பக்கங்கள்

வியாழன் 01 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --56...

 





மாலை நேரம் வேலை முடிந்தது. இனி வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்கலாம் என்று நிணைத்தபடி இரு சக்கர வாகனத்தில் வந்தவர்..டிராபிக் சிக்னலில் அருகில் வந்ததும் வண்டியை நிறுத்தினார்.

அந்த சிக்னல் ஓரத்தில் நின்றிருந்த டிராபிக் போலீஸ் இவரை பார்த்து தன் அருகில் வரு்ம்படி சைகை செய்தார்... இவரும் தனக்கு தெரிந்த போலீசாக இருக்கும் என்ற நிணைப்பில் வாகணத்தை ஓட்டியபடி அவர் அருகில் சென்றார்.

அருகில் சென்றவுடன் என்ன சார்,  கூப்பிட்டிங்க என்றபடி வண்டியைவிட்டு அருகில் சென்றார். சற்று தள்ளி நின்ற போலீசை காட்டி அவரிடம் செல் என்றார்.. ஒன்றும் புரியாமல் சுட்டிகாட்டிய போலீசிடம் சென்றார். அந்த போலீஸ் இவரின் ஒட்டுனர் உரிமத்தை கேட்டார்.  மேலும் ஒன்னும் புரியாமல் ஓட்டுனர் உரிமத்தை கொடுத்தார்....

சிறிது நேரத்தில் நீளமான துண்டு காகித்தை கொடுத்து நூறு ரூபாய் பைன்  ஆன்லைனில் கட்டு என்றார்... கொஞ்சம் விழிப்பு வந்து எதுக்கு  அபதாரம் என்றார்....

சைகை காட்டி அழைத்த போலீசை காட்டி அவரிடம் கேள் என்றார்.

 சீட்டை வாங்கி கையில் பிடித்தபடி ...எதுக்கு சார் ..அபதாரம் என்று வினவியபோது.தான்  அவருக்கு தெரிந்தது..... அட..கொடுமைக்காரா..இதுக்காக தெரிந்தவர்போல் என்னை அழைத்த படுபாவி..நீ வயிறு வெடித்து சாக வேண்டும்டா என்று மனதுக்குள் திட்டினார்....

அந்த இடத்தை விட்டு நகர்ந்த பின்தான் டிராபிக் போலிசின் வசூல் வேட்டை கடந்த மூன்று நாட்களாக நடந்து கொண்டு இருப்பது இவரது மண்டையோட்டிற்குள் இலேசாக உறைத்தது..

stop line violation  என்ற  போக்குவரத்து விதி மீறலுக்காக (sec 110 u/s 177) ன்படி  fine 100  தன்னுடைய ஏமாளித்தனத்தையும் வசூல் வேட்டை நாயாகர்களின் தனித்திறமையையும் வலிப்போக்கனின் கோவியட்-19, கரோனா வைரசை விட பயங்கரமானவர்களாக இருப்பதை அனுபவத்தில் கண்டதால் ....தன்னைத்தானே மண்டையில் அடித்தபடி.. அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்....

ஞாயிறு 27 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --55...

 




 



நமது உடலுக்கு உள்ளே வரும் எந்த ஒரு வியாதிக்கும் ஆங்கில மருத்துவம் தீர்வு ஆகாது! உண்மையை சொன்னவருக்கு

நன்றி - அருள்தாஸ் 


ஆகஸ்ட் 4ம் தேதி சாதாரண காய்ச்சல் என்று காணொளியில் பேசிய எஸ்.பி.பி விரைவிலேயே வந்துவிடுவேன் என்று சொல்லிவிட்டு தான் போனார். ஆனால் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 25ம் தேதி இறந்து விட்டார். சாதாரண காய்ச்சல் என்று தெம்பாக பேசியவர் இன்று உயிரோடு இல்லை. சாதாரண காய்ச்சலை குணப்படுத்த முடியாத மருத்துவமனையகள் அவை...? 


மூலிகை மருந்தையோ அல்லது வீட்டிலே Self Quarantine எடுத்திருந்தால் எஸ்.பி.பி உயிரோடு இருந்திருப்பார்...


தினமும் அவரின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ 7 லட்சம் முதல் ரூ 8 லட்சம் வரை வசூலிக்கப்பட்டு இருக்கிறது என்பது பிரபல இயக்குநர் சொன்ன தகவல். அவர் மருத்துவமனையில் இருந்தவரை சிகிச்சைக்காக ரூ 5 கோடி வரை மருத்துவமனை பில் போட்டு வசூலித்து இருக்கிறது சாதரண காய்ச்சலை குணப்படுத்த முடியாத  மருத்துவமனை நிர்வாகம்.


சாதாரண காய்ச்சல் பின் நுரையீரல், லிவர், மூச்சு விடுதல் சிரமம், மூளையில் ரத்த கசிவு, இறுதியில் மரணம்... இப்படி அறிவிக்கிறது. மருத்துவமணை


அலோபதி மருத்துவம் மீது மக்களுக்கு சந்தேகமும், நம்பிக்கையின்மையும் ஏற்படுத்தி வருகிறார்கள் கொள்ளைக்கார மருத்துவர்கள்....


ஏ1 குற்றவாளி ஜெயலலிதா, எச்.வசந்தகுமார், எஸ்.பி.பி இவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் கொடுத்த சிகிச்சையை விட மருத்துவமனை வசூலித்த பில் தான் அதிகம் . ஏ1 குற்றவாளி ஒரு இட்லி சாப்பிட்டதற்கு இத்தனை கோடியில் பில்  .இன்னும் விசாரணை முடியவில்லை


மறைந்த எஸ்.பி.பிக்கு அரசு மரியாதையை தமிழக அரசு செய்வது ஒருபுறம் இருந்தாலும் 16 மொழிகளில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஒரு மாபெரும் கலைஞருக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவர், மருந்துகள், மெடிக்கல் ரிப்போர்ட், மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அதை விட கோடிக்கணக்கில் பில்லை போட்டும் கொள்ளை அடிக்கும் மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்யவேண்டும்


இப்பல்லாம் உடலுக்கு ஏதாவது பிரச்னை என்றால் மருத்துமனை பக்கம் போகவே கூடாது. அப்படி மாறிவிட்டது மருத்துவத் தொழில். நைட்டிங்கேல் அம்மையார், டாக்டர் முத்துலெட்சுமி ஆகியோரின் மருத்துவ சேவையை கேள்விப்பட்டும், படித்தும் இருக்கலாம்... இப்போ தெய்வநாயகம் (லேட்), டாக்டர் அமலோற்பவநாதன் , டாக்டர் புகழேந்தி, டாக்டர் ரமேஷ் , டாக்டர் பினாய்க்சன், டாக்டர் எழிலன் ஆகியோரின் மருத்துவ சேவையை போல் இருக்கவேண்டும்.

மருத்துவம் செய்து பலன் அளிக்காமல் இறந்தால்.. அது மருத்துவமனை கொலைதானே...!  அந்தக் கொலைக்கு  லட்சத்தில் கோடியில் பில் எதற்கு..???



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...