புதன் 22 2021

ஆறாவது ஆண்டு நினைவு.........

 


யம்மா.....ஒனக்கு என்பதுக்கு மேல் வயசாச்சும்மா... இன்னும் பர ரன்னு வேலை செய்வேன்னு மல்லுகட்டதம்மா..  நான் சொல்றத கேட்டேன்னா.... நூறு வயசு வரைக்கும் இருப்பேம்மா.... அவர் சொல்லி முடிக்கும்முன்னரே அவருடைய தாய் இடைமறித்து சொன்னார்...


“ நூறு வயசு வரைக்கும் நான் இருந்தா.... அப்புறம் செத்த பிறகு யார்டா..? தூக்கி போயி என்ன. பொதைப்பா.....

“ யாரு இருக்காவா....    ஒம் மக ..மருமகன், ரெண்டு பேத்தி, ரெண்டு பேரன்கள்ல..வச்சுகிட்டு... யாரு இருக்காங்கன்னா  கேட்க்கிற.... எனக்குத்தான் உன்னவிட்டா யாரு  இருக்கா... மனைவி, மகன்.மகள், மனைவி வழி உறவுகள்னு யாரு இருக்கா.... உன் மகளுக்காக என்னை செக்குமாடாக்கிட்டேயம்மா.... எனக்கு  யாருமில்லாத காரணத்ததால்  ஒனக்கு முன்னாடி நான் போயிட்டா ...... நல்லாயிருக்குமுன்னு  சொல்றேன்..   அதக்கூட கேட்க மாட்டுறீயேம்மா....


நீ சொல்வதை கேட்க முடியாதுடா......நான்தான் முன்னாடி போவேன்.. நீதான் என்னை தூக்கி போகனும்--- அதற்குத்தான் ஒன்னை பெத்தென் வளத்தேன். உன் கடமையை  செய்டா...   .

அதன் பிறகு அவர் தாயிடம்  எதுவும் சொல்வதில்லை....சொன்னாலும் அவர் கேட்கமாட்டார்....  நாளாகி வாரமாகி, மாதமாகி. வருடமாகி கழிந்த ஒருநாள் அவரின் எழுந்து  நடமாட ஒரு ஊன்றுகோல் வாங்கி கொடுத்தார்

அவரின் தாய் என்ன நினைத்தாரோ ..அந்த ஊன்றுகோலை கடைசி வரைக்கும் பயன்படுத்தவில்லை. ஊன்றுகோல் இல்லாமல் தனியாக எழுந்து நிற்க முயன்றபோது தவறி விழுந்து இடுப்பெலும்பு பலத்த சேதமாகி  படுக்கையில் விழுந்தார்.

எலும்பு முறிவு மருத்துவமனைக்கு தூக்கி சென்று காண்பித்தபோது.. நல்ல மனது உள்ள அந்த மருத்துவரோ  தாயார்  வயது முதுமை அடைந்துவிட்டார் இடுப்பு எலும்பை சரி செய்ய முடியாது.. சில நாட்கள்தான் உயிருடன் இருப்பார் . வேறு மருத்துவமனைக்கு  சென்று பணத்தை கட்டி ஏமாற வேண்டாம். வலிக்கு ஊசி போட்டு சில மாத்திரையும் தந்து. வீட்டுக்கு  போங்கள் என்று அனுப்பி வைத்தார்.


வீட்டுக்கு வந்து படுத்த படுக்கையாக இருந்தவர் உயிர் பிரிவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தன் மகனை ஈனக்குரலில் பல தடவை அழைத்தார். அந்த தாயின் பேரன் பேத்திகளும் அவரிடம் வந்து கூறிய போதும்  போகவில்லை

 சத்தியம் சர்க்கரை பொங்கல் என்று தெரிந்த போதும்..சாகப்போகும் தருவாயில் இன்னும் ஏதாவது  வாக்கு ,சத்தியம் என்று கேட்டுவிட்டால் அதை நிறைவேற்ற இந்தச் சூழ்நிலையில்  நிறைவேற்ற முடியாது. ஏற்கனவே. எல்லா வகையான ஆசைகளை எல்லாம் துறந்து ...கொடுத்த வாக்கை நிறைவேற்றவே தனக்கு  ஐம்பத்திஐந்து வயதாகிவிட்டது. அதனால் அவரின் தாய் உயிர் பிரியும் வரை அருகில் செல்லவில்லை. தாய் இறந்தபின்தான்   அதற்க்காக வருத்தப்பட்டார்.

சரியாக 20.09.2015 -ல் இரவு எட்டுமணி  வாக்கில் அவரின் தாய் பிரிந்தது.  முதன்முதலில் அவரின் உற்ற நண்பர் செல்வம்தான் முதலில் வந்தார்..பின் அவர் தமக்கையிடமும் அரின் கணவரிடமும்  சடங்கு சம்பிரதாயம், மூடநம்பிக்கை அற்ற வழியில் தன் தாயின் உடலை எரியுட்டுவதற்கு ஒப்புதலை பெற்றார். பின் அதற்கான செலவுக்கான பணத்தை தயார் படுத்துவதற்கு வெளியில் சென்றார்.

ஆட்டம் பாட்டம். கொட்டு ரேடியா. நீர்மாலை போன்ற எந்தவித சடங்கு  சாத்திரம் எதுவுமில்லாமல்   நன்றாக குளிப்பாட்டி. துக்கம் விசரிக்க வருபவர்கள் பார்த்தால் தூங்குவதுபோல் தெரிகிற மாதிரி ஐஸ் பெட்டியில் வைத்து மாலையில் நல்ல நேரம் பார்க்காமல் ஆம்புலன்ஸ் வண்டியில்  கோயிந்தா..கேயிந்தா என்ற கோஷமிடாமல்.  மாலைகளை ரோட்டில் போட்டு துவம்சம் செய்யாமல்  மிக அமைதியான முறையில்  சற்று தொலைவில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்று எரியூட்டினார்.... தாயை  இழந்து அனாதையான அந்த மகன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...