பக்கங்கள்

ஞாயிறு 29 2024

பயத்தால் குழந்தை பெற்றுக்கொள்ளாத லேடி சூப்பர் ஸ்டார்கள்...

 











நடிகைக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்தவன். நடிகனுக்கு  ஜென்ஸ் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்திருக்கவேண்டும். அவன் கொடுக்காமல்  விட்டதிற்கு ஆண் ஆதிக்கம்தான் காரணமாக இருந்திருக்க வேண்டும்..

அவன் கொடுக்காமல் விட்டதிற்கு வருத்தமும் கோபமும் படுவது ஒரு நயா பைசாவுக்கும் வழியிருக்காது

இன்னால் லேடி சூப்பர் ஸ்டார் ஒன்று பிள்ளை பெத்துக்க பயந்து போய் வாடகை தாய் மூலம் பிள்ளை பெற்றுக் கொண்டது..

முன்னால் லேடி சூப்பர் ஸ்டார்  பிள்ளை பெத்துக்க விரும்பாதற்கு  வியப்பான ஒரு  காரணம் சொல்லி இருக்கிறது.. அதுக்கு குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தையை வைத்து தன்னை பிளாக் மெயில் செய்துவிடுவார்கள் என்ற காரணத்தால்தான் பிள்ளை பெற்றுக் கொள்ளவில்லையாம்.


குப்புற விழுந்து மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வது மாதிரி  இருக்கிறது   முன்னால் இன்னால் லேடி சூப்பர் ஸ்டாரகளின் கதைகள்

புதன் 18 2024

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

 





சுரண்டுபவன்

ஆயுதம் ஏந்தினால்

அது அகிம்சை..











சுரண்டுபவனால்

பாதிக்கப்பட்டவர்

நகம் வளர்த்தாலும்

அவை தீவிரவாதம்


---நன்றி! கீழடி பதிப்பகம்








சனி 07 2024

நேர்மைன்னா.......... என்னாங்கனன்னா.....

 ஜி யின் நேர்மை திறன் கண்டு அகிலமே பெருமிதம் கொள்கிறது..

.ED யை பாஜக தான் நடத்துகிறது என்பது உண்மையாகிவிட்டது..

உலகத்திலேயே ஊழல் பெருச்சாளிகள் அதிகம் அதிகம் உள்ள கட்சி பிஜேபி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார்கள்...



திங்கள் 18 2024

ஒரு அனுபவ குறிப்பு............

 






வெப்பமும் குளிரும் 

எல்லா இடங்களிலும்

ஒன்றுபோல் இருப்பதில்லை...


மனிதர்களின் எண்ணங்களும்

செயல்களும் ஒன்றுபோல் 

இருப்பதில்லை....

புதன் 30 2024

தீபாவளி இயற்கைக்கு கேடு.... மனித சமூகத்திற்கு இழிவு...

 தீக்காயம்: வெடிவெடிக்கையில், விடிய விடிய பலகாரம் செய்வதால் தீக் காயங்கள் ஏற்பட்டு பலர் இறக்கின்றனர். பலர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

பணவிரயம்: தேவையற்ற ஆடம்பரம், அதிகப்படியான செலவுகளால் பணவிரயம் ஏற்படுவதோடு, கடனாளியாகவும் ஆகின்றனர்.

வயிற்றுக் கோளாறு: ஒரே நாளில், ஒரே வேளையில் அளவிற்கு அதிகமாக அதிக உணவுகளை, பலகாரங்களை, இனிப்புகளை உண்பதால் வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, மருத்துவச் செலவும் ஏற்படுகிறது.

போக்குவரத்து நெரிசல்: ஒரே நாளில் எல்லோரும் வெளியூர் பயணம் மேற்கொள்வதால் போக்குவரத்துப் பற்றாக்குறை, நெரிசல், தவிப்பு, கூடுதல் கட்டணம் என்று பல கேடுகள் வருகின்றன.

கடைகளில் குவிதல்: எல்லோரும் ஒரே நேரத்தில் கூட்டமாகக் குவிவதால், நெரிசல், களவு, தரமற்ற பொருட்கள் என்று பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, இதுபோன்ற கேடு பயக்கும் தீபாவளியைக் கொண்டாடுவதைக் கைவிட்டு அறிவிற்குகந்த பொங்கல் போன்ற விழாக்களை செலவின்றி, சேதமின்றிக் கொண்டாடி மகிழ வேண்டும்.

நன்றி! பெரியார் பிஞ்சு


வெடியால்---மனித காது 140 டெசிபல், சத்தம் வரை கேட்க உகந்தது. சத்தம் அதற்கு மேல் போனால், இதய நோய்கள் உள்ளவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்  காது மந்தம் உள்ளவர்கள் பாதிக்கப் படுவார்கள்

கரப்பினிகளுக்கு--

அதிக சத்தம் இருக்கும் போது அது கர்ப்பிணியின் காதை மட்டும் அல்ல வயிற்றின் உள்ளே இருக்கும் கருவையும் தாக்கலாம். தீபாவளி   வெடிச்சத்தம் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பை உண்டு பன்னும்


  1. தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பது வனவிலங்குகளின் வாழ்விடங்களில் வழக்கமான சுற்றுப்புறச் சத்தத்தை விட அதிக சத்தமாக இருக்கும்.
  2. பட்டாசு வெடிக்கும் ஒலிகள் அதிக டெசிபல் அளவை எட்டக்கூடும், இதனால் வீட்டு விலங்குகளுக்கும் காட்டு விலங்குகளுக்கும் துன்பம் ஏற்படும்.
  3. மறுபுறம், வனவிலங்குகள் அவற்றின் சூழலில் இயற்கையான ஒலிகளுக்குப் பழகிவிட்டன, அவை பொதுவாக குறைவான தீவிரம்.
  4. பட்டாசு சத்தத்தின் திடீர் மற்றும் செயற்கையான தன்மை பல்வேறு உயிரினங்களுக்கு இடையூறு விளைவிக்கும், அவற்றின் நடத்தை, தகவல் தொடர்பு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை பாதிக்கிறது.
  5. பாதிப்பைப் பொறுத்தவரை, தீபாவளியின் போது பட்டாசுகளின் சத்தம், வனவிலங்குகளின் வாழ்விடங்களின் வழக்கமான ஒலிப்பதிவிலிருந்து கூர்மையான விலகலாகும், இது அவற்றின் இயற்கையான செயல்பாடுகளில் மன அழுத்தத்தையும் இடையூறுகளையும் ஏற்படுத்தும்.
  6. நன்றி! கோரா



தீபாவளி நெருங்கும்போது, ​​பண்டிகைக் காலம் மகிழ்ச்சியையும், கொண்டாட்டங்களையும், துரதிர்ஷ்டவசமாக, ஒலி மாசுபாட்டின் அதிகரிப்பையும் தருகிறது. பட்டாசுகள் மற்றும் உரத்த இசை விழாக்களில் ஒருங்கிணைந்தாலும், அதிகரித்து வரும் இரைச்சல் அளவுகள் உங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்கும்


தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: "பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.




வியாழன் 03 2024

ஞான பரதேசி கேட்டது.

 



படித்தவர்கள் எல்லாம்

அறிவாளிகள் அல்ல

படிக்காதவர்கள் எல்லாம்

முட்டாள்களும் அல்ல.

ஆனால்..

படித்தவர்களும் முட்டாள்களும்

படு மகா காரியவாதிகளாக

ஆகிவிட்டார்கள்.....இதில்

நீ எதில் சேர்த்தி.....



ஞாயிறு 22 2024

ஒரு கனவும் ஒரு நிகழ்வும்...

 




என் தாயார் நினைவு நாளில்

ஒரு கனவு  ......

இறந்து விட்ட என்னை

மண் மூடி தீ மூட்ட

தீ சூடு தாங்காமல்

எழுந்து வர.....

யாருமே இல்லாததை

கண்டு மனம்

வெறுத்து மீண்டும்

எரியும் தீ யிலே

படுத்துவிடுறேன்

- உறக்கத்தில் விழித்து

பார்த்த நான் சே

நான் சாகவில்லை என

நினைத்து மீண்டும் 

படுத்துவிடுகிறேன்.



என் தாயாரின் நினைவு

நாளுக்கு பின்

கொளுத்தும் வெயிலில்

இரண்டு கிலோ மீட்டர்

துாரம் நடக்க முடியாமல்

தவித்த தவிப்பு...

..ஒரு நிகழ்வு

செவ்வாய் 03 2024

ஆயிரம் கண்ணுடையா(ன்)ள் அல்ல.......

 ஆயிரம் கண்ணு உடையாள் அல்ல...ஆயிரம் கை உடையா(ன்)ள்


என்னடா தினுச தினுசா
எறக்குறாங்கே!
நம்ம கண்ணுமுன்னாலே இப்படினா.....
ரொம்ப காலத்துக்கு முன்னாலே என்ன செஞ்சிருப்பாக்கே|7

செவ்வாய் 06 2024

அவர்கள் சொன்னார்கள்.........

 


கோடிக்கணக்கான மக்கள் நம்பகிறார்கள் என்பதற்காக அந்தப் பொய்யை புத்தியுள்ள மனிதன் ஏற்க வேண்டிய தேவை இல்லை- ஸ்டீபன் ஹாக்கிங்



சாதாரணமாக சிந்தித்தால்கூட எனக்கு கடவுள் நம்பிக்கை ஏற்படவில்லை-சார்லி சாப்ளின்





500 ரூபா செருப்பைக்கூட உன் கடவுள் காப்பாத்த முடியாது என்ற உண்மையை புரிந்து கொண்டு, டோக்கன் போட்டு பத்திரப்படுத்திவிட்டு கோவிலுக்கு போறீயே அதுக்கு பேருதான் பகுத்தறிவு- பகுத்திறிவு



ஞாயிறு 21 2024

கொக்கை பிடிக்க கொக்கு தலையில் வெண்ணைய் வைத்த கதை

 


                                                                  வர்ணம்


வர்க்கததை ஆய்வு செய்தவர்கள்

வர்ணத்தை ஆய்வு செய்யவில்லை- என்றார்.


கூடவே, கொக்கு தலையில் வெண்ணெய்

வைத்த கதையையும் சொன்னார்..


சரி, என்று புரிந்தது போல்

தலையை ஆட்டிவிட்டு

கொக்கு தலையில் வெண்ணெயை

வைக்க சொன்னவர் யாரென்று கேட்டேன்

இதை படி என்றார் 


படித்தேன்..


”சாதி அமைப்பை மாற்றுவது என்பது

சமூக ஒழுங்கை சீர் குலைக்கும் செயல்  ““


”உயர்சாதியினர் மனம் மாறி தீண்டாமையை

அவர்களாகவே கைவிடும்வரை  தீண்டாமை ஒழியாது ”


எனக்கு புரிந்து விட்டது    கொக்கை பிடிக்க கொக்கு தலையில் வெண்ணையை  வைக்க சொன்னவர்  யாரென்று...

உங்களுக்கு................................




வெள்ளி 12 2024

நான் கண்ட கனவு எனக்கு பலித்தது....1


புத்தகத்தை திறந்து இரண்டு பக்கம் படித்து முடிக்குமுன்னே..தூக்கத்துல தல ஆடிவிடுகிறது. உடனே புத்தகத்தை மூடி வைத்து விட்டு தூங்க ஆரம்பித்து விடுவேன். நன்றாக தூங்கிக் கொண்டு இருக்கும்போது செல் ஒலி எழுப்பி விடுகிறது.. யாராச்சும் வரச் சொல்லி பேசுவாங்க.. வருவதற்கு ஒரு நேரத்த சொல்லி செல் போன நோண்டிகிட்டு இருக்கும்போதே திரும்பவும் தலை ஆட்டம் கண்டுவிடும். திரும்பவும் படுத்து சிறிது நேரம் தூங்குவேன்..

பகலில் நாயாய் மாடாய் அலைந்து விட்டு, இரவில் ஏழு மணிக்கு தொடங்கின்ற வேலை இரவு மூன்று மணிவரை முடியும். சில நேரங்களில் அந்த வேலை முடிந்துவிடும் .சில வேளைகளில் முக்கால் பங்கு வேலை முடிந்துவிடும் கால் பங்கு வேலை பாக்கியிருக்கும் அந்த வேலையை முடித்து விட்டு தூங்கலாம் என்று எண்ணிலாலும், தயார் படுத்தினாலும் முடியாது சோர்வு தட்டி அப்படியே தூங்கிவிடுவதும் உண்டு.

கொரனா காலத்திலும் கொரனா முடிந்த காலத்திலும் வேலை இல்லாத காரணத்தால் வேலை பார்த்து வந்த மருமக,மருமகன்கள் தனித்தனியாக வெவ்வேறு வேலைகளுக்கு சென்றுவிட்டபடியால் ஒரே ஆளாக பகலில் அலைவதும் இரவில் வேலை செய்வதுமாக  பழகிக் கொண்டேன்.

உண்ணுவதும் உறங்குவதும் விதிப்படி இல்லாமல்  வேலையின் நிலைமையை ஒட்டி மாறிவிட்டது.  ஒற்றைவழி வரும் வருமானத்தை வைத்தே ! கொரோனா வுக்கு முன் வாங்கிய  மிஷின் லோனும் . எனது சாப்பட்டுக்கும்  யாரிடமும் கையேந்தாமல் பயன் படுத்தி வருகிறேன்.

 வேலை இருக்கும் நாளெல்லாம் வேலை நாள்.. வேலை இல்லாத நாளெல்லாம் விடுமுறை நாட்கள்...அந்த விடுமுறை நாட்களில்தான் எத்தனை வேலைகள்

துணி துவைப்பது. இரு சக்கர வாகனத்தை பராமரிப்பது... அலுவலகத்தை சுத்தம் செய்வது இப்படி  வரிசையாக வேலை வந்தபடியே இருக்கும்.

தனிமரம் தோப்பாகாதுதான். என் அக்கா பிள்ளைகளை வளர்த்து அவர்களை ஆளாக்கி தனித்தனியாக செட்டில் ஆக்கி விட்ட காலம் அதிகம் கடந்து விட்டதால் ..நான்தோப்பாகுறதுக்கு எனக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

இருப்பினும் அதற்க்காக நான் வருத்தப்படவும் இல்லை ஏக்கப்படவுமில்லை.

தனிமரமாக இருந்து வாழ்ந்து மடிவதுதான் என் நிலைமை என்றாகிவிட்டதால் அதற்க்காக கவலைப்படுவதுமில்லை. இருக்கும் வரை ஓடிக் கொண்டிருப்பேன்.

பகல்  நேரத்தில் தூங்கும் குட்டி தூக்கத்தினால் கனவு எதுவும் வருவதில்லை. செய்து கொண்டு இருந்த வேலைதான் மண்டைக்குள் குடைச்சலாக இருக்கும் இரவு இரண்டு மூன்று மணிக்கும் தூங்கும் நேரத்தில் தான் எனக்கு கனவு அதிகமாக வரும் அப்படிவரும் கனவுகள் சில நினைவுக்கும் வரும் பல நினைவுக்கு வராமல் மறைந்து   சம்பவம் நடந்து முடிந்த பின்தான் கனவாக வந்தது நினைவுக்கு வரும்.

கண்ட கனவுகளில் பத்துக்கு எட்டு ஒன்பது கண் முன்னே நடந்துவிடும். ஒன்று இரண்டு கனவுகள் நடந்து முடிந்து பின்புதான்....

அம்பானி. அதானி,டாட்டா. பில்லா மாதிரியான பணக்கார அதிபதிகளாக ஆகும் கனவெல்லாம் வந்ததில்லை..இனி வரப்போவதுமில்லை..அந்த கனவுக எல்லாம்  வந்தாலும் பலிக்கப் போவதில்லை.

இப்போதிலிருந்து

கனவு-1

என்னைத் தேடி இரண்டு காவலர்கள் வருகிறார்கள். என் வீட்டுக்கு வரும் தெருப் பாதை இருட்டாக இருப்பதால்  செல்போன் டார்ச்லைட்டில்  என் வீட்டிற்கு வருகிறார்கள். உறங்கி கொண்டியிருக்கும் என் முகத்தில் டார்சலைட் வெளிச்சத்தை அடித்தவாறே என்னை எழுப்பினார்கள்.  திடுக்கிட்டு கண்விழித்து எழுந்தேன். தூக்கம் கலையாமல் என்ன விபரம் என்றேன். எழுந்து வெளியே வரச் சொன்னார்கள்.

துண்டால் முகத்தை துடைத்துவிட்டு மேல் சட்டையை அணிந்து கொண்டு வெளியே வந்தபடியே என்ன விபரம் என்று கேட்டடேன். என்மீது புகார் கூறப்பட்டதாக அதை விசாரிக்க வந்ததாகவும் தெரிவித்தனர். புகாரை தெரிவித்தார்கள் என்ன புகார் என்று தெரியவில்லை. நான் மறுத்தேன் தெருவில் உள்ள பாப்பாத்தி மக மகன்கள்  என்னை சுட்டிகாட்டி வந்த காவலர்களிடம் புகார்களை தெரிவித்தார்கள். நான் என்னவென்று தெரியாமல்  முழித்தேன்.. சிறிது நேரத்தில் காலர்களில் ஒருவர் என்னை நிலையத்துக்கு வரும்படி கையோடு அழைத்து சென்றார். திடிரென்று ஒன்னுக்கு வரவே உறக்கத்திலிருந்து விழித்துவிட்டு வேகமாக கழிப்பறையை நோக்கி ஓடினேன். கழிப்பறையில் சாமி கும்பிட்டுகிட்டு இருக்குபோது கனவில் வந்தவை வரிசையாக வந்தன. என்ன புகார் மட்டும் தெரியவில்லை. வந்த கனவுப்படி எதிர்ப்பாரத்தபடியே இருந்தேன்

காலையில் கண்ட கனவு அன்று இரவு நடப்புக்கு வந்துவிட்டது.

நான் வெளியில் சென்றுவிட்டு இரவு ஒன்பது மணி வாக்கில் என் வீட்டுக்கு வந்தபோது என் வீட்டு மேற்கு புறத்தில் பாப்பாத்தி. மகள்களில் இருவர். மகன் இருவர் பேரன் பேத்திகள் கூட்டமாக குழுமியிருந்தனர்.  என்னவென்று நான் விசாரித்தேன். என் பேத்தி வளர்க்கும் இரண்டு நாய்களில் ஒன்று பாப்பாத்தி கடைசி மகளின் மகனை அதாவது பேரனை கடித்துவிட்டதாம்.. நாய் கடித்த காயத்தை பார்க்கலாம் பாப்பத்தி பேரனை கூப்பிட்டேன். மறுத்துவிட்டார்கள். பின் நான் என்ன செய்யவேண்டும் என்றேன். ஒன்னும் செய்ய வேண்டாம் என்றார்கள். சிறிது நேரத்தில் இரண்டு போலீஸ் கனவில் கண்டபடி செல் அடித்தபடி  என்னிடம் வந்தார்கள். அவிழ்த்து விட்டுஇருந்த சட்டை பட்டனை மாட்டியபடி நான்தான் என்றேன். வந்தவர்கள் இரண்டு பேரும் சவுண்டு விட்டார்கள் நாய் வளர்த்தால் கட்டிபோட்டு வளர்க்கனும் என்றார்கள். நான் அமைதியாக வீட்டுக்குள்ளே கட்டிபோட்டுத்தான் வளர்க்கிறேன். ஒன்-பாத் போவதற்க்காக நாய் வந்தபோது கடித்தவிட்டதாக அவர்கள் சொல்கிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள். என்றுவிட்டு அமைதியானேன்


சிறிது நேரத்திற்கு பிறகு வந்த காவலர்களில் ஒருவர் சொன்னார். நாய் கடித்துவிட்டது. அதற்குண்டான ஆஸ்பத்திரி செலவை கொடுத்துவிடுங்கள் என்றார். சரி என்றேன். வந்தகாவலர்கள்  என் பெயர் வயது அப்பா பெயர் கேட்டவர்கள் சாதியை கேட்டார்கள் தோழர் என்றேன். பதில் எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்கள். பாப்பாத்தி கடைசி மகளிடம் ஆஸ்பத்திரிக்கு சென்று எவ்வளவு என்று சொல் ஜிபே-ல் அனுப்பி வைக்கிறேன்.என்று விட்டு அப்பாடா ஒரு கனவு பலித்துவிட்டது என்று பெருமூச்சு விட்டபடி..ஆஸ்பத்தரி தொகையை எதிர்பார்த்தபடி காத்திருந்தேன்.

புதன் 26 2024

அந்த ரோட்டுக்கு பேரு........

 


அந்த ரோட்டுக்கு பேரு கிருஷ்ணராய தெப்பகுளம் ரோடாம்

அந்த ரோட்டின் ஓரத்தில் மூன்று வாகன ஓட்டிக்கும் இரண்டு

சக்கர வாகன ஒட்டிக்கும் வாய் சண்டை.. வாயால் சண்டையிட்டு கொண்டு இருந்தார்கள். சண்டைக்கு காரணம் இதுதான்


இடது ஓரமாக போய்க் கொண்டிருந்த மூன்று சக்கர வாகன ஓட்டி சடக்கென்று

வலது பக்கம் வண்டி யை திருப்பி ஓட்டினான் ஆட்டோவுக்கு பின்னால் வலதுஓரமாக வந்து கொண்டிருந்த இரண்டு சக்கர வாகன ஓட்டி  மூன்று சக்கர வாகனத்தில்  எழுதப்பட்டு இருந்த பெயரைச்சொல்லி  ஏய் ..சேர்வை !எய் சேர்வை! இப்படியா வண்டிய ஓட்டுவ என்றனாம் .

மூன்று சக்கர வாகன ஓட்டிக்கு கோபம் பொத்துகிட்டது. ஆட்டோவை நிறுத்திவிட்டு டுவீலர்காரனிடம் சண்டையிட்டான்.. எப்படி நீ என்னை சேர்வைன்னு சொல்லப்போச்சுன்னு

வண்டியில் எழுதியிருந்த பெயரைத்தான் சொன்னேன் என்றான். இரு சக்கர வாகன ஓட்டி...

நன்றாகப்பார் வண்டியை கருப்புசாமி  சேர்வை என்று எழுதி இருக்கிறது. கருப்புசாமி என்று கூப்பிடாமல் சேர்வைன்னு எப்படி கூப்பிடலாம்.

எனக்கு எது கண்ணுல படுதோ..அதைதான்யா  சொல்லி கூப்பிடுவேன்.  நீ சேர்வை என்பதை அழி கருப்புசாமி மட்டும் தெரியும் அந்தப் பெயரைச் சொல்லி கூப்பிடுகிறேன்.என்றான் இரு சக்கர வாகன ஓட்டி

இவர்கள் சண்டையில் சிறிது கூட்டம் கூடியது . அந்த கூட்டத்தை கருப்புசாமி சேர்வையே கலைந்து போக செய்துவிட்டான். மற்றொரு இருசக்கர வாகன ஓட்டி அவர்களுக்கு அருகில் நின்றபோது கருப்புசாமி நகரச் சொன்னபோது.

வந்து நின்ற  இருசக்கர வாகன  ஓட்டி..நீ ரோட்ட மறித்து நின்றதால்தான் நிற்கிறேன். உங்க சண்டையை வேடிக்கை பார்க்க நிற்கவில்லை என்றான்.

கருப்புசாமி சேர்வை பிரச்சினையை கேட்ட ஒருவர் ஒருவர். சொன்னார்

நேதாஜி படம் போட்டால் சாதி அபிமானி

தேவர் படம் போட்டால் சாதி வெறிதானே!

அது மாதிரி தங்களுடைய வாகனங்களில் தங்களுடைய சாதிகளை  யார் எழுதியிருந்தாலும்  அது சாதி பெருமையில்லப்பா அது சாதி வெறிதானப்பா.... 

அத  அங்கிருந்து கேட்டவர்களுக்கு குப்பென வேர்த்து கொட்டியது.

சனி 08 2024

காசு வாங்கினேன் பையிலே போடல...

 

டேய் ....காசு வாங்கினேல  ...ஓட்டு போட்டீயா...?

எனக்கு ஓட்டு இல்லேன்னு சொல்லிட்டாங்கண்ணே....

ஓட்டு இல்லேண்ணா...காசு எதுக்குடா வாங்கினே..

நீங்கதானே்ணே ..காசு கொடுத்து ஓட்டு போடுன்னு சொன்னீங்க..

உனக்கு ஓட்டு இருக்குமுன்னு ஓட்டு  போடச் சொன்னோமடா..

நானும் ஓட்டு சாவடிக்கெல்லாம் போனண்ணே..

போனது சரிடா..ஓட்டு போடாமல வந்திருக்க... சரிசரி கொடுத்த காச கொடுடா


காசா... உங்கிட்ட வாங்கின காச பையில போடலன்ணே...

பின்ன கீழேயா போட்ட...........

அரசுக்கு செலுத்திட்டேண்ணே.....

என்னடா..சொல்ற..... தண்ணியடிச்சிட்டியா..??

அமாண்ணே...................

ஃஃஃஃஃஃஃஃஃ


செவ்வாய் 21 2024

முன்னே... பின்னே...




இரு சக்கர வாகனத்தை

இடைமறித்தவன் சொன்னான்

நான் யாரு தெரியுமா?


மறிக்கப்பட்டவன் சொன்னான்

தெரியாது சொன்னால்

தெரிந்து கொள்கிறேன் 


இந்த நக்கல் பேச்செல்லாம்

என்கிட்ட வச்சுக்ககூடாது.


தெரியாதவரை தெரிந்து

கொள்ள கேட்டால் 

நக்கலாக தெரியுதா??


இந்த ஏரியா ரவுடி

தெரிந்து கொள்


தெரிந்து கொண்டேன்

ஒரு சின்ன சந்தேகம்

அங்கிகாரம் பெற்ற

ரவுடியா? அங்கிகாரம்

பெறாத ரவுடியா???


அப்படின்னா....????????


ரவுடிங்கிற அது 

தெரியாதா...அதை முதலில்

தெரிந்து கொள்ளுங்கள்..





ஞாயிறு 05 2024

இனி நான்என்ன செய்ய....





 முன்பொரு காலத்தில்

ஓலைக்குடிசையில்

இயற்கையோடு இணைந்து

வாழ்ந்து  வந்தேன்..

இயற்கையோடு நான்

வாழ்வதை பிடிக்காத

சிலர் என் குடிசைக்கு

தீ வைத்தனர் பலமுறை

அவர்களிடமிருந்து தப்பிக்க

என் சக்திக்கு மீறி

ஓலை வீட்டிற்கு பதிலாக

மண்ணால் ஆன சுவரோடு

ஓடு வீடு போட்டேன்.

இயற்கையோ என்மீது

கோபம் கொண்டு  சூரியனின்

ஒளிக் கதிர் மூலம் என்னை

தாக்குகிறது இனி நான்

என்ன செய்ய.........

புதன் 01 2024

கதையும் காரணமும்..








ஒன்று-


 அன்புள்ள உறுப்பினர்களே!

இன்று கூடவிருந்த நமது கூட்டம் எதிர்பாராத சில காரணங்களால்  தள்ளி வைக்கப்படுகிறது.


இரண்டு-

அன்பிற்கினிய உறுப்பினர்களே! நண்பர்களே!

நாளை கூடவிருந்த கூட்டம் தவிர்க்க முடியாத சில வேலைகளால் நாளைய கூட்டம் ஒத்தி  வைக்கப்படுகிறது.


மூன்று-


தோழர்களே!

நமது சங்க தலைவரும், செயலாளரும் அவசரமாக ஃபாரீஸ் செல்வதால் நமது சங்க கூட்டம் ரத்து செய்யப்படுகிறது.


நான்கு-

????????

திங்கள் 29 2024

இந்த படம் ஒன்றே போதும்

 






நண்பர் கில்லரின் கோடாரி எதற்கு என்பதற்கும். மரங்களின் நம்பிக்கைக்கும் இந்த ஒரு படமே சான்று



























வெள்ளி 19 2024

இதுவும் கருத்து கணிப்புதான்...

 




டேய்.. ஓட்டு போட்டீயா..

போட்டேன்ணே..

சரி..  போ..


ஏய்..இங்க வா.

என்னான்ணே..

ஓட்டு போட்டியா..

ஓ.. போட்டேண்ணே..

எதுக்கு போட்ட..

சூரியனுக்குன்ணே..

சரி.போ..


அம்மா..தாயி ஓட்டு போட்டீயா..

ஓ..போட்டனே..

எதுக்கு போட்ட..

இரண்டு விரலை காட்டியது

எம்ஜிஆரும் ஜெவும் செத்துப் போனதுகூட தெரியல    .ம்ம்  போ..போ..


சார்..உங்கள் வாக்கை பதிவு செய்து விட்டீர்களா?

என் வாக்கை சனநாயகம் காக்க பதிவு செய்துவிட்டேன்.

நன்றி சார்..


தோழரே..தங்களின் கடமையை நிறைவேற்றிவிட்டீர்களா?

பாசிசத்தை வேரறுக்க, இந்து சனாதனத்தை அழிக்க என் கடமையை ஆற்றிவிட்டேன் தோழரே..

வெல்டன் தோழரே..


ஏப்பா..ஓட்டு போட்டீய்யா..

ஓட்டா..அப்படீன்னா..

சும்மா நடிக்காதிப்பா..

நடிப்பா..அப்படின்னா.

அய்யோ..போ..போ..போப்பா..


அய்யா.       .நீங்க 

சென்ற தடவை ஓட்டு  போட்டும் ஒன்னும் நடக்கல.. அதனால

அதனால..    

இந்ததடவ  போடல..

அய்யோ போடலையா.. நாசமா போச்சு..

நான் கடமையை செய்தாலும் உரிமையை நிலை நாட்டிானாலும்  நாசமா போனதை.போவதை யாராலும் தடுக்க முடியாது..


நண்பா..என்ன சொல்ற..

ஆமா.. . நமக்கு பிடிச்சங்களுக்கு ஓட்டு போட்டாலும்  அது மாறி  வாயால வடை சுட்டு பத்து இலட்சம் உடை உடுத்தும் ஏழைத்தாயின் மகன் கட்சிக்குதான் பதிவாகுது. எதுக்கு நம்ம கையால நம்ம கைண்ணை குத்தனும். தேர்தல் ஆணையமே ஒரு சார்பா இருக்குது . இதுல கடமை உரிமை ன்னு பிலாத்திகிட்டு.  கோபப்படாத நண்பா..


 நல்லவர்கள் வந்து நல்லாட்சி செய்யும்போது  நானும் எனது கடமையை உரிமையை நிலை நாட்டுகிறேன்.-நண்பா...


செவ்வாய் 09 2024

ஒரு நீண்ட மௌனம்...........

 







ஒரு வீட்டிற்கு 

வாசல் படி

 என்று இருந்தே

 ஆக வேண்டும்

அதே போல்

ஒவ்வொரு மனிதனுக்கும்

ஒரு வலி இருந்தே 

ஆக வேண்டும்

வலிப்போக்கனாகிய

எனக்கும் ஒரு

வலி இருக்கிறது

சொன்னால் வயதாகி

விட்டது அதனால்

புலம்புகிறேன் என்று

பலரும் பலவிதமாக

கதை அளப்பார்கள்

அந்தக் கதை

வேண்டாமே என்றுதான்

இந்த நீண்ட

மௌனம்

சனி 23 2024

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

 

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. -
யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்?
வன்னியர்கள், கவுண்டர்கள், தேவர்கள் பள்ளர்கள், பரையர்கள், நாடார், யாதவர்கள், ரெட்டியார், செட்டியார் என எல்லா சாதிகளும் ஆண்ட பரம்பரை னு சொல்லுகிறத பாத்தா சிரிப்புத்தான் வரும்.
நாட்ட ஆளுர ராஜாக்கள் உங்கள் பாட்டன் பொண்டாட்டி மேல ஆசை பட்டு, தூக்கிட்டு போயி மேட்டர் முடிச்சி குழந்தை பிறந்தா அது ஆண்ட பரம்பரை ஆயிருமா..? வெள்ளைக்காரன் விதைச்சிட்டு போனது கூட இன்னும் அவனோட கலருல சிவிர் சிவிர் னு ரெம்ப கிராம புறங்கள்ல பிறந்கிட்டு இருக்கு.. அதையெல்லாம் இங்கிலாந்து இளவரசர், இங்கிலாந்து ராணினு சொல்லிரலாமா..?

பொய்யான நிரூபிக்கபடாத, சாத்தியமில்லாத கதைகளை நம்பிக்கிட்டு, நாங்க ஆண்ட சாதி னு மார்தட்டுவதால என்ன பயன் இருக்கு..? சாதிவெறியை தூண்டி விட்டு ஒருத்தர ஒருத்தர் மாத்தி மாத்தி வெட்டிக்கிட்டு சாகுர நிலமைக்குத்தான் கொண்டுபோகுமே தவிற இந்த போலி பெருமையால என்ன கிடச்சிறபோகுது..?
நீங்க ஆண்ட பரம்பரை, பேண்ட பரம்பரை, மோண்ட பரம்பரை னு பேசுரதுக்கு முன்னாடி அவுங்க வரலாற தெரிஞ்சிட்டு பேசணும். எந்த மன்னனும் அவன் கல்யாணம் முடிக்கும் போது அவனுக்கு சமமான அவனோட குலத்து ராஜா மகளத்தான் காட்டுவானோ தவற தேவர் சாதி புள்ளையயோ, வன்னியர், கவுண்டர் சாதி புள்ளையையோ போயி கட்டுறது கிடையாது. அப்றம் எப்படி நீங்கயெல்லாம் ஆண்ட பரம்பரை..? இங்க ஆண்டவன் எல்லாம் ராஜாக்கள், ராஜபுத்திரர்கள் னு தான் தனியான வகுப்பா இருந்துருக்கானுக ஒழிய எவனும் வன்னியன், நாடார், தேவர் னு இருந்ததில்லை.

ஒரு நாட்ட ஆளுர மன்னன் வாரிசே இல்லாம இறந்துட்டானா, இந்த ராஜா பதவிக்கு யாரு வறதுன்னு யானைட்ட மாலையை கொடுத்து தெருவழியா நடக்கவிடுவானுக, யானையும் யார் கழுத்துல போடுதோ அவனுக ராஜா னு தமிழ் இலக்கியங்களுல கூட சொல்லப்பட்டுருக்கு. ஆனா உங்கள எல்லாம் இந்த தெருவுபக்கம் வரக்கூடாதுன்னு சாதி பேர சொல்லி தள்ளி வைச்சிருப்பானுக, யானையை சுத்தி பார்ப்பனன் தான் நிப்பான், இப்ப யானை யாரு மேல மாலைய போடும்..?

இந்த வன்னிய, கவுண்ட, படையாட்சி பயகளும் அந்த தெருபக்கம் போகமுடியாது, பள்ளர், பறையர், சக்கிலியர் தேவர் னு எவனும் போக முடியாது. வரலாற ரெம்ப எல்லாம் பொராட்ட வேண்டாம், கடைசியா ஒரு நூறு, நூத்தம்பது வருசத்த மட்டும் பொரட்டி பாத்தாலே உண்மை புரிஞ்சிரும். இப்ப இருக்குற தேவர் பயகள மேல்சாதிகாரங்க ஊருக்குள்ளயே விடமாட்டாங்க. அம்புட்டு பேரும் கள்ளபய, களவாணி பய னு எங்கேயும் சேத்துக்க மாட்டானுக. இந்த ஈன பொழப்பு பொலச்சவங்கதான் இப்ப ஆண்ட பரம்பரை னு கம்பு சுத்துராணுக..

அடுத்து வீர சத்திரிய வன்னிய பயகளோட யோக்கியம் பாப்போம். இப்பவரைக்கும் தலித் மக்களை இந்த எப்படி ஒதுக்கி வைச்சு, பல கொடுமைகளை செஞ்சி வருதோ அதே மாதிரி இந்த வன்னிய பயகளையும் இந்த சமுதாயம் ஒதுக்கி வைச்சிட்டு இருந்துச்சி,

நாயுடு, முதலியார், செட்டியார், பிள்ளை, உடையார் போன்ற பல பல ஆதிக்க ஜாதிகாரங்க, வன்னிய உழைக்கும் மக்களை ‘பள்ளிப் பய..’ னு இப்ப வரைக்கும் இழிவாத்தான் பேசிட்டு இருக்கானுக. இதெல்லாம் வன்னியர்களுக்கு தெரியாதா..? வன்னியர்னா தொடுற பறையர் னு இப்ப வரைக்கும் அவுங்களையும் இழிவாதான் ஆதிக்க சாதிகள் சொல்லிட்டு வராங்க. இப்பயும் இது கிராம புறங்களில் வழக்கத்தில் இருக்கு.. இந்த தாழ்த்தப்பட்ட வன்னியர்கள் இப்போ ஆண்ட பரம்பரை னு கூவுனா.., எப்படி சிரிக்காம இருக்க முடியும்.

இதே வன்னியங்க ஆதிக்க சாதி மக்களுக்கு எதிரா போராடி இருக்கானுக, ஆதிக்கசாதிய எதிர்த்து ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமா இருந்திருக்காணுக. பிறகு ஆங்கிலயர்கள் பல்வேறு நாடுகளுக்கு தேயிலை தோட்ட தொழிலாளர்களாக லட்சக்கணக்கில அனுப்பட்டவர்கள். தென்னாப்ரிக்கவிற்க்கு தோட்ட தொழிலாளர்களாக அழைத்து செல்லப்பட்ட பல லட்சம் அடிமைகளுள் பாதிக்கு மேல வன்னியர்கள். அங்க அடிமையா கஷ்டப்படுகிறானுக, அவனுகயெல்லாம் திரும்ப நாட்டுக்கு அனுப்பி வைக்கணும்னு இங்க இருக்குற வன்னியர் எல்லாம் சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிரா உண்ணா விரதம் இருந்திருக்காணுக. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிச்சி ஒரு பார்ப்பன கவிஞன் பத்திரிக்கைல செய்தி எழுதிருக்கான். ஆதாரம் எல்லாம் இருக்கு. இந்த லட்சணத்துல அவிங்க புதுசா ஆண்ட பரம்பரை னு கதையவுட்டா.. சிரிக்காம எப்பிடி இருக்க முடியும். முதல ஒழுகுற வீட்டுல ஓடு மாத்த வக்கிருக்கா..? இதுல எதுக்கு போலி பெருமை..
அடுத்து பள்ளர்கள் இவனுகளோட ஆண்ட புராணம் எப்ப ஆரம்பிக்கப்பட்டதுனா.. ஆரம்பத்தில தீவிர தலித் அரசியல் பேசிட்டு இருந்த குருப்புல, ஒரு கோஷ்டி இது சரிப்படாது னு மள்ளர் மீட்பு களம் ங்கிற பேர்ல மள்ளர் குல வரலாறு னு பிட் நோட்டீஸ் குடுக்க ஆரம்பிச்சது. பள்ளர் எல்லாம் மள்ளர் னு சொன்னவங்க 2007ல அதையும் பட்டி டிங்கரிங் பாத்து தேவேந்திர குல வேளாளர் னு சோழர்களோட லிங்க் பண்ணுனதும் இல்லாம, ரிக் வேதத்தில சொல்ல படுற இந்திரனோட வாரிசுக சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. இவனுக வரலாற தேட ரிக் வேதம் வரைக்கு போக வேண்டாம் .
1937 ஆம் வருஷத்தில தஞ்சை காங்கிரஸ் 3வது அரசியல் மாநாடு நடந்துச்சி.
மாநாட்டிக்கு முன்னாடி சமபந்தி விருந்தும் நடந்துச்சி. சாதி, மதம் பேதமின்றி அனைவரும் உணவருந்தலாம் காங்கிரஸ் கோஷ்டி மைக்க புடிச்சி கூவிட்டு இருந்துச்சி. அங்க வேடிக்கை பார்க்க வந்த மூன்று பள்ளர் தொழிலாளிக பயத்துடன் உக்காந்து சாப்பிட்டு இருந்தாங்க. திடீர்னு சபாபதி உடையார் என்ற காங்கிரஸ் பிரமுகர் அவனுக தலைய பிடிச்சி இழுத்து போட்டு " ஏண்டா பள்ளப்பயலுகளா... உங்களுக்கு இவ்வளவு திமிர் வந்திருச்சா... இந்த கூட்டத்தில சரிசமமா சாப்புடலாமா.. னு, பக்கத்தில் கிடந்த சவுக்கு கட்டையை எடுத்து மூணு பேரையும் வெளுத்துபுட்டான். .
(28.12.1937) மறுநாள் காலை பண்ணையில் தலித் மக்கள் அறுவடை வேலை செய்துகொண்டிருந்தாங்க. அப்போது அங்கு வந்த பண்ணையாரின் ஏஜெண்டான கிருஷ்ணமூர்த்தி அய்யங்கார் " மாநாட்டு கூட்டத்தில் நேற்று சாப்பிட்டது யார்? அவர்களை இங்கு கொண்டு வாருங்கள் " என்று உத்தரவிட்டான்.
முதலில் தேவசகாயம் என்ற தலித் நபரை கூட்டிப்போனார்கள். அப்போது அய்யர் அவனை சும்மா இழுத்துட்டு வருவியா..? அந்த படுவாவ அடி என்று ஆணையிட்டார். பின்பு அந்த ஊரின் தலையாரி மாணிக்கம் என்பவர் அந்த தேவசகாயத்தை விளாமரத்தில் கட்டி வெளுத்து, மூணு பேருக்கும் மொட்டை போட்டு ஒடுங்கடா பள்ள நாயகளா னு விரட்டி புட்டாங்க
இந்த வழக்க பெரியார்தான் நடத்துராரு இப்படி பல சாமுதாயதால் ஒடுக்கப்பட்டு வந்த பள்ளர்கள் ஆண்ட பரம்பரை னு பேசுரத பாத்தா வேடிக்கையாதான் இருக்கு.

அடுத்து சாம்ப குல வீர பறைய வெள்ளார்.. இவங்க பள்ளர் விடுற கதைக்கு நாமளும் பங்குக்கு விடணுமுன்னு ஒரு அஞ்சி வருசாமா அம்பேத்கார தூர தூக்கி போட்டு இந்துத்துவால இறங்கிட்டாங்க. ஆனா இவனுக விடுற கதை இருக்கே.. மத்தவன் எல்லாம் ஆண்ட பரம்பரை னு தான் சொல்லிட்டு திரியூராணுக. ஆனா இவனுங்க சிவனும் பார்வதியும் பறையங்க னு நாங்கெல்லாம் சிவனோட பரம்பரை னு உடுராணுக கத கதையா.. சிவனோட ஆகம கோவிலுக்குள்ள நான் வீர சைவபறையன்டா என்று போனா, எவனாவது உள்ளவிடுவானா.. தைரியம் இருந்தா ஆண்ட பெருமை பேசிட்டு சிவன் கோவில் கருவறைக்குள் போயி சிலையை தொட்டுட்டு வந்து சொல்லு வீர பறையர் வெள்ளார் னு..
அடுத்து வீர சத்திரிய வம்ச நாடார்கள்... இவனுங்க இப்ப சர்டிபிகேட்லயே மாத்த ஆரம்பிட்டாங்க, ஆனா இவனுங்க எங்க ஆண்டாங்க னு தான் தெரியல. ஒரு வேல சேரநாட்ட ஆண்டுருப்பங்களோ னு கேரளா சைடு போயி பாத்தா... 200 வருசமா நாடார் குடும்ப பொண்ணுங்க மேலாடை போடுறதுக்காக போராட்டிட்டு இருந்துருக்கான்க, ஒரு வரலாற்று காலமா பொண்ணுங்க மார்ல சேலையும், ஆம்பலைகளுக்கு சட்டையும் போடவிடாம கேரள நம்பூதிரி பார்ப்பனன் கொடுமையா பண்ணிட்டு இருந்திருக்காங்க. அதுக்கு பயந்துபோன சத்திரிய நாட்டார் வம்சத்தினர் தமிழ்நாட்டு பக்கம் போனா கொஞ்சம் மரியாதையா இருக்கலாம் தெரிச்சி ஓடி வந்திருக்காணுக. இந்த காங்கிரஸ் புண்ணியத்தால மல்லியக்கட்டை, மாவு ஏவாரம் னு பாத்து வளர்ந்து வந்திருக்காங்க. அடுத்தவங்களுக்கு முன்மாதிரியா இருக்கவேண்டியங்க, ஆண்ட பரம்பரை மோண்ட பரம்பரை னு பேசிட்டு திரியூராணுக.
அடுத்து கவுண்டனுக.. இவனுக கொங்குநாட்ட ஆண்டவங்க நங்கதாண்டா னு கூவிட்டு திரியூராணுக. அதாவது எவன் எந்த ஆண்ட பரம்பரையா இருந்துட்டு போ.. ஆனா கொங்கு நாட்டு பக்கம் மட்டும் வரலாறு தேடி வந்துராதீக னு ஈரோடு, பழனி, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி ஒரு எல்லகோடு போடுறான். அப்பிடி இவனுகளோட ஆண்ட வரலாறு என்னன்னா.. இவனுங்க வீட்டு பொண்ணுங்கள கோவிலுக்கு தேவியாள் வேலைக்கு நேந்து விடுறது. வரலாற பொரட்டி பாத்தா, ஐயர்களுக்கு இவனுகதான் வெப்பன் சப்பளையரு. ஆதாவது தேவதாசிகளாக பணிவிடை செய்ய அனுப்புறது. இப்ப நிந்தியானந்தாவுக்கு சேர்த்து விடுற மாதிரி அந்த காலத்து ஆன்மீக பணிகளுக்கு கவுண்டர் இன பெண்களும் போயிருக்காங்க. இது பேக்கரி டீலிங் மாதிரி இருந்தாலும், எவனும் எங்கேயும் ஆளல, சும்மா நாமளும் சொல்லுவோம் னு பொய்ய பரப்பிட்டு திரியூராணுக.

பகடைக.... இவனுங்க இப்பதான் தேட ஆரம்பிச்சிட்டு இருக்கானுக. "இருக்குற சாதிகளுக்கு எல்லாம் சாணி மூத்திரம் அல்லுறோமே.. இந்த வாழ்வியலை மாத்துற வழி எது.? னு யோசிக்காம, எங்க பாட்டன் எங்க ஆண்டுருப்பான், எந்த சந்துல மோண்டுருப்பான் னு கிளற ஆரம்பிச்சுட்டாங்க. இதுல ஒரு கோஷ்டி ஒண்டிவீரன்க்கு பெருசா மணிமண்டபம் கவர்மெண்ட் கட்டணுமுன்னு இதை வச்சி மக்கள ஏமாத்தி அரசியல் பேசிட்டு தெரியுது. ஒண்டிவீரன் அடிமை வேல தானே செஞ்சான் அதுக்கு எதுக்கு மணிமண்டம். இந்த மாதிரி தான் பகடைக அடிமையா விசுவாசமா வேல செய்யணும் னு காட்டவா..?
ஆண்ட பரம்பரை பற்றி பேசும் எந்த தேவனோ, கவுண்டனோ, பள்ளனோ, பறையனோ, சக்கிலியனோ, வன்னியனோ, நாடாரோ பார்ப்பனன் வகுத்த சாதிக்குள்ளயே முண்டியடிச்சி மேல போகத்தான் பாக்குறானோ தவிற எவனும் சாதிய விட்டு வெளிய வர சிந்திக்கிறதேயில்ல. இதெல்லாம் ஒருத்தன ஒருத்தன் அடிச்சிக்கிட்டு சாகத்தானே.. சமத்துவமா வாழுறதுக்கு இவனுககிட்ட என்ன கருத்து இருக்கு..?

வன்னியர் பொண்ண காதலிச்சி கல்யாணம் முடிச்சா பறையன வெட்ட வரான். கேட்டா சாதி கவுரவம் குறைச்சிரும் னு சொல்றான். வன்னியன் ஒரு செட்டியார் பெண்ணையோ, கவுண்ட பெண்ணையோ காதலிச்சி கல்யாணம் முடிச்சா தலைய சொறிஞ்சி சிரிசிக்கிட்டு ஏத்துக்கிறான். இதுல மட்டும் சாதி கவுரவம் போயிடாதா..?

ஒரு பறையர்.. பள்ளர், சக்கிலிய பொண்ண திருமணம் செஞ்சா குறைச்சலா நினைக்கிறான். அதே பறையன் வன்னியன், பார்ப்பன பொண்ண முடிச்சா பெருமையா நினைக்கிறான். இந்த சாதி என்ற அமைப்புதானே இவர்கள பெருமையா நினைக்க தூண்டுது? ஆண்ட பெருமை பேச தூண்டுது?

இப்படி மானமில்லாம அடுத்தவன் காலபுடிச்சிட்டு, அவனுக்கு கீழ ஒரு சாதியா வாழனுமா..? இதுக்கு நீங்கெல்லாம் செத்துறலாம். எவ்வளவு தூரம் சாதிக்குள்ள போட்டி போட்டு முண்டியடிச்சி மேல போக நினைச்சாலும், எட்ச்ல பார்ப்பனன் இருப்பான். உங்கள அவனுக்கு கீழ வச்சியே விளையாட்டு காட்டுவான்.

மனுசனா ஒண்ணா கூடி வாழனுமுன்னா எல்லாம் ஒண்ணா சேர்ந்து பூணூல வெட்டுங்க. இல்ல.., நீங்கதாண்டா ஒருத்தன ஒருத்தன் வெட்டிக்கிட்டு சாகனும். ஏற்கனவே இந்த வேலைய பாக்க RSS காரன் உள்ள வந்துட்டான், அவனுக கூட சேந்து சங்கியா மாறி வாழ்க்கைய நாசமாக்கிகாதீங்க, சாதி பெருமை பேசுறத விட்டுட்டு கல்வி, பொருளாதாரம் னு வாழ்க்கையில முன்னேற பாருங்க..

திங்கள் 11 2024

“மார்ச் 8 உலக மகளிர் தினம்-”

 

                                                            கிளாரா ஜெட்கின்.






உண்மையான ஜனநாயகம், சமத்துவம் நோக்கி மனிதகுலத்தை முன்னெடுத்துச் செல்லும் இலட்சியத்தோடு கம்யூனிஸ்ட்கள் பாசிச எதிர்ப்பியக்கத்தில் செயல்பட்டு வந்தனர். இந்த போராட்டத்தில் முக்கியமான பங்கினை வகித்தவர், கிளாரா ஜெட்கின்.


ரீச்டாக் என்று அழைக்கப்படும் ஜெர்மானிய பாராளுமன்றத்திற்கு 1920-ஆம் ஆண்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிளாரா ஜெட்கின். நாஜிகள் வெற்றி பெற்றிருந்த நிலையில் 1932 ஆகஸ்ட் 30 அன்று முதல் கூட்டம் நடந்தது. உடல்நலம் பாதிக்கப்பட்டு மாஸ்கோவில் குடியிருந்த 75- வயது கிளாரா ஜெட்கின் பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பெர்லின் வந்தார்.


அவர் சபைக்கு வந்தால் அவரை கொலை செய்து விடுவோம் என்று நாஜிகள் மிரட்டல் விடுத்திருந்தனர்.அதற்கெல்லாம் அஞ்சிடாமல் அவர் சபைக்கு வந்தார். சபையின் மூத்த உறுப்பினர் என்ற வகையில் சபையை வழிநடத்தும் பொறுப்பு அவருக்குக் கிட்டியது. தனது தொடக்க உரையில் அவர் பாசிசத்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.”பாசிச எதிர்ப்புக் கூட்டணி” அமைக்க அறைகூவல் விடுத்தார்.


நிறைவாக அவர் விடுத்த வேண்டுகோள் இது:


“இதே ரீச்டாக்கில்,இதன் மூத்த உறுப்பினர் என்ற முறையில்,சோவியத் (சோசலிச) ஜெர்மனியின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தை துவக்கி வைப்பேன்.அத்தகு சந்தோஷம் எனக்கு கிட்டிடும் என்று நம்புகிறேன்”.


மிக பாதகமான,மோசமான சூழலில் கூட சோசலிச மாற்றத்தின் மீதான உறுதியான நம்பிக்கையை அவர் கைவிடவில்லை. ஹிட்லர் அதிபராக பதவி வகித்த பயங்கரமான சூழலில், அவரது மனித விரோத பாசிச சித்தாந்தத்தை துணிவுடன் பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்தியவர், கிளாரா ஜெட்கின்


1857 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாள் ஜெர்மனியில் சாக்சனியில் கிளாரா ஜெட்கின் பிறந்தார். தாராள உள்ளம் கொண்ட தந்தையார் அவருக்குக் கல்வி கற்பித்தார். தொழிலாளி வர்க்க மக்களிடைக் கல்விப் பணி செய்த முதல் ஜெர்மனியப் பெண்மணி இவரே. மார்க்சியத்தால் ஈர்க்கப் பெற்ற தோழர், பிரடெரிக் ஏங்கெல்சின் நெருங்கிய, நம்பிக்கைக்குரிய நண்பரானார்.



ஆர்வம், துணிச்சல், அர்ப்பணிப்பு மனப்பான்மை மிக்கவர் என்று அனைவராலும் பாராட்டப் பெற்றவர். இவருடைய முயற்சி, பணி இவரைச் சர்வதேச சோஷலிஸ்ட் மகளிர் இயக்கத்தில் பணி செய்யத் தூண்டின. அவர் அவ்வியக்க மாநாட்டில் நியூயார்க் மகளிர் எழுச்சி நினைவாக மார்ச் 8 உலக மகளிர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். முழுமனதாக எதிர்ப்பின்றிப் பரிந்துரை ஏற்கப்பட்டது. அவர் கண்ட பெண்கள் இயக்கத்தில் 5 இலட்சம் உறுப்பினர்கள் இருந்ததாகக் கணிக்கப்பட்டது.


1848 ஆம் ஆண்டு பெர்லினில் வெடித்தெழுந்த தொழிலாளர் புரட்சியில் பலர் மடிந்தனர். மார்ச் 18 அவர்களுடைய நினைவு தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என முன் மொழிந்தவர் புரட்சிப் பெண்ணான கிளாரா ஜெட்கின். இவரே 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தொழிலாளி வர்க்க சோஷலிச இயக்கத்தின் ஈடிணையற்ற மாதர் தலைவியாக விளங்கியவர்.



முதன் முதலில் 1893 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பெண்களுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. முதலாம் உலகப் போருக்குப் பிறகுதான் பெண்களுக்குத் தேர்தலில் வாக்களிக்க உரிமையும் வழங்கப்பட்டது. பாராளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். இவை கிளாரா ஜெட்கின் கண்ட இயக்கத்தின் பலன்கள்.


பெண், மனைவியாகவோ, தாயாகவோ பிறரைச் சார்ந்து வாழ்க்கை நடத்துபவள் என்னும் இழி நிலைமை மாறவேண்டும் என்றார் கிளாரா. ஆண்களுக்குச் சரிநிகராக வேலை செய்து கூலிபெறும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தனித்து நின்று எல்லா வழிகளிலும் சிறப்பாக வாழ வேண்டும் என்பது அவருடைய பல நோக்கங்களில் ஒன்று. இது, இன்று மாதர் பொருளாதார சுதந்திரம் பெற்று எவரையும் சாராது நம்பாது தனித்து நின்று வாழ முடியும் அதற்குப் பொருளாதார நிலை உறுதியாக அமைய வேண்டும் என்னும் முழக்கத்தில் பிரதிபலிப்பது காணலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் மேல் தட்டு வர்க்கப் பெண்டிருடனோ அவர் இயக்கத்துடனோ தொடர்பு கொள்ளக் கூடாது என்பது கிளாராவின் உறுதியான கருத்து. குழந்தை வளர்ப்பும், குடும்பப் பராமரிப்பும் சமுதாயக் கடமைகளாக ஆக்கப்படவேண்டும். தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு ஆள்பட்டவையாக அவை இருத்தலாகாது என்று கருதினார். அவர் காலத்திலேயே அவரோடு சேர்ந்து பணியாற்றியவர்கள் பெண்கள் உழைப்பில் ஈடுபட்டால் ஆண் தொழிலாளர்கள் உரிமைகளும், ஊதியமும் பறிக்கப்படும் அல்லது பாதிக்கப்படும் என்று இவரோடு வாதாடினார்கள். இவர்களைத் தம் வாதத்திறமையால் வென்றார் ஜெட்கின்.



பாசிச எதிர்ப்பு போராட்டத்தில் உழைக்கும் வர்க்க ஒற்றுமை, உயிர்நாடியானது.இதுவே பாசிசத்தை முறியடிக்கும் பலமான சக்தியாகத் திகழும்.இதனை உருவாக்கிட, மனச்சோர்வுக்கு இடங்கொடுக்காத வகையில் தொடர்ச்சியான முயற்சிகள் வேண்டும்.


“ஒவ்வொரு தொழிலாளியிடமும் உயர்ந்த வர்க்க உணர்வினை அவரது சிந்தனையில் சிறிதுசிறிதாக ஏற்படுத்த வேண்டும். இந்தப் பணியை நாம் செய்யும்போதே பாசிசத்தை இராணுவரீதியாக தூக்கி எரிந்து வெற்றி காண்பதற்கான தயாரிப்பும் நடைபெறுகிறது.”என்றார் கிளாரா


லெனினைச் சந்தித்த போது அவர், “கலை மக்களுக்குச் சொந்தமானது. உழைக்கும் மக்களிடை ஆழ வேர் விட்டிருப்பது; அவர்களை ஈர்ப்பது; அவர்களால் நன்கு உணரப் பெற்று உவந்து வரவேற்கப்படுவது. இலக்கியம் என்பது உழைப்பாளர் உள்ளங்களிலிருந்து கிளர்ந்து பீறிட்டெழும் உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பது அவர்களுடைய வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருப்பதோடு அதனை உயர்த்துவதும் ஆகும்” என்று சொல்லியதாகக் கூறுகிறார்.


ஹிட்லர் ஜெர்மனியில் ஆட்சிக்கு வருவதற்கு முன் ஜெர்மனியில் பாசிசம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. உழைப்பாளி வர்க்கம் கொடிய அடக்குமுறைக்கு ஆளாகும் நிலை ஏற்படும் என்று எச்சரித்த கிளாரா ஜெட்கின், எச்சரித்த சில நாட்களிலேயே 1933 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 20 ஆம் நாளன்று மாஸ்கோவில் காலமானார்.


பாசிசத்தை வீழ்த்தி வெற்றி காணும் பணியை ‘நுண்ணிய’ மட்டத்திலிருந்து துவங்க வேண்டுமென்பது கிளாராவின் வழிகாட்டுதல். பாசிசத்தை வீழ்த்துவதற்கும்,சோசலிசத்தை நோக்கி முன்னேறுவதற்கும் இது உதவிடும். உலகினைப் பாதுகாக்கும் போரில் ஈடுபட்ட கிளாரா ஜெட்கின் போன்ற தீரமிக்க கம்யூனிஸ்ட்களின் பங்கும் வரலாற்றில் நீக்கமற நிறைந்திருக்கும்.



“முதலாளித்துவத்தின் ஜனநாயகம் என்பது ஆளும் முதலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமே. சுரண்டல் தன்மையுள்ள, அடிமைப்படுத்தும் முதலாளித்துவ சமூகத்தில் நடைபெறும் எல்லாவிதமான சீர்திருத்தங்களும் வெறும் ஒட்டு வேலைகள்தான் ”


 


Tags:clara zetkinகிளாரா ஜெட்கின்சோவியத்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...