் கெடுகிறது. அல்லது அவசரஅவசரமாக வேறொரு மாஸ்டரை ஏற்பாடு செய்ய வேண்டும். உணவுப் பொருளின் சுவை சீராக இல்லை எனில், வாடிக்கையாளரைத் தக்க வைக்க முடியாது. ''அதுக்காக குடிக்கிற ஆளைக் கண்டிக்கவும் முடியாது. உடனே நின்னுடுவார். கண்டும், காணாதது மாதிரி போகவேண்டியிருக்கு'' என்கிறார்கள் சிறுதொழில் நடத்துபவர்கள். இப்படித் தொடர்ந்து குடிக்கும் தொழிலாளர்களின் வேலைத்திறன் மோசமாகப் பாதிக்கப்படுகிறது என்றால், குடிப்பதையே ஒரு வேலையாகச் செய்பவர்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.

இப்போது மாலை 6 மணி என்று வைத்துக்கொள்வோம். மாநிலம் முழுக்க இருக்கும் 4,000-த்துக்கும் அதிகமான டாஸ்மாக் பார்களில் அமர்ந்து குறைந்தபட்சம் 50 லட்சம் பேராவது குடித்துக்கொண்டிருப்பார்கள். அதாவது, சமூகத்தின் உற்பத்தியில் பங்கேற்க வேண்டிய 50 லட்சம் மனித ஆற்றல்கள், சமூகத்தின் அழிவில் பங்கேற்கின்றன. இவர்கள் ஒவ்வொருவரும் குடிப்பதற்காக இரண்டு மணி நேரத்தைச் செலவிடுகின்றனர் எனக் கொள்வோம்.

50 லட்சம் பேர் X 2 மணி நேரம் = 1 லட்சம் மணி நேரம்.

இத்தனை பிரமாண்டமான நேரத்தை, அதற்கான மனித ஆற்றலை ஆக்கப்பூர்வமாக செலவிட்டால், தமிழ்நாட்டில் எஞ்சியிருக்கும் 18,000 ஏரி, குளங்களையும் ஒரே மாதத்தில் தூர் வாரிவிடலாம். பல மகத்தான அதிசயங்களை நிகழ்த்தவல்ல கோடிக்கணக்கான இளைஞர் கூட்டம் நம் கண் முன்னே குடித்துக் குடித்தே வீழ்கிறது. முன்பு எல்லாம் குடித்துவிட்டு சாலையில் வீழ்ந்துகிடப்பவர்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பார்கள். இப்போது டாஸ்மாக் இருக்கும் ஒவ்வொரு வீதியிலும் இரண்டு பேர் போதையில் மல்லாந்து கிடக்கின்றனர். அவர்களில் பெரும்பகுதி, இளைஞர்களாக இருப்பது இன்னும் கொடுமை.

உண்மையில் நாம் ஒரு தலைமுறையையே குடிகாரர்களாக மாற்றியிருக்கிறோம். ஒரு தலைமுறை இளைஞர்களின் உடல்களில் இருந்து ரத்தத்தை உறிஞ்சி, ஆல்கஹாலை செலுத்திக்கொண்டிருக்கிறோம். அவர்கள் ஆயிரம் ஆயிரமாக, லட்ச லட்சமாக நோயில் வீழ்ந்து

மடிந்துபோகிறார்கள். உடல் சிதைந்து உறுப்புகள் உருக்குலைந்து உயிரின் வேதனையில் மரணத்துக்காக ஏங்குகின்றனர். தன் குடிமக்களை வாழ்வில் இருந்து மரணத்துக்கு அழைத்துச் செல்கிற இந்த அரசாங்கத்தை இதற்கு மேலும் 'மக்கள் நல அரசு’ () என்று அழைக்க முடியுமா? அதற்கான அருகதையை இந்த அரசு இழந்துவிட்டது!

- போதை தெளிவோம்...
குடி குடியை கெடுக்கும் - 6, ‪#‎Ban‬ Tasmac
பாரதி தம்பி, ஆனந்தவிடகன் - 16 Sep, 2015

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...