வெள்ளி 04 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-22

Image result for புத்தகம் வாசிப்பு





 கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் என்பது மாதிரி கிடைக்கிற நேரத்தை எல்லாம் புடுங்கும் செல்போனில் இனிமேல் முழ்கி கிடக்க கூடாது அதை நோண்டுற வேலையை விட்டுவிடனும் என்ற தீர்மான முடிவு எடுத்து கிடைக்கிற நேரத்தையெல்லாம்  புத்தக வாசிப்புக்கு பயன்படுத்த வேண்டும். அதில் இருந்து தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் வலைப்பூவில் பதிவிடனும் என்ற காலம் கடந்து  தோன்றிய எனது எண்ண வழி காட்டுதல்படி...

 நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் பள்ளி முடிந்து வேலைக்கு சென்ற காலங்களில் எண்ணிடம் பொருளாதாரமும் அறிவும் இல்லாத காரணத்தால் அன்று படிக்காத, படிக்க முடியாத, நிலையை மாற்றி. உலக வாசிப்பு தினத்தையாவது பயன்படுத்தி, நாமும் வாசிப்பு பழக்கத்தை கடைபிடிக்கலாமே என்ற  ஆசையில் அல்ல, நான் ஆசைப்பட்டால் எதுவும் நடக்காது கிடைக்காது என்பது எனது அனுபவ அறிவால் நான் ஆசைப்படாமல் எனது எண்ணத்தில் முடிவெடுத்து என் சொந்த முயற்சியால் பழைய புத்தக கடையில் மூலம் சேகரித்த சொற்ப அளவிலான புத்தகத்தை முதலில் வாசிக்கலாம் என்ற  நிரலில்

வழக்கம்போல் காலை உணவை முடித்துவிட்டு படித்தால் என் அறிவுக்கு புரியக்கூடிய. மனதில் பதியக்கூடிய புத்தகத்தை எடுத்து மகிழ்ச்சியுடன் எதைப்பற்றியும்....எதைப்பற்றின்னா.. ஏற்கனவே உள்ள இம்சைகளை பற்றி சிந்திக்காமல் அட்டையிலிருந்து ஒவ்வொன்றாக.....ஆரம்பித்தேன்....

..முகப்பு அட்டை, நூலின் விபரம், நூலலாசிரியரின் அறிமுகம்,விளக்கவுரை இப்படி ஒவ்வொன்றாக.. நூலின் முதல் பக்கத்தை தாண்டி இரண்டாம் .மூன்றாம் பக்கம் போய்க் கொண்டிருந்த வேளையில் மெதுவாக கண் சொறுகியது.. அதைத் தொடர்ந்து தலை வலது பக்கமாக சாய்ந்தது....
....
நான் பலமுறை முயற்சி செய்தும் கண்கள் சொறுகுவதையும் தலை ஆடி சாய்வதையும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒருதடவைக்கு இரு தடவை முகத்தை தண்ணிர் விட்டு கழுவி விட்டு, மீண்டும் வாசிக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் கண்கள் சொறுகுவதையும், தலை  ஆடுவதையும் நிறுத்த முடியவில்லை.

இதே இம்சைதான்... நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தது.. இந்த இம்சையால்தான் அன்றைக்கு என்னால் படிக்க முடியாமல் என் தாயாரின் ஆசைகளையும் அவரின் எதிர்பார்ப்புகளையும் என்னால் நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது.. அதற்கு பதிலாக அவரின் வேறு கோரிக்கையையும் ஆசையும்மான.. நான் திருமணம் முடிக்காமல் விபத்தால் இடையில் பார்வை இழந்த என் சகோதரியையும் அவர் பெற்றெடுத்த பிள்ளைகளையும் நான் வளர்த்து ஆளாக்குவதை ஏற்று நிறைவேற்றி விட்டேன். இந்த கதையை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பதிவிடுகிறேன்... இப்போது  மீண்டும் தொடர்ந்த  இம்சையை சொல்லி விடுகிறேன்.

அன்று பள்ளியில் தொடங்கிய இம்சையானது நான் செத்து சுண்ணாம்பு ஆகும் வரைக்கும் தொடருவேன் என்று சபதம் எடுத்து வந்ததுபோல இன்றும் தொடருகிறது. இப்படி ஒவ்வொரு தடவையும்  நான் புத்தகத்தை  வாசிக்கும் போதெல்லாம்.. கண்கள் சொறுகுவதும் தலை கோடாங்கி ஆடுவதுமாக அதன் வேலையை காட்டி விடுகிறது..

சரி, தூங்கி விட்டுத்தான் புதுப் பொலிவுடன் வாசிக்கலாம் என்று முடிவெடுத்து தரை விரிப்பு எதுவுமில்லாமல் துண்டை தலைக்கு வைத்து வாசிக்கும் புத்தகத்தை அருகில் வைத்து படுத்தால்...

அடிக்கிற வெயிலுக்கும் ஓடுற மின் விசிறி காற்றுக்கும் ஓட்டு வீட்டின் வெக்கையைக்கூட உணரமுடியாத அளவுக்கு  செம தூக்கம்.. ஒரு வழியாக தூங்கி எழுந்த பின் கண்கள் சொறுகியபோது போட்ட திட்டமெல்லாம்  தவிடு பொடியாகி நாசமாக போய்விட்டது.  வாசிக்க மனது வரவில்லை.

இப்படி ஒருநாள் அல்ல. ஒரு வாரம் அல்ல ஒரு மாசமாக இதே நிலைதான் பல தடவை பெயிலான பாடத்தை எழுதியும் பாசாவதற்கு வழியில்லாமல் பெயிலான கதையைப்போல் இந்த இம்சையும் தொடர்ந்தது. அப்படி வந்த இம்சைகள் தொடர்ந்து வந்தாலும் வேதாளம் சொன்ன கதையில் வரும் விக்கிர மாதித்தன் அளவுக்கு நான் இல்லையென்றாலும் என்னளவுக்கு தொடர்ந்து முயன்று வருகிறேன். படிப்பதென்றால் அவ்வளவு வேப்பங்காயக இருக்கிறது...

தூக்கமில்லாமல் அவதிப்படுகிறேன் என்று யாராவது என்னிடம் சொன்னால் நான்...“ மீண்டும் தொடரும் இம்சைகள் -22”-யைத்தான் பரிந்துரை செய்கிறேன்.

எப்படி?... தூக்கமில்லையா, ஒரு புத்தகத்தை திறந்து வாசியுங்கள். தானாக தூக்கம் வந்துவிடும் . நீங்கள் நிம்மதியாக தூங்கிவிடலாம். இதுக்கு போயி ஆஸ்பத்திரிக்கு கொடுக்கிற காசை.. ஒரு புத்தகத்திற்கு செலவழியுங்கள் என்பேன்.

நான் சொன்னது பலருக்கு பலனளித்துவிடும். சிலருக்குத்தான் பலனளிக்காது... அவர்கள் கேட்டபோது.... நீங்கள் ஓசியில் புத்தகம் வாங்கி இருக்கலாம்  அதனால் பலிக்கவில்லை என்னவோ..என்பேன்.. பலரும் என்னைப்போல்தான் இருக்கிறார்கள் என்று பூணை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விட்டது போல பெருமைப்பட்டுக் கொள்வேன்.

அட...போங்க..சார்.... எனக்கு வரும் இம்சைகள் ஒன்றா...இரண்டா....  வாய.. மூடி பேசாமல் இருக்க.......

மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இம்சைகள் என்றால் எனக்கு நான்கு பக்கத்தோடு , எட்டு பக்கமும் இம்சைகள்....சார்...

3 கருத்துகள்:

  1. Same blood சொல்லிச்சென்றவிதம் அருமை வாழ்த்துக்ககளுடன்

    பதிலளிநீக்கு
  2. புத்தக வாசிப்பை ரசித்தேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  3. //அவரின் வேறு கோரிக்கையையும் ஆசையும்மான.. நான் திருமணம் முடிக்காமல் விபத்தால் இடையில் பார்வை இழந்த என் சகோதரியையும் அவர் பெற்றெடுத்த பிள்ளைகளையும் நான் வளர்த்து ஆளாக்குவதை ஏற்று நிறைவேற்றி விட்டேன்.//
    ஒருவரை பலி கொடுத்து தான் நிறைவேற்றபட வேண்டும் என்ற ஆசைகள் விருப்பங்கள் மிகவும் கொடுமையானவை.
    என்ன ஒரு கொடூரமான சமூகம் இது :(

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...