பக்கங்கள்

சனி 24 2016

திருத்தவே முடியாத மூடர்கள்....



இன்று விவசாயிகள்
தினம் என்றார்கள்
அவர்கள்...........

விவசாயிகளா..யார்
அவர்கள் என்றார்கள்
இவர்கள்..............

விவசாயிகள் இந்த
நாட்டுக்கே சோறு
போட்டவர்கள என்றார்கள்
அவர்கள்...........................

எங்களுக்கு விவசாயியும்
தெரியாது சோறும்
தெரியாது எங்களுக்கு
தெரிந்தது எல்லாம்
பாட்டில் சாராயம்
ஒரு பிரியாணி
பொட்டலம் கொடுக்கும்
அந்த அம்மாவத்தான்
தெரியும் என்றார்கள்
அவர்கள்...................

அது உங்களை
பெற்ற அம்மா
இல்லை அவள்
உங்களை கெடுக்கும்
சதிகாரி என்றார்கள்
அவர்கள்...................

வாயை மூடு
பாட்டில் சாராயமும்
ஒரு பொட்டலம்
பிரியாணியும் கைச்
செலவுக்கு இரு
நூறு ரூபாய்
கொடுக்கும் தெய்வத்தை
பழிக்காதே என்றார்கள்
இவர்கள்....................

பெறாத பிள்ளைகளான
உங்களுக்கு சாராயத்தை
ஊத்தி கொடுத்த
புன்னியவதி  செத்து
விட்டார் என்பது
தெரியுமா? என்றார்கள்
அவர்கள்....................

அந்த அம்மா
செத்து போனால்
என்ன எங்களுக்கு
இன்னொரு சின்னம்மா
வந்து விட்டார்கள்
என்றார்கள் திருத்தவே
முடியாத மூடர்களான
இவர்கள்....................



வெள்ளி 23 2016

செக்கிழுத்த செம்மலுக்கு வந்த கவலை..

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
.ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ














மரணப் படுக்கையில் இருந்தார்
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி
அவருக்கு தன் பிள்ளைகளைப்
பற்றிய கவலை வந்தது........

தன் பிள்ளைகளை அருகே
அழைத்து சொன்னார் அய்யா
உங்களுக்கு எதுவும் சேர்த்து
வைக்க வில்லையே என்று
கவலைப் படவில்லை அய்யா

இந்த அடிமை இந்தியாவில்
உங்களை விட்டு விட்டு
சாகப் போகிறேனே என்ற
கவலைதான் அய்யா என்று
தன் கவலையைச் சொன்னார்.

வியாழன் 22 2016

ஏய்....நீ............

.................................................
..................................................
..................................................
...................................................

ஏய்...நீ....கணேசன் தானே...



நல்லா  பாருங்க  நான்
கணேசன்  மாதிரியா  இருக்கிறேன்.


ஆமாப்பா..நீ கணேசன் மாதிரியே
இருக்கேப்பா................


சரியாப்  போச்சு..... மேடம் உங்க
கண்ணாடிய கழட்டிட்டு பாருங்க
நான் முருகன் மாதிரி தெரியல.....


ஏய்.... என்ன ஏமாத்த முடியாதுப்பா..
நீ.......கணே....சனே....தான்......


மேடம்...கண்ணாடிய  நல்லா...துடச்ட்டு
போட்டு பாருங்க.....நா...ன்  முருக..னாட்டம்
தெரிவேன்............


ஏய்...நீ...கணேசன்...தானே.....

இல்ல மேடம்  நா..... முருகன்
கணேசன்னா.. யானைத் தலை
இருக்கும்...மூக்கு நீ......நீளமாக இருக்கும்
பெரிய வாயி இருக்கும்..நா...ன் அப்படியா
இருக்கேன்...... போங்க மேடம்  போயிஅரவிந்
ஆஸ்பத்திரில  கண்ண டெஸ்ட் பண்ணுங்க  மேடம்.....................


டேய்“..... படவா..... நீ..நிச்சயமாக
கணேசன்...தாண்டா..............


அய்யோ..ராமா.... சார் என்ன சார் நீங்க
என்னய்ய்யே பாத்துகிட்டு நிக்கிறீங்க..
மேடத்த கூட்டிட்டு போங்க..சார்...


அப்போ...நீ..கணேசன் இல்லிய்.ய்.யா...
அய்யய்யோ..சார்.... உங்களுக்குமா................

புதன் 21 2016

அந்த நிகழ்வுக்குப்பின்.............











எங்கள் தெருவுக்கு
அடுத்த தெருவில்
இரண்டு பணம்
கொடுக்கும் இயந்திரங்கள்
அதில் ஒன்று
சென்ற மாதத்திற்கு
முன் மாதத்தில்
இருந்தே பகலும்
இரவுமாய் ஓய்வறியாமல்
வந்தவர்களுக்கு பணம்
கொடுத்து சிவந்த
கரமாய் காட்சி
அளித்த வேளையில்

திடிரென்று  கொடுக்கும்
பணத்தை வாங்க
எங்கள் தெருவரை
வரிசை வரிசையாய்
மக்கள் கூட்டம் .
ஜெ..ஜெவென்று
இருந்தது தெரு

ஒருநாள் பணம்
கொடுக்கும் இயந்திரம்
இறந்துவிட்டது என்று
துக்கத்துடன் அழுது
மாலை அணிவித்தனர்
தெரு மாதர்கள்.

அந்த நிகழ்வுக்குப்பின்
தெரு வாசிகளும்
துக்க முகத்துடனே
காட்சி  தருகிறார்கள்


கடந்த ஒருவாரமாக
அந்த இயந்திரம்
குந்தியிருந்த இடம்
பூட்டியே கிடப்பதால்
தெருவே வெறிச்
சோடி கிடக்கிறது..




செவ்வாய் 20 2016

மோதல்...மோதல்...மோதல்....

???????????????????????????????
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!















இந்தியாவும் இங்கிலாந்தும் மோதல்
ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மோதல்
இந்தியாவும் நியூசிலாந்தும் மோதல்
இலங்கையும் இந்தியாவும் மோதல்
இந்தியாவும் பாக்கிஸ்தானும் மோதல்.
லாரியும் பஸ்சும் மோதல்
ஓபிஎஸ்ஸூம் சகிகலாவும் மோதல்
மோதல்..மோதல்.....மோதல்....

திங்கள் 19 2016

அப்ப..தெரியும் அவன் யாருன்னு


..................................
....................................
.....................................
















4ஜீன்னு வாயப் பொளந்து
அந்த சிம்ம வாங்கி
நல்லா பயன்படுத்தி விட்டு
பிறகு வேண்டாம் என்று
 மறந்து விட்டு இருக்கும்
போது உங்க பேர்ல
ஜியோ சிம்மு பயன்படுத்தியாக
45 ஆயிரம் பிலலு வரும்போது
அய்யோ! நான் பயன்படுத்தவே
இல்லையே என்று பதறும்போது
அப்ப..தெரியும் அவன் யாருன்னு

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...