பக்கங்கள்

வியாழன் 28 2013

புடலங்கா சட்டமும் ரப்பர் நீதியும்........



 மனித உரிமை ஆர்வலர்களுக்கும்,பொது நல விறும்பிகளுக்கும் சமூகத்தில் நிலவும் கொடுமைகளுக்கு முடிவு காண கடைசி 
வாய்ப்பாக அனுகுவது நீதி மன்றங்களைத்தான்.

அந்த நீதிமன்றங்களோ, புடலங்கா  மாதிரி சட்டத்துக்குள் 
வளைந்துகுலைந்து  அது வழங்கும் நீதியும் ரப்பர் மாதிரி நீண்டு கடைசியில் டப்பென்று அறுந்து போகும் அளவிற்கு இருக்கிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஒன்றான ஆசிட் 
வீச்சு குற்றங்களை தடுப்பதற்க்காக. ஈரோட்டை சேர்ந்த மனித 
உரிமை ஆர்வலர் சாந்தி என்பவர்.

மனிதர்களுக்கு கொடிய விளைவுகளை ஏற்ப்படுத்தக்கூடிய ஆசிட் வகைகளின் விற்பனையை கட்டுப்படுத்தவும் தாராளமாக கிடைப்பதை தடை செய்யவும் மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும் 
என்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தள்ள மனுவில் கூறியுள்ளார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி லட்சுமி என்பவரும் உச்சி 
மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் தாக்கலான வழக்கில்  மத்திய அரசின் சார்பாக ஆஜரான சொலிசிடர் ஜெனரல்..குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டள்ளது. இது 
பற்றி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார்.

தமிழக அரசின் சார்பாக ஆஜரான தலைமை வழுக்குரைஞர். ஆசிட் வீச்சில் பலியானவர் குடும்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா இழப்பிடு அளித்தள்ளார். ஆசிட் வீச்சு தொடர்பாக தமிழக அரசு ஒரு சட்டத்தை கொண்டவர உள்ளது என்று கூறினார்.

உயர்மன்ற நிதிபதியோ, உச்ச மன்றத்திலும் 
உயர்நீதிமனறத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள 
மனுக்கள் ஒரே தன்மையை கொண்டவையா? 
என்பதை ஆறாய்வதற்க்காக வழக்கின் 
விசாரனையை மார்ச் 13க்கு தள்ளிவைத்தார்.

இந்த ஆசிட் விச்சில் பாதிக்கப்படுவது போல்தான் 
அரசின் தனியார்மயம். தாராளமயம்,உலகமயம் என்ற 
புதிய பொருளாதார கொள்கையினால் நாட்டின் பொது 
சொத்துக்களான பொதுத்துறைகள்  தொழிற்சாலைகள், 
தண்ணீர் முதலானவற்றை அடிமாட்டு விலைக்கு 
விற்கப்படுகின்றன.விவசாயிகளின் நிலங்களை அடிமாட்டு
விலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டும்  நாடே படுபாதக 
பயங்கரமான கொடுமைகளுக்கு ஆளாகி பெரும்பாண்மையான விவசாயிகளும்,தொழிலாளர்களும்.அன்றாட காய்ச்சிகளும் 
தின்ம்தினம் செத்து செத்து பிழைத்து வருகின்றனர்.இவற்றை 
எதிர்த்து  மனித உரிமை ஆர்வலர்களும்,பொதுநல 
விறும்பிகளும் உச்ச-உயர் நீதி மன்றங்களில் வழக்கு 
தாக்கல் செய்யும்போது

இதே உச்ச-உயர் (அ) நீதிமன்றங்கள். அரசின் கொள்கை 
முடிவகளில் தலையிட விரும்பவில்லை என்று ஒதுங்கி 
கொள்கிறது. அபூர்வமான ஒருசில வழக்குகளில் நுழைந்தாலும்  
புடலங்கா சட்டத்தில் அது வழங்கும் நீதியும் ரப்பராக நீண்டு 
கொண்டு செல்கிறது....

தப்பித்தவறி உத்தரவு இட்டாலும் அதை அமுல் படுத்த 
வலு இல்லாமல் கெஞ்சி புலம்புகிறது.

செவ்வாய் 26 2013

பத்து ரூபாயில் முடிந்த திருமணம்........!!!


பிரபலமான தலைவராக இருந்தும் தமிழ்நாட்டின் எம்.எல்.ஏவாக இருந்தபோதிலும் வாடகை குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

இவருடைய திருமணம் .சென்னை யில் கட்சி ஊழியர்கள்
தங்கியிருந்த சிறிய விடுதியில் இரண்டு மாலைகளை ஒருவர்
கழுத்தில் ஒருவர் அணிந்தவுடன் திருமணம் முடிந்தது.

திருமண விருந்தாக பத்து லட்டுகளை வாங்கி துாளாக்கி
திருமணத்தில் கலந்து கொண்ட 30 பேர்களுக்கு பங்கிட்டு
கொடுத்து கூடவே தேநீரும் வழங்கப்பட்டது.

 வாழ்த்துரைகளோ, நன்றியுரைகளோ, எதுவும் இல்லாது
நான்கைந்து நிமிடத்தில் பத்து ரூபாய் செலவில் முடிந்தது.

இவரின் கவிதையில் ஒன்று.................

நல்லாரை உழைப்போரை பறையென்றார்
நயவஞ்சக முடையோரை மேல் ஜாதியென்றார்
பொல்லாத கொடியவரை மன்னரென்றார்
பொய்யுரைத்த கொடியவரை குறுக்களரென்றார்
                                         --ப.ஜீவானந்தம்

திங்கள் 25 2013

இல்லாத ஊருக்கு வழி சொல்லும். இடது சொரிக்கட்சி.........


இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் பிரச்சினையையும் தமிழகத்தில் நடக்கவிருக்கும் ஆசிய தடகள விளையாட்டுப்
போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை வீரர்களின் 
வருகையையும் ஒன்றாக இணைத்து பார்க்கக்கூடாது 
என்று புர்ச்சி தலவி ஆளும் தமிழக அரசைக் தமிழகத்து 
இடது சொரிக்கடசி யின் செயலர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்து இடது சொரிக்கட்சியின் செயலரின் கூற்றுப்படி.இந்தியாவில்1991ல் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 
புதிய பொருளாதாரக் கொள்கையால் ஏழை எளிய மக்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்..வேலை வாய்ப்பின் வளர்ச்சி 
விகிதம் குறைந்துகொண்டே செல்கிறது. வறுமை அதிகரித்து 
கொண்டே வருகிறது. நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு 
உற்ப்பத்தி குறைந்து வண்ணம் உள்ளது. இதற்கு காரணம் தனியார்மயம்.தாராளமயம்,உலகமயம், புதிய பொருளாதாரக் கொள்கைகள்தான் காரணம் . சரி என்றாலும்
 
வறுமை பெருகிபெருகி வரும் நாட்டிற்கு ஆசிய தடகள 
விளையாட்டு போட்டி ஒரு கேடா? என்று  கேள்வி கேட்க 
தமிழக இடதுசொரிக்கட்சி முதுகெலும்பு இல்லை.. அப்படியான 
திட்டமும் கொள்கையுமில்லை. அரசியல் பார்வையும் இல்லை அதனால்தான் மனித உரிமையை மீறி படுபாதக கொலைகள் 
செய்த இலங்கை நாட்டு  தடகள  விளையாட்டு வீரர்கள் 
பங்கு கொள்ளும் ஆசிய தடகள விளையாட்டை தடை செய்வதாக  
புர்ச்சி தலவியின் உதாரைக்கூட புரிந்து கொள்ளமுடியாமல் 
தடை செய்யாதீர்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

புதிய பொருளாதாரக் கொள்கையின் பாதிப்பை விளக்கியும்,
மாற்றுப் பாதைக்கான வழியை வலியுறுத்தியும். தேசிய 
அளவில் பிரச்சார பயணம் மேற்க்கொள்ளப்பட உள்ளதாகவும் 
இடது சொரிக்கட்சியின் செயலர் கூறுகிறார்.

புதிய பொருளாதாரப் பாதிப்பகளை விளக்கி தேசிய அளவில் 
பிரச்சார பயணம் மேற்க்கொண்டாலும் பாதிப்பகளை களைய 
இவர்கள் சொல்லும் மாற்றுப்பாதை என்ன?

இவர்களின் மாற்றப்பாதை என்னவென்றால், இடது சொரிக்கட்சிக்கு
ஓட்டு போட்டு  தேர்ந்தெடுத்தால் இவர்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவுடன் புதிய பொருளாதார பாதிப்புகளை 
போக்கிவிடுவார்களாம்.

கூரை ஏறி கோழியை பிடிக்க முடியாதவன், வானம் ஏறி 
வையகத்தை புடிப்பானாம் – இந்த சொல்வடையே 
இவர்களுக்குதான் படைக்கப்பட்டது இந்த இடது சொரிக்கடசி 
ஆண்ட இரு மாநிலத்திலும் புதிய பொருளாதாரத்தை எதிர்க்க துப்பில்லாமல் அமுல்படுத்தி அதற்கு வியாக்கினமும் 
சொன்னவர்கள் இவர்கள்.இவர்களின் மூதாயைர்களின் 
கட்சியான காங்கிரஸ்.பாரதிய ஜனதா. கட்சிகளை மாதிரியே 
மாநிலத்துக்கு ஒரு கொள்கையும் கோட்பாடும் கொண்டவர்கள். 
இவர்கள் பிரச்சார பயணம் மேற்க்கொண்டு புதிய பொருளாதார பாதிப்புகளை போக்கப் போகிறார்களாம்


உள்ளங்கையில் நெய் என்று எழுதி. அதை நாக்கால் நக்கி 
பார்த்து அது இனித்தால் இடது சொரிக்கட்சி சொல்லும் 
மாற்றுப்பாதையை நம்பலாம்.

இந்த இடது சொரிக்கட்சி ஆட்சிக்கட்டிலில் அமர ஒரு வழி 
இருக்கு,அந்த வழியை விட்டால் வேறு எந்த வழியிலும் 
ஆட்சிக்கட்டில் அமர வாய்ப்பே இல்லை. அந்த ஒரே வழி  
கொள்கைக்கும் நடைமுறைக்கும் ஒத்து இல்லாத 
மாமேதையின் பெயரையும் அவர்கள் சொன்ன 
கோட்பாட்டிலுள்ள பெயரையும் நீக்கி விட்டு ,நவீன 
அறிவியலின் வாஸ்து சாஸ்திரப்படி வேறு பெயரை 
கட்சிக்கு சூட்டிக்கொண்டால் .. அடுத்த தேர்தலில் 
ஆட்சிக்கட்டிலில் அமரலாம்.

பிறகு தங்களது ஆட்சியில் தேனாறும் பாலாறும் ஓடுகிறதென்று, மே.வங்கத்தைப்பார், கேரளாவைப்பார் என்று சொல்லத்
தேவையில்லாமல் இந்தியாவைப்பார் என்று ஒலக நாடுகளிடம் 
மார்தட்டி சொல்லலாம்.


ஞாயிறு 24 2013

ஆடுகளைப்பற்றி கவலைப்படும் ஓநாய்கள்........



தமிழ் நாட்டில் சாதி வெறி சங்கங்களை இணைத்து அதன்மூலம் சாதித்தீயை வளர்த்து அதன்மூலமாகவாவது ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு ஒரு  பிளான்போட்டு காயை நகர்த்தி வருபவர் கொய்யா என்ற கிழம்.

இந்தக் கொய்யா . தமிழ்நாட்டிலுள்ள  அடக்கப்பட்டவர்களை அடக்கி வைக்க வேண்டும் என்றும், ஒதுக்கப்பட்டவர்களை ஒதுக்கியே வைக்க வேண்டும் என்றும் மூச்சுக்கு முன்னூறுதடவை பேசி வருபவர்.

இவரு, இலங்கையின் கொலைகார அரசால் அடக்கப்பட்ட.,ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்தை கொன்றதற்க்காக “போர் குற்ற விசாரனை நடத்தக்கோரிஅதுவும் இந்திய அரசே நடத்த வேண்டி 26மதேதி போர் ஆட்டம் நடத்தப்போறாராம்.

கொய்யா நட்த்தும் போராட்டம் “ஆடு நனைகிறதே என்று,ஓநாய் கவலைப்படுகிற மாதிரி இருக்கிறது.

கொலைகாரனிடமே கொலையை விசாரிக்க வேண்டி 
போராட்டமாம்.ஒருபக்கம் சாதிவெறி வளர்ப்பு  பிற்போக்கு
போராட்டம், மறுபக்கம்  அடக்கப்பட்ட இனத்திற்க்காக  
முற்போக்கு போரட்டம்.இதைத்தான் பச்சோந்தி பேராட்டம் 
என்று சொல்வார்கள்.இப்படி பச்சோந்தி போராட்டம் 
நடத்துபவர்களை பச்சோந்தி என்று அழைக்காமல் வேறு 
எப்படி அழைப்பார்கள்..............





ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...