பக்கங்கள்

சனி 19 2015

நவீன பங்களா சேரி...!!!!!!!!



சென்னை நகரில் தூக்கி எறியப்படும் மக்களுக்காக காத்திருக்கிறது செம்மஞ்சேரியின் புதிய குடியிருப்புகள்!
மேலும் படிக்க-----செம்மஞ்சேரி அவலம்


சிங்காரச் சென்னைக்கு பொருத்தமில்லாத குடிசை மக்களுக்கு வீடு கட்டி தருவதாக கூறி அவர்களை மாநகருக்கு வெளியே தூக்கி எறிந்து கட்டப்பட்டதுதன் இந்த குடியிருப்பு. 

சுமார் 7500-க்கு மேற்பட்ட தீப்பெட்டி போன்று தோற்றமளிக்கும் குடியிருப்புகளை உள்ளடக்கி அரசால் உருவாக்கப்பட்டுள்ளதுதான் இந்த நவீன சேரி.

வெள்ளி 18 2015

பீப் பாடல் தொடக்கம் அல்ல...அது கவிகளின் ..தொடர்ச்சி....

படம்-இந்தியாவின் ஏழு அதிசியங்களில் ஒன்று


Solomon Pathipooranam 2 புதிய படங்கள்இணைத்துள்ளார் — Vijayakumar R மற்றும் 39 பேர்பேர்களுடன்

நாடே மழை வெள்ளத்தில் மிதக்கும் போது,செம்பரம்பாக்கம் ஏரித் திறப்பைப் பற்றின விவாதத்தின் போது.உலக வர்த்தக கழகத்தில் நம் தேசத்தின் கல்வி பறிபோகும் அபாயமான இந்நேரத்தில்,மக்களை மீட்டெடுக்காமல் இவ்வரசு அம்பலப்பட்டு நிற்கும் தருவாயில்......

சொம்பு பாடலை ஒலிப்போரின் கவனத்திற்கு....

சொம்புப் பாடல் கண்டனத்திற்குரியதே......

ஆனாலும் சொம்பு தொடக்கம் அல்லஅது கவிகளின் தொடர்ச்சி,.......


“ஊடுதல் காமத்திற் கின்பம்
அதற்கின்பம் கூடி முயங்கிப் பெரின்”

கடா களிற்றின் மேல் கட்படாம்
மாதர் படாமுலை மேல்துகில்”

---திருவள்ளுவர்

தெங்கிடை கொண்ட கொங்கை
தேரிடை கொண்ட அல்குல்
யாரிடத்தும் கண்டொண்ணா பேரழகு
_கம்பர்.


எத்தனைப் பேர் நட்டக் குழி
எத்தனைப் பேர் தொட்ட முலை
எத்தனைப்பேர் பற்றி இழுத்த புல்லிதழ்கள்
_பட்டினத்தார்.


வின் முட்டும் மலை மீது
வின் மாரிப் பொழிகின்ற
கார்காலம் போல்
என் கண்முட்டும் முலை மீது
கண் மாரி பொழிகின்றது
-பொய்யாமொழி

‘மேகலை பொங்க மதாசல கும்பமெ னா
முலை கண்டு இடை சோரா 
--ஆதி சங்கரர்

‘சாயுடைவயிறும் என் தடமுலையும்
திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
தரணியில் தலை புகழ் தரக்கற்றியே’
--ஆண்டாள்


”சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது எப்படி”
“டாடி மம்மி வீட்டிலில்லை தடை போட-வாலி

நேத்து ராத்திரி யம்மா...முக்கல் முனகலோடு இசையமைப்பு -இளையரஜா.

வாடி வாடி நாட்டுக்கட்ட-கபிலன்

குறியை சப்பக் கொடுத்தாய்”
- லீனா மணிமேகலை.(அதிகார ஆண்குறியை மறைக்கும் விளம்பர யோனி !!)

முலைகலை (பெயர் போட்டு) விற்றது?-குட்டி ரேவதி,சுகிர்தா ராணி


படம்-www.tamilspy.com

வியாழன் 17 2015

மீண்டும் “ஆபரேசன் வெற்றி நோயாளி மரணம்”

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்
படம்-.அர்ச்சகர் பயிற்சி பெற்ற 206 மாணவர்கள்



அன்று
“அர்ச்சகர் நியமனத்தில் வாரிசு உரிமை கோரவியலாது” என்று கூறி சிவாச்சாரியார்களின் மனுவைத் தள்ளுபடி செய்தது 1971-ல் வழங்கப்பட்ட சேஷம்மாள் தீர்ப்பு. அது வெற்றி என்று கொண்டாடப்பட்டபோது, “ஆபரேசன் வெற்றி நோயாளி மரணம்” என்று அதனை அம்பலப்படுத்தினார் பெரியார். 

இன்று......
சேஷம்மாள் தீர்ப்புக்குப் பிறகு இன்று புற நிலைமையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், 206 பயிற்சி பெற்ற மாணவர்கள் தற்போது தயாராக இருக்கிறார்கள் என்பதுதான். இப்போதும், தி.மு.க அரசின் அரசாணையை ரத்து செய்யாமல் விட்டதன் மூலம், பார்ப்பன அர்ச்சகர்கள் தோற்று விட்டதைப் போன்றதொரு தோற்றத்தை இத்தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.


இது சேஷம்மாள் தீர்ப்பைக் காட்டிலும் ஒரு படி மேம்பட்ட, நுண்ணயமிக்க, தந்திரமான தீர்ப்பு என்பதே உண்மை. இதனை அம்பலப்படுத்துவதுதான் சாதி ஒழிப்பில் நம்பிக்கை கொண்ட பெரியாரின் வழிவந்த அனைவரின் பணியாகவும் இருக்க முடியும்.

புதன் 16 2015

சரக்குக்கு..வாட்ஸ்அப் வடை

படம்-www.iamstranger.com


அண்ணே....சரக்கு
இங்க  இருக்கயிலே
எங்க போறீங்கண்ணே....

டேய்  வெறும்
சரக்கு மட்டும்
போதுமா..இருடா
வாட்ஸ்அப் வடை
வாங்கிட்டு வர்றேன்.


செய்தி:-பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறதல் கூறாமல் ஜெயலலிதா வாட்ஸ்அப்பில் வடை சுடுகிறார்...ஸ்டாலின்தாக்கு

வாயில் வடை சுடுவது போல வாட்சப்பில் வடை சுடுகிறார் ஜெ. .......ஸ்டாலின் சாடல்


செவ்வாய் 15 2015

நிஜ வாழ்க்கையில் நிழல் உருவங்கள்.......

படம்-www.kovaiaavee.com

நிஜ வாழக்கையில்
நிழல் உருவங்களா..
அது எப்படி?
என்ற போது

அவர் இப்படிச்
சொன்னார் நிழல்
உருவங்கள் நிஜ
வாழ்க்கையில் செலுத்திய
செலுத்திக் கொண்டு
இருக்கிற நிலையைக்
காணும்   போது
விரிவான விளக்கம்
தேவையே  இல்லையே
என்றார் அவர்.

அந்த நிழல்
 உருவங்களில் ஒன்று
மறைந்த எம்ஜியார்.
இரண்டு ஜெயலலிதா...


படிக்க...எம்.ஜி.ஆர் : முழு வரலாறு !

திங்கள் 14 2015

போதையேற்ற அறிவை பயன்படுத்திய விதம்...

படம்-valaiyukam.blogspot.com


அவன் இந்தாண்டு பத்தாவது தேர்வு எழுதப் போகிறவன். யார் கற்று தந்த பாடமோ...,,அல்லது கண்ணால் கண்ட கற்றுணர்ந்ததோ..தெரியவில்லை.

அவனின் நண்பர்கள் குழு ஒன்று போதையேற்றுவதை முன்னிட்டு, சரக்கு வாங்க இவனை அனுப்பி வைத்தார்கள் ...

 சரக்கு கடையான அரசின் டாஸ்மாக்குக்கு வந்த அவனோ.. சர்வ சாதரணமாக ஒரு பிராண்டின் பெயரைச் சொல்லிக் கேட்டான்.

சரக்கு விற்பனையாளன். சட்டென்று அவன் சொன்ன பிராண்ட்-டை எடுத்தவன் திடிரென்று அவன் போதை தெளிந்தவன் போல்..

“ டேய் சின்னப்பயலுக்கு, பள்ளிக்கூடம் போற பயலுக்கு எல்லாம் சரக்கு கொடுக்கக்கூடாதுன்னு உத்தரவு..போடா” என்று சத்தம் போட்டு விரட்ட.

அவனோ.... அண்ணே... எனக்கு இல்லேண்ணே...அதோ..அங்க நிக்கிறாரு பாருங்க..அவருக்குண்ணே... அவருக்கு தெரிஞ்சவுங்க அங்கிட்டு நிக்கிறதால என்னய வாங்கி வரச் சொன்னாருண்ணே....என்று அளந்து விட்டான்.

இவனின் கதையை நம்பிய சரக்கு விற்பனையாளன். தெளிந்த போதை மீண்டும் ஏறியவனாக...“எங்க  அவர. என்னய பாத்து சொல்லச் சொல்லுடா என்று சொல்ல.....

கடையை விட்டு விரைவாக வந்த மாணவன். சரக்கு விற்பனையாளரிடம் சுட்டி காட்டியவரிம் வந்து..“அண்ணே..ஐநூறு ரூபாயக்கு சில்லரை கேட்டேண்ணே...இல்லேண்ணுட்டார்ண்ணே.. நீங்கச் சொன்னா தருவாறுண்ணே....ஒரு கையை மட்டும் ஆட்டிசொல்லுங்கண்ணே என்று சொன்னான்.

மாணவனின் கதை தெரியாத அந்த அண்ணனோ.... தெரிந்த பையன்தான் கொடுங்க என்று  கை அசைத்தான்.....

சரக்கு விற்பனையாளரோ..... தமக்குள் முனங்கியவாரே.... இந்தாடா.... வாங்கிட்டு ..போ.....இனி உன்னய வாங்கச் வரச் சொன்னா...  இனிமேல் எனக்கு தரமாட்டங்கன்னு சொல்லிவிடு என்றபடியே..அவன் கேட்ட சரக்கை எடுத்துக்
கொடுத்தான்

சரக்கை பெற்ற மாணவனோ.... சிட்டாய் ஓடி மறைந்தான்.

மறுநாள் போதையேறி மாணவன் செய்த அளப்பறையில்..மாணவர்களின் பெற்றொர்கள் புலம்பிய புலம்பலில் தெரிந்தது.. மாணவன் போதையேற்ற தன் அறிவை பயன்படுத்திய விதம் தெரிந்தது.


ஞாயிறு 13 2015

பிச்சையும்..இலவசமும் பெற்றால் நரகம்தான்..

படம்-aveenga.blogspot.com
நாலு சந்திப்பு ரோடு
சிக்னலில் நாலு மூனு
ரெண்டு சக்கர வாகனங்கள்
நின்று  இருக்க.. இருவர்
மூவர் ஒவ்வொரு திசையில்
பிச்சை கேட்டு நடக்க...

இரு சக்கர வாகனத்தில்
இருந்த கனவான் ஒருவர்
தன் பனப்பெட்டியை திறந்து
அதில் ஒரு பத்து
ரூபாய் தாளை எடுத்து
தனக்கு பின்னால் அமர்ந்து
இருந்த பெண்ணிடம் நீட்ட

அந்த பெண்ணொ பாதுகாப்புக்கு
கணவனின் வயிற்றை பிடித்து
இருந்த கரங்களால் நீட்டிய
பணத்தை பெற்று பிச்சை
கேட்டவரின் உண்டியில் போட்டார்

இதை சைட் அடித்து
நின்ற மூனு சக்கர
வாகன ஓட்டி ஒருவர்

பிச்சை போட பணத்தை
எடுத்தவன் தான் போடாமல்
தன் மனையாளிடம் கொடுத்து
போடச் சொல்கிறானே இதில்
எதாவது விசயம் இருக்கும்
என நிணைத்து அவன்
சோசியன் ஒருவனிடம் கேட்க.

பெண் பிச்சை இட்டால்
 பாவம் செய்த கணவனக்கு
புன்னியம்  கிடைக்கும் எனறான்

அது கேட்டு சோசியனுக்கு
அறிமுக கார்டு அடித்து
கொடுக்க வந்தவன் கேட்டான்

அப்படி என்றால் ஆளுகின்ற
ஆட்சியாளர்கள் ஓடாத பேன்
 கிரைண்டர் உடைந்து போன
மிக்ஸி கொடுப்பது அவர்கள்
ஊழல் மறைந்து மோட்சம்
கிடைக்கத்தானா..என்று வினவ

ஆம் எனற் சோசியன்
பிச்சை மற்றும் இலவசம்
கொடுப்பது புன்னியத்துக்கும்
மோட்சம் கிடைக்கத்தான் என்றான்

இலவசம் கொடுப்பவனுக்கும் பிச்சை
போடுபவனுக்கும் புன்னியம் மோட்சம்
கிடைக்கும் என்றால் இலவசம்
வாங்குபவர்களுக்கும் பிச்சை கேட்பவர்களுக்கும்
 நரகம்தானே கிடைக்கும் என்றபோது

சோசியன் கண் சிமிட்டினான்...

குறிப்பு :- பிச்சை, இலவசம், அன்னதானம் போன்றவைகள்  வரிசையில் ”உதவி” என்பது  சேராதாம்....



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...