பக்கங்கள்

வெள்ளி 05 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-4



பிறந்ததிலிருந்து இன்று வரை அவருக்கு கவலை, துயரம், ஏக்கம், சந்தோசங்களைவிட...மற்றவர்களால் ஏற்படுத்தப்பட்ட, கொடுக்கப்பட்ட இம்சைகள்தான் அதிகம்....எவருடைய உதவி இன்றி அவருக்கு தெரிந்த வழியில் அந்த இம்சைகளை எதிர் கொண்டே வருகிறார் இம்சை கொடுப்பவர்களும் எந்தவித விதிமுறையின்றி, நேர்மையின்றியே தொடர்ந்து இம்சைகள் கொடுத்து வந்தார்கள்..அவரின் தாய் தந்தை காலத்திலிருந்து வாரிசு உரிமைப்படி இம்சைகளும் தொடர்ந்து வருகின்றன.

அவருடைய தாயார் சொல்வார் தெரு நாட்டாமையும் தெருக்கோயிலின் பூசாரியுமான குருசாமியின் அப்பா மூக்கன்  தெரு நாட்டாமையாக இருந்த போது கோயில் விவகாரத்தில் அவரின் தந்தையையும் அவரின் தாயையும் செருப்பால்  சட்சட்டென்று   அடித்துவிடுவானாம்...செல்போன் காலத்தில் வேடிக்கை பார்ப்பதோடு நில்லாமல் படம் பிடிக்கும் கூட்டம் இன்றைக்கு இருப்பது போல்தான் அன்றும் அந்தத் தெருவின் கூட்டமும் வேடிக்கை பார்த்து கண்களால் படம் பிடிப்பார்கள்....அவரின் தாய் தந்தை அடி வாங்கியதொடு ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆட்பட்டு அமைதியாக இருந்து விடுவார்கள்.

ஆனால் இவருடைய காலத்தில்   மூக்கன் மகன் குருசாமியையும்சரி... குருசாமியின் மகன்களான செல்லமணி மற்றும்  செல்லமணியின் தம்பி தம்பிகள் மனைவிமார்கள் படை கட்டி வந்தாலும் அடாவடியாக பொய் புகார் கொடுத்தாலும்  பலவித இம்சைகளை ஒருவர் மாற்றி விடாமல் கொடுத்து வந்தாலும் ஒத்தை ஆளாக இருந்து கடுமையாக போராடி எதிர்த்தே வந்துள்ளார்.

அவருடைய வீடு கூரை வீடாக இருந்த காலத்தில்...அவருடைய வீட்டீன் முன் உள்ள காலி இடத்தை அபகரிக்க முயன்றபோது..தாயும் மகனுமாக எதிர்த்ததினால் அன்று இரவே தன் வைப்பாட்டியும் வடிவேலுவின் மனைவியுமான பெத்தம்மாள் மூலம் தீவைத்து விட்டான் குருசாமி அன்று அந்தத் தெருவில் அரசாங்க வேலை பார்த்து வந்தவர்கள் குருசாமியும் வடிவேலு மட்டும்தான் குருசாமி மின்சார வாரியத்திலும் வடிவேலு போக்குவரத்து துறையிலும் இருந்தவர்கள்...அன்றைய பண பலத்தாலும் ஆள்பலத்தாலும் அவரையும் அவரின் தாயையும் தந்தையின் உடன் பிறந்த இருவரையும் மதுரை மத்திய சிறையில் தள்ளியவன்... இரண்டவது தடவை கூரை வீட்டுக்கு தீ வைத்த போது சுதாகரித்த அவர் அன்றைய காவல் நிலைய அதிகாரியிடம் சண்டையிட்டு அவரிடம் அடி வாங்கியதால் தாயுடன் அவரையும் பொய் வழக்கில் வழக்கு போட்டாலும் பணம் கொடுத்து தப்பிக்க நிணைத்த .குருசாமியுடன் வடிவேலு, பெத்தாம்மாள் அவர்களயும் சேர்த்து மதுரை மத்திய சிறைக்கு தள்ளச் செய்தார்

முதல் தீ வைப்பு சம்பவத்தின் போது.. பாதிக்கப்பட்டபோதும். குருசாமி,பெத்தம்மாள் இவர்களின் சதிராட்ட பணபலத்தால்தான முதன் முதலாக அவரும் அவரின் தாயாரும் சிறைக்கு சென்று வந்து அனுபவம் பெற்றார்கள். முதல் தீ வைப்பு வழக்கு அவருக்கு சாதகமாக இருந்தும் அவருடைய தந்தையின் சகோதாரர்களின் துரோகத்தால் அந்த வழக்கை அன்று அவர் வாபஸ் பெற வேண்டிய நிலை ஏற்ப்பட்டது....

ஆக..குருசாமியின் அப்பா மூக்கன் காலத்திலிருந்தே..அவர்களின் இம்சைகள் ஆலமர விழுதுகள் போல  தொடர்ந்து  வளர்ந்து வந்து கொண்டு இருக்கிறது...... குருசாமியின் குடும்பத்தார்கள் வாயில் வெட்டு குத்து என்று மிரட்டினாலும் வாயில் வடை சுட்டாலும் இவர் பதிலுக்கு வெட்டு குத்து என்ற கோதாவில் இறங்காமல்...சட்டபூர்வ சட்ட போராட்ட முறைகளைகே் கொண்டே தொடர்ச்சியாக தந்து கொண்டிருக்கும் இம்சைகளை சிலவகைகளை முறியடித்தும் பல வகைகளை தடுத்துமாக அணைத்து வகையான இம்சைகளை எதிர்த்து போராடிக் கொண்டே வருகிறார்

...........
அதிலொரு இம்சைதான் அவர் வீட்டுக்கு பாதாள சாக்கடை இணைப்பை கொடுக்க விடாமல் தடுத்தது...

புதன் 03 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-3

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனால்... அங்கிருந்து பல கொடுமைகள் குத்தாட்டம் போட்டு வந்துச்சாம் என்பது மாதிரி.. பிரச்சினை வேண்டாம் என்று ஒதுங்கி போனவனை தடுத்து பிரச்சினை பன்னினான் ஒருவன்.. பிரச்சினையைக் கண்டு பயந்தால் நம்மை இவர்கள் தொலைத்து கட்டிவிடுவான்கள் என்று  நிணைத்து இவரும் தயராக இருந்தார்.

அவர் எதிர்த்து தயராக இருப்பது தெரிந்ததும் அடியாள் படை  படிப்படியாக பின் வாங்கியது... அந்தப்படையில் இருந்த ஒருவன்... குடிபோதையில் தாறுமறாக அவரை திட்டி தீர்த்தான்... குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்ற அனுபவத்தில் இவர் பேசாமல் இருந்தார். அந்தக் குடிகாரின் வசவுகளை ஒலிப்பதிவு செய்து  குடிகாரனின் உறவினர் ஒருவருக்கு போட்டு காட்டி போலீசில் புகார் செய்யப் போகிறேன் என்றார்.

மறுநாள் காலையில் மாநகராட்சி உதவிப் பொறியாளரை போய் பார்த்தார். குருசாமி என்பவர் தெருப்பாதையை தன் பாதை என்று போட்ட வழக்கின் தீர்ப்புரையைக் கொண்டு.. பணத்தை தயார் செய்துவிட்டேன் என் வீட்டுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க வேண்டும் என்றார். தேவையானவைகளை சாமான்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் நாளை இணைப்பு கொடுத்து விடலாம் என்றார்

அன்று இரவே பாதாள சாக்கடை இணைப்புக்கு தேவையான எல்லா சாமான்களையும் வாங்கி  விட்டார் காலையில் மாநகராட்சி உரிமம் பெற்ற பிளம்பரின் வேலை ஆட்களுடன் வேலை தொடங்கிய போது... அவரின் வீடு மற்றும் இடம் சம்பந்தமாக வழக்கு போட்டு 22வருடமாக நிலுவையில் இருந்து நான்கு மாதங்களுக்கு முன் டிஸ்மிஸ் டிபால் ஆன வழக்கின் வாதி செத்துப்போன அய்யணன் அம்பலத்தின் மகன் ஜெயராமன்.. பாதாளசாக்கடை இணைப்பு வேலையை தடுத்தான்... அவனுக்கு தெரிந்த உறவுக்கார போலீசை கூப்பிட்டு வேலையை தடுத்தான்...ஜெயராமனின் உடன் வந்த போலீசுகாரரின் பெயரை கேட்டு  பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கலாம் என்ற நீதிமன்ற தீர்ப்பை படித்து பார்க்க கொடுத்த போது... நீங்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்ளாமல் தடுப்பதற்கே வந்துள்ளேன். நீங்கள் காவல் நிலையத்திற்கு சென்று பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுங்கள். என்று சொல்லி விட்டு மாயமாய் மறைந்து போய்விட்டார்.

காவல் நிலையத்த்தில் அய்யணன் அம்பலம் மகன் கொடுத்த புகாருக்கு பதில் சொல்லி.. ஜெயராமின் வழக்கு டிஸ்மிஸ் ஆன தீர்ப்புரையை உதவி காவல் ஆய்வாளரிடம் காட்டினார். படித்துப் பார்த்த உதவி காவல் ஆய்வாளர். ஜெயராமனிடம் நீங்கள் மேல் முறையீடு செய்து இருக்கிறீர்களா என்று கேட்டார். ஜெயராமன் ஆமாம் என்றான்.. அதை காட்டுங்கள் என்றார். கையை விரித்தான் ஜெயராமன்....உடனே உதவி காவல் ஆய்வாளர் கை செய்கையால் ஓடிப்போயிரு என்றார். இவரைப் பார்த்து  வேலையை செய்யுங்கள் என்று அனுப்பினார்

வீட்டுக்கு வந்து போய்விட்ட வேலைக்காரர்களை திரும்ப அழைத்து வந்து வேலையை தொடங்கிய போது... குருசாமி, குருசாமி மகன் செல்லமணி, மற்றும் அவன் குடும்பத்தார்கள் அனைவரும் வரிசைகட்டி நின்றார்கள்.

.




குறிப்பு..  சதியின் காரணமான  போன் இணைப்பு வயர் வழக்கம்போல.. துண்டிக்கப்பட்டு..இன்றுதான் இணைப்பு கிடைத்தது... பதிவு தொடரும்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...