பக்கங்கள்

சனி 26 2016

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வ்வ்வுவுவும்

.........................................
..........................................
............................................








டேய்..தம்பி..... அங்க என்னடா..பார்க்கிற.....

பாக்கலணே்ணே.... படிக்கிறேண்ணே........

என்ன படிக்கிறிய்யா... அப்படி என்னத்தடா..படிக்கிற.....

தர்மத்தின் வாழ்வு  தன்னை சூது கவ்வு..ம்.. தர்மம் மறுபடியும் வெற்றி பெருமுன்னு கடையில  எழுதி இருக்கிறத படிச்சண்ணே....

அந்த ஜெராக்ஸ் கடை யாருதுன்னு தெரியுமாடா..???

 தெரியாதுண்ணே... ஆமா..யாருதுண்ணே......


முன்னால் மாநகராட்சியில மண்டலத் தலவராயிருந்த முனியாண்டியுடையதுடா.....

ஓ.... அவரா....ஆமாண்ணே... இந்த முனியாண்டி..மீண்டும் மண்டலத் தலைவரா வந்திருவாரா ..ண்ணே.........

ஏ....ஏன்டா   கேக்கிறடா............

 அவர் கடையிலதான் தர்மம் மீண்டும் வெற்றி பெறும்ன்னு எழுதியிருக்காருலே..அதப் படிச்சதுனால கேக்குறேண்ணே........

சரியாய்..போச்சுடா..... ஒனக்கு அம்புட்டு..அறிவா..... நீயெல்லாம் இங்கு இருக்கிற ஆளே  இல்லடா...நீ......

அப்போ நா.....அமெரிக்காவுல இருக்கிற ஆளாண்ணே.....

அங்க இல்லடா..வெண்ணே..............

அப்போ..எங்க  இருக்க வேண்டியவன்ணே.......

அப்பல்லோ..ஆசுபத்திரியில  இருக்க வேண்டியவன்டா வௌக்கண்ணே..

அங்க போயி இறக்கிறது... அம்புட்டு காசோ..செல்வாக்கோ  இருந்தா...நா.... ஏண்ணே..... தர்மம் மீண்டும் வெல்லுமாண்ணே ன்னு உங்ககிட்ட கேட்கப்போறேன்........

அய்யோ...சாமி...... என்ன ஆள விடுறா........

இப்போ என்ன ..சொன்னிங்கண்ணே.....

நா........ ஒன்னுமே  சொல்லலடா..சாமி........

என்னண்ணே..என்னைய போயி...சாமி..பூமின்னு.......

 டேய்..... தம்பி..... என்ன விட்டுறா...... ஒரே ஒட்டமா போயிடறேன்டா.....

எங்கண்ணே...ஓடப் போறீங்க.......

வீட்டுக்குடா.....................

அண்ணே....... அண்ணே.........



வெள்ளி 25 2016

சார்...உங்களுக்கு நான்தான் கிடைச்சேனா....

............................
.........................
...........................










சார்..என்ன
சார் இது

ஐநூறு ரூபாய
கொடுக்குறிங்க...ஏன்
சார்  இப்படி
உங்களால மாத்த
முடியலான உங்களுக்கு
நான்தான் கிடைச்சேனா..
இன்றில்  இருந்து
ஐநூறு ஓவா
செல்லாதுன்னு ஒங்க
பங்காளிக சொல்லிடாங்கே
சார்  போங்க
ஐநூற உங்க
மியூத்துல வச்சுகிட்டு
எனக்கு வேற
நூறு ரூபாயா
கொடுங்க சார்..

வியாழன் 24 2016

கோபம் கம்யூட்டரை உடைக்கும்.........


........................
...........................
..........................
.........................





நான் பிறந்து
நடந்த பின்
என் தாயருக்கு
பயந்தேன்.அடுத்து

என் தெருவின்
நாட்டாமை காரனின்
வைப்பாட்டிகளுக்கு பயந்து
இருந்தேன். பெரிய

ஆளாக அதாவது
அய்ந்தடியாக வளர்நத
பின் தெருவில்
உள்ள சிறிய
பெரிய பொம்பள
ரவுடி மார்களுக்கு
பயந்து இருந்தேன்.

இடப் பிரச்சினையால்
தொடர்ச்சியாக பொய்
வழக்கு போடும்
போலீசுக்கும் பயந்து
கொண்டு இருந்தேன்

கடைசியாக என்
அம்மாவின்  மகள்
வழி பேரன்களுக்கு
அதாவது என்
சகோதரியின் மகன்கள்
அதாவது என்
மருமகன் மருமகளுக்கு
பயந்து கொண்டு
இருக்கிறேன் ஏன்

என்றால் மோடியால்
ஏற்பட்ட பண
நெருக்கடியால் கோபம்
கொண்ட என்
மருமகன் நான்
பயன் படுத்தும்
கம்யூட்டரை உடைத்து
விட்டார்.வெளியே

சென்ற நான்
வந்து பார்த்த
போது நான்
இல்லை நரி
இல்லை என்ற
கதையாகி போனது...

இதிலிருந்து நான்
தெரிந்து கொண்டது
கோபம் கம்யூட்டரை
உடைக்கும. என்று

செவ்வாய் 22 2016

கம்யூனிசம் வந்தால் யாருக்கு ஆபத்து???






கம்யூனிசம் வந்தால்
யாருக்கு ஆபத்து?

கம்யூனிசம் வந்தால்
பலர் உழைக்க
கோடி கோடியாய்
சுரண்டி சமூக
சொத்துக்களை திருடி
வைத்திருக்கும் பெரு
முதலாளிகளுக்கும் முதலாளித்துவ
வர்க்கத்துக்கும்தான் ஆபத்து.


கம்யூனிம் வந்தால்
அந்த முதலாளி
வர்க்க ஆட்சியால்
மறுக்கப் பட்டிருக்கும் அனைத்து
உரிமையுடன் கூடிய
சுகவாழ்வு சகலருக்கும்
கிடைக்கும் என்பதுதான்.



திங்கள் 21 2016

ஜோதிடத்தை எதிர்க்கும் இந்திய அரசமைப்பு சட்டம்...

நண்பரின் குடும்பத்தில பணக் கஷ்டம்.... அந்தக் கஷ்டம் மோடியால் ஏற்பட்டதென்று நண்பரின் குடும்பத்திற்கு தெரிந்திருந்தும்..  


நாட்டில் உள்ள பெரும்பாலானவர்கள் வேலைக்கும் கல்விக்கும், தொழிலுக்கும் திருமணத்திற்கும் ஜோதிடத்தை நம்பும்போது, நாம் . இந்தக் கஷ்டத்திற்க்கான காரணத்தை அறிந்து களைவதற்க்காகவும்  புலம்பிய மனைவிக்காகவும்  மனைவியை அழைத்துக் கொண்டு  தன் பிள்ளையின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு பால குருசி ஜோதிடரை காணச் சென்றார்.

.  அந்தச் ஜோதிடர்  இவர்களைின் மனநிலை அறிந்து அதற்கேற்ப ஆறுதலும் மனநிறைவையும் தன்னுடைய சொல் சாமர்த்தியத்தால் இவர்களுக்கு தற்காலிக மகிழ்ச்சியை கொடுத்து. அதற்கான பரிகாரம் செய்யச் சொல்லி இவர்களிடம் அவருக்கான தொகையைப் பெற்றுக் கொண்டார்.

அந்த நண்பரை சந்திக்க சென்ற போது... அவர் வீட்டில் சில பரிகாரங்களை செய்து கொண்டு இருந்ததைக் கண்டு. விசாரித்த போது  மேற்கண்ட விபரத்தை சொன்னார்....அவரிடம் நான் வந்த விபரத்தை சொல்லிவிட்டு திரும்பி விட்டேன்.

சில நாட்கள் கழித்து என்னை பார்க்க வந்தபோது... அவரிடம் சொன்னேன்.

அய்யா...தாங்கள் என்னைவிட  கல்லூரி படிப்பு படித்தவர். ஜோதிடம் ஒரு மூட நம்பிக்கை என்பது தெரியாதா....ஒரு தகவலைச் சொல்கிறேன் கேளுங்கள் . 

மக்களிடம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்பு சட்த்தின் பிரிவு 51A(h) கூறுகிறது. அரசியல் சாசனத்திலேயே, அறிவியல் மனப்பான்மை வளர்க்கச் சொல்லும் ஒரே நாடு இந்தியாதான்..

ஆனால் நாட்டை ஆளவந்தவர்களோ..இந்த விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதமாக செயல்படுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அரசு உறுப்புகளோ...சடங்கு, சம்பிரதாயம், நாள் , நேரம், நட்சத்திரம் பார்த்து அரசு வேலைகளை செய்யம்போது... உங்களை மாதிரியான படித்த ஆட்களால் எப்படி விஞ்ஞானம் வளரும்...

இந்தியாவின் முதல் பிரதமர் நேரு..ஜோதிடம், ஜாதகம் கணிப்பவர்கள் மிகவும் நாட்டுக்கே ஆபத்தானவர்கள் என்று பேசி இருக்கிறார். அப்படிபட்ட நாட்டுக்கே ஆபத்தானவர்கள்  உங்க வீட்டுக்கு  மட்டும் எப்படி ஆபத்தானவர்களாக..இல்லமால் இருப்பார்கள்...

இன்னும் ஏன், ஜோதிடம் ஒரு மூடநம்பிக்கை, என்று பார்ப்பன ராஜகொபால யச்சாரியும், “ ஜோதிடந்தனை இகழ்” என்று பார்ப்பன பாரதியும் பாடியும் எழுதியுள்ளனர்....பார்ப்பன பண்டாரங்களே ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு பொய்யும் புரட்டும் பித்தலாட்டமும் நிறைந்ததுதான் ஜோதிடமும் ஜாதகமும்..


500 ரூபா 1000ரூபா செல்லாதுன்னு அறிவித்த மோடியின் சதியால்தான்... இந்தக் கஷ்டம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல தெரிந்திருப்பது தங்களுக்கு தெரியாமல் போன தேன் .. என்று கேட்டபோது...

நண்பர் எதிர்த்து எதுவும்  கேள்விக்கனை கொடுக்காமல்  மௌனமாக இருந்தார்.

பிறிதொரு நாளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போது என் மீது அம்பு எய்துவார்...

ஞாயிறு 20 2016

இழிபிறவியை தேர்ந்தெடுத்த அதி மேதாவிகள்...








அந்த தொலைக்காட்சியை
பார்த்த போது
ஒரு அமெரிக்கத்
தாய் அழுது
கொண்டு இருந்தார்
அந்தத் தாய்
அழுத காரணம்
அப்போது எனக்கு
 புரியவில்லை  இந்திய
பாராளுமன்ற மூலம்
புரட்சியை விரட்டிச்
சென்று பிடித்து
விடலாம் என்று
பாடம் நடத்தும்
கட்சியை சேர்ந்த
நண்பர் ஒருவர்
அமெரிக்க மேதாவிகளை
விட இந்திய
பாமரர்கள் பரவாயில்லை
என்று சொன்ன
பிறகுதான் புரிந்தது.

120  மில்லியன்
அமெரிக்கர்கள். தங்கள்
சனநாயக கடமையை
செவ்வனே ஆற்றி
முடித்து விட்டார்கள்

வெளி வந்த
முடிவைக் கண்டு
உலகம் மட்டும்
அல்ல வாக்களித்த
அமெரிக்கர்களே அதிர்ந்து
போய் நிற்கிறார்கள்
ஒரு வக்கிரமான
பாலியல் வெறி
பிடித்த அதிபரை
தேர்ந்து  எடுத்து
இருக்கிறோம் என்று..



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...