பக்கங்கள்

சனி 15 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --36-

டூபாக்கூர்  கும்பலாக  சேர்ந்து  புதிய  கல்வி கொள்கையை  உருவாக்கி  இருக்கிறார்கள்  😁😁

Nishikant Dubey - Wikipedia

 ஜார்கண்ட்  மாநில பாஜக  எம்பி  & புதிய கல்வி  கொள்கையை  உருவாக்கிய  கமிட்டி உறுப்பினருமாகிய   நிஷிகாந்த்  துபே    என்ற டவுஸர்   சங்கி  


அவரது 10 வயதில்  10 ம் வகுப்பு தேர்வில்  தேர்ச்சி  பெற்றவராக  டூப்ளிகேட் சர்டிபிகேட்டும் , அடுத்து MBA டெல்லி பல்கலைகழகத்தில் படித்து  பட்டம் பெற்றதாக கூறி  ராஜஸ்தானில்  உள்ள பல்கலைகழகத்தில்  PhD டாக்டர்  பட்டம் படித்தவர் என்று   உடான்ஸ்  விட்ட  டூபாக்கூர்  பாஜக  எம்பி  மீது   டெல்லி  பல்கலைகழகம்   ஜார்கண்ட்  போலீஸில்  புகார்  அளித்துள்ளது , நிஷிகாந்த் துபே என்ற ஒரு  நபர்  டெல்லி பல்கலைகழகத்தில் படிக்கவே  இல்லை  அவரது MBA  டிகிரி  பொய்யானது  என்று சட்ட நடவடிக்கை  எடுக்க புகார் அளித்துள்ளது 


அவர்களின்  தலைவர் டிமோ ஜி  அவர்கள் , குஜராத்தில் இல்லாத  கல்லூரியில்  MA  இன்டர்நேஷனல் யூனிவர்சல்  ஆல் ரவுண்டு  வரலாறு  பட்ட படிப்பு  படித்தவர்  என்பது  உலகம் அறிந்த  செய்தி  .


டூபாக்கூர்  கும்பலாக  சேர்ந்து  புதிய  கல்வி கொள்கையை  உருவாக்கி  இருக்கிறார்கள்  😁😁

வியாழன் 13 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --35-

 No Hindi imposition





இந்தி திணிப்பால் அழிந்த மாநிலங்களின் தாய் மொழிகள்.

----------------------------------------------------------------------


இந்தி கற்றிருந்தால் நமது மாநிலம் இன்னும் முன்னேறியிருக்கும் 

இந்தி கற்கவிடாமல் நம் மாநிலத்தை பின்தங்கவைத்துவிட்டார்கள் என்கிற நண்பர்களே...!


இந்தியாவிலேயே முதன்முதலாக இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த பீஹாரின் நிலையை பாருங்களேன்.

பீஹாரின் தாய்மொழி போஜ்புரி மற்றும் மைத்திலி.


உத்திரப்பிரதேசமும் இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த ஒரு மாநிலம்தான். அதன் முன்னேற்றத்தையும் நண்பர்கள் ஆய்வு செய்துகொள்ளுங்கள்.


வடமேற்கு உ.பியின் தாய்மொழி பிரஜ் பாஷா, தென்மேற்கு உ.பியின் தாய்மொழி புந்தேல்கண்டி வடகிழக்கு உ.பி யின் தாய்மொழி போஜ்புரி,பிரதாப்கர்  போன்ற மத்திய உ.பி யில் பேசப்படுவது ஆவ்தி,பிறகு கன்னோஜி என்கிற மொழியும் பேசப்படுகிறது.


அடுத்ததாக உத்தராகண்ட் மாநிலத்தின் ஆட்சிமொழியும் ஹிந்திதான். போதாதற்கு சமஸ்கிருதம் additional அலுவலக மொழி.

ஆனால் உத்ராகாண்டின் உண்மையான தாய்மொழி கடுவாலி மற்றும் குமோனி.


அடுத்து ஹரியானா மாநிலத்தின் அலுவலக மொழியும் இந்திதான். ஆனால்  தாய்மொழி ஹரியாண்வி.


ராஜஸ்தானில் ஆட்சி மொழி ஹிந்தி. ஆனால் தாய்மொழி கள் ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி.


மத்திய பிரதேசத்தின் ஆட்சி மொழி இந்தி. ஆனால் தாய்மொழிகள் உருது,மால்வி,நிமதி,அவதி,பகேலி


காஷ்மீரின் தாய்மொழி காஷ்மிரி மற்றும் உருது, ஜம்முவின் தாய்மொழி டோக்ரி,பாடி, லடாக்கின் மொழி லடாக்கி, ஆட்சிமொழியாக இந்தி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.


சட்டீஸ்கரில் தாய்மொழி  சட்டீஸ்கரி,கோர்பா. ஆனால் ஆட்சிமொழியாக ஹிந்தி,


ஜார்கன்டில் தாய்மொழி  ஜார்கன்ஷி,சந்த்தலி.

 ஆட்சி மொழி இந்தி. 


 மேற்கூறிய  மாநிலங்களில் அவர்களின் தாய்மொழியில் இலக்கியங்களோ படைப்புக்களோ வருவதில்லை. வரிவடிவமற்ற வெறும் பேச்சு மொழிகளாக அவை சுருங்கிவிட்டன.


இந்தி மொழி வந்து ஆளுமை பெற்றதால் உண்மையான தாய் மொழிகள் எந்த ஒரு வளர்ச்சியும் இல்லாமல் அழியும் நிலையை எட்டிவிட்டன. ஏனென்றால் தாய்மொழி அவர்களுக்கு அவசியமற்றதாகிவிட்டது. அவர்கள் தாய்மொழியில் படித்தால் அவர்கள் ஊரிலேயே வேலை கிடைக்காது என்பதால் தாய்மொழி 

வெறும் வாய்மொழியாக பேசப்படுவதோடு சரி.  கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுவதில்லை.


சரி மேற்கூறிய மாநிலங்களில் இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொண்டதால் பொருளாதார வளர்ச்சி கிடைத்துவிட்டதா என்றால் இல்லை.

தாய்மொழியை ஆட்சி மொழியாகக்கொண்ட தமிழகத்தை விட பின்தங்கியே உள்ளன.

சரி கல்வியளிப்பதிலாவது வளர்சியடைந்துள்ளதா என்றால் அதிலும் தமிழகத்தைவிட பலமடங்கு பின்தங்கியே உள்ளன.


பிறகெதற்கு நம்மீது மும்மொழிக் கொள்கை என்று இந்தியைத் திணிக்கிறார்கள் என்றால் இந்தி பேசும் மாநிலத்தினருக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பைப் பெறுவதும், தொழில் மேற்கொள்வதும், ஏன் தேர்தல்  பிரச்சாரம் செய்வதும்கூட எளிமையாக இருக்கவேண்டுமல்லவா ?


நான் உன்னோடு தொடர்புகொள்ள எனக்குச்  சிரமமாக இருக்கிறது அதனால் நீ என் மொழியை கற்றுக்கொள் என்பது எவ்வளவு திமிரான சர்வாதிகாரம். அந்தச் சர்வாதிகாரம்தான் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது புதிய கல்விக் கொள்கை வாயிலாக .


ஆங்கிலமும் உலகப் பொதுமொழி அல்ல உண்மைதான் 

உலகின் பொதுமொழி technology தான்.


 ஆனால் 

உலகத்தின் பொது அறிவு,மருத்துவம், விஞ்ஞானம்,வரலாறு  அனைத்தும் ஆங்கிலத்திலேயே பெருமளவு இருக்கின்றன.

அதனால் ஆங்கிலம் கற்பது அவசியமாகிறது.


ஆனால் 

இந்தியில் அப்படி எந்த ஒரு அறிவுப் பொக்கிஷமோ, இலக்கியச் செழுமையோ, வரலாற்று பின்னணியோ இல்லை.

இந்தி படிப்பது பானிப்பூரிக் காரர்களிடம் பேசிக்கொள்ள மட்டுமே பயன்படலாம்.

 

 ஒரு மொழியைப் படித்து அதில் பட்டம் பெற்றால் அந்த மொழி உள்ள தேசத்தில் மட்டுமே பணிபுரியமுடியும்

அதுவும் இந்தியில் படித்து வட இந்தியாவுக்கு வாத்தியார் வேலைக்குச் சென்றால் அங்கே உங்களைவிட திறமையான பிறப்பிலிருந்தே இந்திபேசும் பண்டிட் காத்திருப்பான் உங்களுக்கு போட்டியாக...

இந்தி படித்தால் இந்தியாவெங்கும் வேலை கிடைக்குமென்றால் இந்தி படித்த பானிப்பூரிக்காரனுக்கு ஏன் கிடைக்கவில்லை,. பலதடவை கேட்டும் பசு மாட்டு மூத்திரங்கள்  இன்னமும் பதில் சொல்லவில்லை


சிறு பிள்ளைகளை இளமையிலேயே இந்தி படிக்கச் சொல்வது அவர்களுக்கு அது தேவையற்ற சுமைதான்.

தேவையில்லாம அதை ஒரு subject டா வச்சு அதுக்கொரு தேர்வு வச்சு அதுக்கொரு வீட்டுப்பாடம்னு வச்சு பிள்ளைகள உசுர வாங்க வேண்டாம்

அப்படி கற்பதால் பெரிய பயனும் இல்லை 

இந்தி கற்காததால்  பெரிய நட்டமும் இல்லை

இதற்காக பிள்ளைகளை மூன்று வயதிலிருந்தே கஷ்டப்படுத்தத் வேண்டாம்

அவர்கள் தம் கல்வியை  விளையாட்டாக கற்கட்டுமே விளையாட்டோடு.

 

  இத்தோடு ..இங்கே பிழைக்க வந்து வளமாக வாழ்கிற மார்வாடிகளைத் தமிழ் படி என்று கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், தமிழகத்தில் இருப்பவர்களையே இந்தி படி என்கிறார்கள் சங்கிகள்.உள்ளுர் சங்கிகள் உள்பட...


நன்றி! தமிழ் ஆய்வாளர்களுக்கு

செவ்வாய் 11 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --34-

 

தெரி்ந்து கொள்ளுங்கள்....!!!


செய்யாத குற்றத்துக்கு தண்டனையாக தன் கணவனை கொலை செய்துவிட்டது அரசு.. தனது கோபத்தால் மதுரை மாநகரையே எரிக்கிறார். தன் உள்ளத்தில் எரிச்சல் பற்றி எரிகிறது. கோபத்தில் சிரிக்கிறார். ஆவேசமாக வேகமாக நடந்து செல்கிறார். சற்று நின்று திரும்பி பார்க்கிறார் நகரம் அனைத்தும் எரிந்து விட்டதா? என்று   அன்றைய அநீதிக்கு மதுரையை எரித்தவர் கண்ணகி -  

சிலப்பதிகாரம் / Silappathikaram (Tamil Edition) eBook ...

அவன் இளவரசன் ஒரு பேரழகியின் அழகில் கவரப்பட்டு, அந்தப் பேரழகியிடம் தன் காதைலை தெரிவிக்கிறான். அந்தப் பேரழகி இளவரசனின் காதலை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். அந்தப் பேரழகி தன் காதலை ஏற்றுக் கொள்ள மறுத்த போதும் கோபம் கொண்டு, எனக்கு கிடைக்காதவள். வேறு யாருக்கும் கிடைக்ககூடாது என்று, பழிவாங்கும் எண்ணத்துடன் பேரழகி முகத்தில் ஆசிட் வீசவில்லை..அந்த இளவரசன்  ஆபாச படமெடுத்து மிரட்டவில்லை. அந்தப் பேரழகியின் உணர்வுக்கு மதிப்பளித்து சென்றுவிடுகிறார்.--- அந்தப் பேரழகி 

Thinakaran : - சாதாரண குடிமகனை பாட்டுடைத் ...

ஒரு மனைவி தன் கணவனின் கபட வேடத்தை அறிந்து தன் கணவனை திருத்த முயலுகிறார்..அந்தக் கொள்ளைக்கார கணவனோ  கொலைகாரனாக மாற. தன் மனைவியிடம ஆசை வார்த்தை பேசி  தன் மனைவியை கொல்லவதற்க்காக மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். மலை உச்சியை அடைந்த பிறகுதான் அந்த மனைவிக்கு  தன் கணவன் தன்னை கொல்ல அழைத்து வந்திருக்கிறான் என்று தெரிகிறது.. பதறாமல் தன் கணவனிடம் பேசுகிறாள். உங்கள் கையால் நான் மடிவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். என் ஒரே ஒரு வேண்டுகோளை மட்டும் நிறைவேற்ற தாங்கள் அனுமதிக்க வேண்டும். என்கிறார். வெற்றி அடைய போகும் மிதப்பில் அந்த கணவர் என்னவென்று கேட்க என் கணவரான உங்களை மூன்று முறை சுற்றி வந்தால் எனக்கு  மோட்சம் செல்லும் பாக்கியம் கிட்டும் என்று சொல்ல... அந்தக்  கொள்ளைக்கார கணவன் அனுமதி கொடுக்க..  தன் கொள்ளைக்கார கணவன் மேலும் கொலைகார கணவனாக மாறாதிருக்க.. மூன்றாவது சுற்று சுற்றி வரும்போது  அவனை  கீழே தள்ளி கொல்கிறார்.-இது கலைஞர் திரைக்கதைவசனம் எழுதிய மந்திரிகுமாரி படத்தின் கதையான   குண்டலகேசி

My Views: April 2016

சிலப்பதிகாரம், மணிமேகலை. குண்டலகேசி- இவை தமிழ் இலக்கிய காப்பியங்கள். இந்தகாப்பியங்களில் கூறப்படும் அறம் ..அவன் ஆணோ. கணவனோ, அரசனோ, ஆண்டவனோ.. எவனாயிருந்தால் அநீதி என்றால் அறம் தவறினால் அடங்காதே! அவனை எதிர்த்து போராடு என்று போதிக்கின்றன.

தமிழ் மொழி எப்பொழுதும் பெண்களை கொண்டாடுகிறது. உலகம் முழுவதுமே பெண்களை காலுக்கு கீழே அடிமைபடுத்தி வைத்திருந்த கால கட்டத்திலே பெண்களை மென்னை மிகு பொக்கிஷங்களாக போற்றி புகழ்ந்தது தமிழ் சமூகம்.

சங்க காலத்திலேயே. 47 பெண் புலவர்களை அதாவது தமிழ் எழுத்தாளர்களை கொண்டது தமிழ் சமூகம் மட்டும்தான். உலக மொழிகளின் தாய் என்று கூறிக் கொள்ளும் கிரேக்கத்தில்கூட ஏழு பெண்கள்தான் உண்டு.. தற்போது கீழடி போன்ற இடங்களில் இருந்து கிடைத்ததில் தங்கத்திலும் பானை ஓடுகளிலும் பெண்களின் பெயரை பொறித்து பயன் படுத்தும் அளவிற்கு தமிழ்ச் சமூகம் நாகரிகம் கொண்டது.

ஆண்டாண்டு காலமாக பெண்களை போற்றி புகழ்ந்து கொண்டாடியது தமிழ் சமூகம். தமிழ் மொழி, தமிழ் சமூதாயம் இன்றும் நிலைத்து இருப்பதற்கு காரணம்  தாய் மொழி என்று பெண்களை கொண்டாடியதால்தான். பெண்கள் உலகத்தின் ஆணி வேர்கள்


இத்தகைய  பெருமை வாய்ந்த தமிழ் சமூகத்திற்கு எதிரான ஒரு சமூகம் ஒன்று இருக்கிறது. அது இந்தி என்ற வட மொழி சமூகம். அது ஓர் ஆண் என்ன செய்தாலும் அவனுக்கு சேவகம் செய்வதொன்றே பெண்ணின் பணி என்று சொல்கிறது.

வட மொழிகள் பெண்களை அடிமைதனமாக்கிறது. தேவ பாஷை என்று சொல்லிக் கொள்ளும் சமஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது. அந்த சமஸ்கிருதத்தை பெண்கள் வாசிக்கவோ, பேசவோ.. சூத்திரர் ,பஞ்சமர்கள் போல  பெண்களுக்கும் அங்கே உரிமை கிடையாது.


பெண்களை அடிமைதனமாக்கும் வடமொழி இலக்கியம்.-

1. பத்து அவதாரங்களில் ஒரு அவதாரம் ஒருவன் அவன்.  தன் மனைவியை சந்தேகப்பட்டு தீயில் இறங்கி பத்தினி என்று நிருபித்துகாட்டு என்று பணிக்கிறான். அவனின் மனைவியும் அவன் உத்தரவுக்கு கீழ்படிந்து எறியும் தீயில் இறங்கி தான் பத்தினி என்று நிருபிக்கிறாள்.. அதன் பிறகும் சந்தேகம் தீராத அவதார புருஷனான அவன். ஊராரின் சந்தேகத்தை காரணமாக காட்டி கர்ப்பிணியான தன் மனைவியை காட்டிலே தள்ளுகிறான். காட்டிற்கு சென்ற அந்தப் பெண். அங்கயே  இரண்டு குழந்தைகளை பெற்று  அவர்களை வளர்த்து மடிந்து போகிறாள் .இது ராமாயணம் என்று சொல்லப்படுகிறது.

Duraimurugan pandiyan on Twitter: "அறிவியல் ...

2. வயது முதிர்ந்த ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்ட அழகிய இளம் மங்கை.  கல்லானாலும் கணவன். புல்லானாலும் புருஷன் என்று. அந்தப் பெண் வயது முதிர்ந்த கணவனுடன் மனமுவந்து வாழ்ந்து வருகிறாள். ஒரு கட்டத்தில் அந்த வயது முதிர்ந்த கணவன் குஷ்டரோகியாக ஆனபிறகும் அவனுடனே அந்த இளம் மங்கை வாழ்கிறாள்.. தாசியோடு கூட வேண்டும் என்று அந்த குஷ்டரோகி கணவன் கூறும் போதும் வெறுப்பு எதுவும் கொள்ளாமல்.. அவனை தாசி வீட்டுக்கு தூக்கிச் செல்கிறாள்.  அந்த தாசிக்கு கூலியாக தாசியின் வீட்டை கூட்டி சுத்தம் செய்கிறாள்---இது நளாயினி கதை...

இப்படியான அடிமைத்தனமான  வட மொழி இலக்கியத்தை தமிழ்நாட்டில் புகுத்துவதற்காகத்தான். புதிய கல்வி கொள்ளை என்று கூறி பவனி வருகிறார்கள்..

தாசியின் வீட்டிற்க்கு தன் கணவனை ...


நன்றி! தமிழ் ஆய்வாளர்கள். தமிழ் அறிஞர்கள். தமிழ் சமூகத்திற்கு











ஞாயிறு 09 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --33-

 

சென்னை மெரினாவில் சுழலும் சிசிடிவி ...


சிசிடிவி கேமிராக்கள் ஏன் தேவைப்படுகின்றன? என்றொரு வினாவை எழுப்பினால், அதற்கு விடையாக இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. 1. குற்றம் நடந்த பிறகு குற்றவாளியை அடையாளம் காணவும் விரைந்து பிடிக்கவும் பயன்படுகிறது. 2. சிசிடிவி கேமிரா இருக்கிறது என்பதே உளவியல் ரீதியாக கண்காணிப்பு அச்சத்தை ஏற்படுத்தி குற்றம் நடப்பதை தடுக்கிறது. இவை சரியான காரணங்கள் தானா?

இதுவரை பிடிபட்டுள்ள குற்றங்களில், குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களைப் பிடிப்பதற்கு சிசிடிவி கேமிராக்கள் உதவியுள்ள வழக்குகள் எத்தனை விழுக்காடு? என்று ஏதேனும் கணக்கு இருக்கிறதா? அப்படி எதுவும் இல்லை என்பது மட்டுமல்ல, ஒரு குற்றவாளியை அடையாளம் காண்பதற்கும் கண்டுபிடிப்பதற்கும் சிசிடிவி பெரிய அளவில் பங்களிக்காது. எடுத்துக்காட்டாக சுவாதி வழக்கை எடுத்துக் கொள்ளுங்கள். சிசிடிவி காட்சியைக் கொண்டு தான் ராஜ்குமாரை பிடித்தார்கள். ஆனால் ராஜ்குமார் தான் குற்றவாளி என்பதற்கு எந்த ஆதாரமும் கொடுக்க முடியவில்லை. சிறையில் வைத்தே கொன்றும் விட்டார்கள். எத்தனையோ வழக்குகளில் சிசிடிவி காட்சிகள் கிடைத்தும் குற்றவாளிகள் தப்பிக்க விடப்பட்டுள்ளனர். எனவே, சிசிடிவி குற்றவாளிகளை அடையாளம் காணவும், பிடிக்கவும் உதவும் என்பதில் போதிய உண்மையில்லை. வணிக கடைகளிலெல்லாம் கட்டாயமாக சிசிடிவி மாட்ட வேண்டும் என்று காவல்துறை சொல்லியது. அதுவும், உள்ளிருந்து சாலையை கவனிப்பது போல் மாட்ட வேண்டும் என்று சொன்னது. இதன்மூலம் குற்றவாளிகளை பிடிக்கலாம் எனும் தோற்றத்தை மக்களிடம் ஏற்படுத்தினார்கள். வேறொன்றுமில்லை.

சிசிடிவிக்கு பிறகு குற்றங்கள் குறைந்திருக்கின்றன என்று கூறுவதற்கான எந்த புள்ளி விவரங்களும் இல்லை. சிசிடிவி உளவியல் ரீதியாக எந்த மாற்றத்தையும் குற்றவாளிகளிடம் ஏற்படுத்தவில்லை. மாறாக, மாற்று ஏற்பாடுகளை சிந்திக்க வைத்திருக்கிறது. கேமிராக்களை உடைப்பது, அந்தப் பகுதி மின்சாரத்தை துண்டிப்பதன் மூலம் கேமிராவை செயலிழக்க வைப்பது, தொப்பி அணிந்து இறக்கி விட்டுக் கொள்வது, எதிரொளிக்கும் கண்ணாடிகளை பயன்படுத்துவது என்று எத்தனையோ வழிமுறைகள் புதிது புதிதாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அப்படியென்றால் இந்த சிசிடிவிக்களால் வேறு என்ன தான் பயன். மக்களை கண்காணிப்பதற்காக அரசுக்கு பயன்படுகிறது. மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள், என்னென்ன உடுத்துகிறார்கள், தங்களை எப்படி வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்பன போன்ற கோடிக்கணக்கான தகவல்கள் (டேட்டாக்கள்) நிறுவனங்களுக்கு தேவைப்படுகின்றன. இன்னும் வெளியில் கசியாத எவ்வளவோ ரகசியச் செயல்பாடுகளுக்காக அரசுகள் பயன்படுத்துகின்றன. தெளிவாகச் சொன்னால் அரசின் துறைகளுக்குத் தான் சிசிடிவிக்கள் பயன்படுகிறதே தவிர குற்றங்களைக் குறைப்பது என்று சொல்லப்படும் காரணங்களில் துளியும் உண்மையில்லை.

தகவல்  https://senkodi.wordpress.com/

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...