பக்கங்கள்

சனி 25 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-74.

அலைய...அலைய விடும்  படலம்

Image result for கடன் கேட்டு







முந்தா நேற்று
முன் கூட்டியே
போயி கேட்டு
நேற்று  கால்
கடுக்க நின்று
இன்று வரை
காத்து இருந்து
நாளைக்கு வா
போ...போ.. என
சிறிதும் இரக்கம்
இல்லாமல் பட்
என்று சொன்னார்
எனக்கு கடன்
கொடுக்கும் வட்டிக்காரர்

வெள்ளி 24 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-73

உள்ளுர் சனத்துக்கு.... நெற்றி கண்


Image result for ஸ்டெர்லைட்







ஏலேய்...மக்கா..
இந்த அநியாயத்தையும்
தெரிஞ்து கொள்ளுங்கலே...
நாளா பின்னக்கி
நமக்கு உதவும்லே...

அதாவது...லே...
இலண்டன்ல..இருப்பவன்
நம்ம தூத்துக்குடியில
வந்து தொழிற்சாலை
நடத்தலாம்...லே.
அத எதிர்த்து
போராட்டம் நடத்துனா.
வெளியூர் போலீசு
வெளி மாநில
இராணுவத்த வச்சு
 போராட்டத்த ஒடுக்க
துப்பாக்கி சூடு
நடத்துவாங்கலாம்....லே
ஆனா..தூத்துக்குடி
மக்கள பாதுகாப்பதற்கு
நாம கலந்து
கொண்டால் குற்றம்
குற்றமாம்...லே.....


வியாழன் 23 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-72

கவலைபட்டவர்களும்......சந்தோசப்பட்டவர்களும்..........


Related image


அவர்கள்...........

ஏ1 குற்றவாளி  செத்த
போது...இனி
சரக்கும் பிரியாணி
என்ற குஸ்காவும்
வோட்டுக்கு பணமும்
கிடைக்காது என
கவலைப்பட்டனர்




இவர்கள்..............

கலைஞர் மறைந்த
போது திமுகவில்
இனி யார் தலைவர்
என்ற சொத்து
பிரச்சனை எழுந்தபோது
சந்தோசப் பட்டனர்

.


செவ்வாய் 21 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-71

மானம் காத்தவர்................?




Image result for மானம்









அது லட்சுமி கிளினிக்.. முதிய வயது பெண்ணும் ,இளவயது பெண்ணுமாக உள்ளே சென்று காலியான இருக்கையில் அமர்ந்தார்கள். கிளினிக்கில் நர்சு பெண் அமர்திருந்த முதிய பெண்ணை பார்த்து “நல்லா இருக்கிங்களா” என்று கேட்டு புன்னகைத்து விட்டு சென்றது.

வரிசைப்படி..நாலைந்து பேர்களுக்குப்பின் முதிய வயது பெண்ணும். இளவயது பெண்ணும் மருத்துவர் அறைக்குள் சென்றார்கள்.. முதிய வயது பெண்ணைப் பார்த்ததும் அந்த பெண் மருத்துவர் நலம் விசாரித்தார்...பின் தற்போதுள்ள உடல் குறைகளை கேட்டறிந்து.அதற்கு தகுந்த மாத்திரை .மருந்துகளை எழுதி கொடுத்துவிட்டு சாப்பிடும் முறைகளை தெரிவித்தவிட்டு உடன் வந்த இளவயது பெண்ணை யாரென்று விசாரிக்கிறார்.


அவளைப்பற்றிய விவரத்தை கூறிய பின் மிக மெதுவான குரலில் அந்த இளவயது பெண்ணை அழைத்து வந்த நோக்கத்தை  தெரிவிக்கிறார். புரிந்து கொண்ட மருத்துவர் அந்த இள வயது பெண்ணை விசாரணை செய்கிறார்.

அந்த இளவயதுப் பெண்ணும் எதையும் மறைக்காமல்  சொல்கிறாள்.

என் கணவர் வயதானவர் அவருக்கு பிள்ளை இல்லாததால் என்னை இளையதாரமாக அவருக்கு கட்டி வைத்துவிட்டார்கள். எனக்கும் பிள்ளையில்லை.. கிராமத்தில் மழை தண்ணி இல்லாததால் பிழைப்பு தேடி, நகரத்துக்கு வந்து கடைசியாக இந்தம்மா குடியிருக்கும் தெருவுக்கு குடி வந்ததோம்...படிப்பறிவு எதுவும் எனக்கு இல்லாததால் கட்டிட சித்தாளாக வேலை பார்த்து வாழ்ந்து வந்தோம்...மூன்று வருடங்களுக்கு முன் என் கணவர் இறந்துவிட்டார்.. எனக்கு  தாய் தந்தை யாரும் இல்லை..ஆகையால் கிராமத்துக்கு செல்லாமல் இங்கயே தங்கி வேலை செய்து வாழ்ந்து வருகிறேன். இந்நிலையில் எனக்கு வேலை கொடுக்கும் கட்டிட காண்ட்ராக்டர்  என்னை  அவருடைய ஆசைக்கு பயன்படுத்திக் கொண்டார்.

என் வாழ்க்கைக்கு வேறு வழியெதும்இல்லை வேறு வழியும் இல்லாததால் வேலை கொடுக்கும் முதலாளியின் ஆசைக்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் அடிபணிந்தேன். எப்போதும் மாதத்தில் முறையாக தீட்டு வந்துவிடும்.. கடந்த இரண்டு மாதமாக தீட்டு வரவில்லை. இந்தம்மாவிடம் உண்மையைச் சொல்லி சந்தேகமாக கேட்டபோது..நான் மாசமாக இருப்பதை தெரிவித்தார்.

கரு கொடுத்தவரிடம்  நிலைமைச் சொல்லி அழுதபோது...அவர் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவரென்றும் நான் தாழ்ந்த சாதியென்றும்..கருவை கலைத்துவிட சொன்னார்.. எனக்கும் அவர் சொல்வதுதான் சரிஎன்று பட்டது. கணவர் இல்லாத நான் பிள்ளை பெற்றால். ஊர் தூற்றுவதோடு என்னை பாதுகாப்பதற்கும் யாருமில்லை... இந்தத் தாயிடம் அழுது முறையிட்டபோது..
மனமிறிங்கி தங்களிடம் அழைத்துவந்தார். தயவு செய்து அம்மா..என் மீது இரக்கப்பட்டு. என் கருவை அழிப்பதோடு .கரு உண்டாகத அறுவை சிகிச்சையும் செய்து விடுங்கள். அதற்கண்டான செலவை தெரிவித்தால்.என் முதலாளிடம் வாங்கி  இந்த அம்மா மூலம் செலுத்தி விடுகிறேன். என்னை காப்பாற்றுங்கள் அம்மா என்று மருத்துவரின் காலில் விழுந்து வணங்கினாள்.

அந்த முதியவயது பெண்ணும் பாவம்மா.....நீங்கள் மனது வைத்து இவளை காப்பாற்றி விடுங்கள்...ஆகும் செலவை இவள் முதலாளி தருகிறேன் என்றார்.
எவ்வளவு என்று சொல்லுங்கள் பணத்தை வாங்கி வந்துவிடுவாள் என்றாள்..

எல்லாவற்றையும் கேட்டு தெரிந்து கொண்ட அந்த மருத்துவர்  சில கணம் யோசனையில் ஆழ்ந்தார் பின் மருத்துவ சீட்டில் அந்த இளவயது பெண்ணின் பெயர் அவருடைய வயது எல்லாவற்றையும் எழுதிக் கொண்டு உள்ளறையில் அழைத்துச் சென்று அந்தப் பெண்ணை பரி சோதனை செய்தார்.

பின் இளவயது பெண்ணிடம்  அருகில் உள்ள லேப் பெயரைச் சொல்லி.. ஸ்கேன் எடுத்துவரச் சொல்லி..எழுதிய குறிப்பு சீட்டை கொடுத்து, முதிய வயது பெண்ணிடம் அந்தப் பெண்ணை காப்பாற்றி விடலாம்.என்று சொல்லி விட்டு நீங்கள் விடாமல் மருந்து மாத்திரையை சாப்பிட்டு வரச் சொல்லி இருவருக்கும் ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்

சில நாட்கள் கழித்து சுகமான அந்த இளவயது பெண்..அந்த முதிய வயது பெண்ணின் வீட்டிற்கு வந்தவள்... புன்னகையுடன் காட்சியளித்த முதிய வயது பெண்ணின் புகைப்படத்தை தொட்டு  ” என்னை காப்பாற்றியதற்கு நன்றியம்மா!..என்று முனு முனுத்து கண்ணீர் சிந்தியபடி வணங்கிச்  விட்டுச் சென்றாள்...


ஞாயிறு 19 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-70

  ஒரு தற்கொலை.மரணம் என்று சொல்லப்பட்டது





Image result for  வயதான காமம்





என்னைக் கண்டதும் “ வாங்கண்ணே..” என்ன விசேசம் காலையிலே வந்திங்ட்டீங்கே” வேலையில்லையாக்கும் என்றவர்க்கு”  கிட்ட வந்துசொல்றேன் என்று சைகையால் பதில் சொல்லி விட்டு ..இரு சக்கர வாகனத்தை ரோட்டின் ஓரமாக நிறுத்திவிட்டு, 

வேலையில்லாமல் இல்லைண்ணே...“எங்க ஏரியாவுல..டோட்டல் ஆப்” ண்ணே என்றபோது.. அதானே... பாத்தேன்..என்னடா..அண்ணன் நம்மல மறக்காம பாக்க வந்திருக்காருண்ணு ”   அவர் சொல்லிக் கொண்டிருந்தபோது..
அவருக்கு அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நாலு மடக்கு தண்ணியை குடித்துவிட்டு அமைதியாய் அவரைப் பார்த்தேன்.

 துணைக்கு ஆளில்லாமல் இருந்தேன். நீங்க வந்தது நல்லதாய் போச்சு... வாங்க..பக்கத்து தெருவில் உள்ள  ஒரு கேத வீட்டுக்கு போயிட்டு வருவோம் என்று எழுந்தவர் என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தார்

நானும் அவருடன் சேர்ந்து நடந்தபடியே...யாருண்ணே.... சொந்தமா.?.பழக்கமா? என்று விசாரித்தேன்...  வாடகைக்கு இருக்கும் கடையின் ஓனரின் அப்பா என்று தெரிந்தது.  போகும்போதே கடையில் வேலை செய்து கொண்டியிருந்தவர்..வண்டியில் வந்து மாலையை கொண்டு வந்து கொடுத்தார் . அவருக்கு பதிலாக நான் வாங்கிக் கொண்டு அவருடன் பேசிக் கொண்டே நடந்தேன்.

கேத வீட்டுக்கு அருகில் வந்ததும்..மாலையை அவர் கையில் கொடுத்துவிட்டு அவருடனே வீட்டுக்குள் நுழைந்து சவப் பெட்டி அருகில் நின்று இறந்தவரை பார்த்தேன். அண்ணன் மாலையை போட்டுவிட்டு.. என்னை அழைத்துக் கொண்டு வெளியே வந்து நாற்காலியில் அமர்திருந்தபோது..அண்ணனுக்கு தெரிந்தவர்களும்... அவரை வைத்து என்னை தெரிந்தவர்களும் ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிக் கொண்டோம்..அப்படி வணக்கம் சொல்லிக் கொண்டவரும். அண்ணனும் மிகவும் ரகசியமான குரலில் பேசிக் கொண்டனர். கவனித்த நான் பிறகு அண்ணனிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற நிணைப்பில் என்னை விசாரித்தவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

ஒருவழியாக  பேச்சு ஓய்ந்த பின்...சுடுகாட்டுவரை போகனுமான்ணே னு கேட்டபோது.... வேறு வேலை இருக்கான்ணே ன்னு என்னை திருப்பிக்கேட்டார்.. இல்லணே....என்றபோது பார்ப்பம் என்றார்

இறந்தவரை நாலு மணிக்கு மேல்தான் துாக்குவார்கள் என்பதால் அரைமணி  நேரத்துக்கு மேல் அமர்ந்துவிட்டு..கடைக்கு வந்துவிட்டோம். கடைக்கு அண்ணன் வந்ததும் பக்கத்து கடைக்காரரும் வந்தமர்ந்திருந்தார். இருவரும் இறந்தவரை பற்றி பேசினார்கள்....அவர்களின் பேச்சிலிருந்து நான் தெரிந்து கொண்டது.

இறந்தவர் அந்த ஏரியாவில் செல்வாக்கானவர். அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் நாலு ஆண்பிள்ளைகள். எல்லோருக்கும் திருமணம் முடித்து அவரவர்களுக்கு சேர வேண்டிய சொத்து பத்துக்களை செட்டில் பன்னிவிட்டு இவரும் மனைவியும் , தற்போது  போய்வந்த வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இறந்தவரின் மனைவி நாலு வருடத்திற்கு முன் இறந்துவிட்டார்.  இரண்டு தெருவுக்கு தள்ளியிருந்த மகளின் வீட்டிலிருந்ததான் அவர்க்கு உணவு வந்தது.  இப்படியாக அவரின் வண்டி ஓடிக் கொண்டியிருந்த வேளையில் பக்கத்து வீட்டில் குடியிருந்தவர்களின் மகள் திருமணமாகி ஒரு குழந்தையுடன்  கோபித்துக் கொண்டு தங்கிவிட்டவள்.

இறந்தவருக்கு சில உதவிகள் செய்ய..இவரும் அந்தப் பெண்ணுக்கு வேண்டிய காசு பணம் கொடுக்க...இப்படியாக அவர்களுக்குள் கசமுசாவாகி கூடா நட்பாகி எந்த இம்சையும் இல்லாமல் தொடர்ந்து வளர்ந்திருந்தது.

ஒரு கட்டத்தில்அந்தப் பெண்ணின் மாமனார் மாமியார் வீட்டார்களும், தாய் தந்தை விட்டாள்களும் சமரசம் பேசி அழைத்து செல்ல வந்தபோது.. கணவர் வீட்டுக்கு செல்ல மறுத்தாள். பிறகு எப்படியோ ஒரு தடவைக்கு இரு தடவை பேசி அந்தப் பெண்னை கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

அப்படி அந்தப் பெண் சென்ற ஒரு வாரத்தில் கணவர் வீட்டில் பிரச்சனை எழுந்தது. அவளின் கணவன்தான் பிரச்சனையை கிளப்பினான். குழந்தை பிறந்த நாள் முதல்  தாய் வீட்டுக்கு சென்றவள்... கர்ப்பமாக இருக்கிறாள். இந்த கர்ப்பத்துக்கு யார் காரணம்.... அந்தப் பெண்ணும் இறந்தவரை காட்டிக் கொடுக்கவில்லை...திரும்பவும் தாய் வீட்டுக்கே திரும்பி விட்டாள்... தாய் வீட்டில் அந்த கர்ப்பத்துக்கு காரணம் யார் என்று கேட்டு பல வழிகளில் இம்சை படுத்தப்படுகிறாள்.

இறந்தவர், அவள்  கர்ப்பத்தை கலைக்க முயன்றபோது..அது எல்லை கடந்தாகிவிட்டது என்பது தெரிய வருகிறது. .என்ன செய்வது உங்களை சொல்லட்டுமா  ?என்று அவள் அவரிடம் கேடகிறாள். அவர் யோசிக்கிறார்.

தன் செல்வாக்காலும் தன் மகன் மகள்கள் செல்வாக்காலும்  தன்னை காப்பாற்றிக் கொள்ளலாம். அந்தப் பெண்ணனின் நிலையை எண்ணிப் பார்க்கிறார்.  முன்பின் யோசிக்காமல்  இருந்து விட்டோமே  என்று புலம்புகிறார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணை அழைத்து தன்னிடம் இருந்த அத்தனை பணத்தையும் கொடுத்து உன் கர்ப்பகத்துக்கு தான்தான் காரணம் என்று சொல்லி விடாதே!...வயதான காலத்தில் எனக்கு புத்தி கெட்டு போய்விட்டது.. நீயும் என்னுள் ஆசையை வளர்த்துவிட்டாய்...உன்னைச் சொல்லியும் குற்றமில்லை... சரி ,இனி பேசிப் பயனில்லை... என் மீது உனக்கு அன்பும் காதலும் உண்மையாய் இருந்தால் என்னை காட்டி கொடுத்துவிடாதே!
போய் வா என்று விட்டு ...மறு நிமிடமே தன் கதையை முடித்துக் கொண்டார்.

உணவு கொண்டு வந்த மகளின் பேரன் வருகிறான். தூக்கில் தொங்கும் தாத்தாவை காண்கிறான் தகவல் பரவுகிறது.  இதற்கிடையில் தன் மகளை தொடர் கண்காணித்து வந்த தாயும் தந்தையும் தன் மகள் பணக்கட்டுடன்
இறந்தவரின் வீட்டிலிருந்து வருவதை காண்கிறார்கள். மகள் திருடிக் கொண்டு வருகிறாள் என்று  உதைத்தவர்கள்..  மகளின் வாக்கு மூலத்தை கேட்டவர்கள் அமைதியாகிவிட்டார்கள்...

பின் இறந்தவர் பிள்ளைகளின் செல்வாக்கால்..ஒரு தற்கொலை இயற்கை மரணமாக்கப்பட்டது.... இறந்தவரின் மரணத்தின் ஊடே இரு வீட்டார்களும் அமைதியாகிவிட  அரசல்புரசலாக ..  இரகசியமான இந்த விபரம்.  போன இடத்தில் எனக்கு தெரியவர... இந்த விபரம் என் மூலமாக  தங்களுக்கும் இந்த உலகத்துக்கும்   தெரிந்துவிட்டது. 

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...